இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மெய்நிகர் உலகில் அடையாளங்கள்

ச. சாசலின் பிரிசில்டா


முன்னுரை

இலக்கியங்களிலும் புராணங்களிலும் பலவகை உலகங்கள் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் நாம் உலகம் தவிர வேறு எவற்றிலும் புலன் உணர்வுகளோடு வாழ இயலும் என்று அறிவியல் அடிப்படையிலும் சான்றுகள் அடிப்படையிலும் நிருவப்படவில்லை. ஆயின் இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதர்களுக்கு வேறொரு உலகத்தைக் கட்டமைத்துத் தந்திருக்கிறது. இதில் வசதியான செய்தியாதெனில் ஞானிகளோ அறிவியல் விஞ்ஞானிகளோ மட்டுமல்லாது சாதாரண மனிதர்கள் யாவரும் அவ்வுலகில் உலாவலாம், தம் இருத்தலைப் பதிவு செய்யலாம், பிறக்கு அறிவிக்கலாம், பிறறோடு தொடர்பாடலாம். அதுதான் தகவல் தொழில்நுட்பம் நமக்கு வழங்கியிருக்கும் கொடையான மெய்நிகர் உலகம் (Virtuval World) ஆகும். கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா “மெய்நிகர் உலகம்” (Virtual World) என்பது உலகில் உள்ள மக்கள் பலரும் கணினி அடிப்படையிலான ஒப்புச்செயலாக்கச் சூழலில் ஒருவரோடு ஒருவர் செயல்புரிதல் ஆகும்” என்று தெரிவிக்கிறது. இந்த உலகமானது மனிதர்களுக்குக் கிடைத்த வரமா? சாபமா? என பலதரப்பிலும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க, இவ்வாய்வுக் கட்டுரையில் மெய்நிகர் உலகில் மனிதனின் அடையாளங்கள் குறித்து விவரங்களை முன் வைக்கின்றது.

அடையாளங்கள்

அடையாளங்கள் என்பதைத் தனிமனித அடையாளம், சமூக அடையாளம் என இரு வகையாகக் கொள்ளலாம். மெய்உலகில் மனிதர்கள் அல்லது இனக்குழுக்கள் தம் அடையாளங்களை வழக்காறுகள், பண்பாடு, கலாச்சாரம் என கட்டமைத்திருக்கின்றனர். அதனைத் தலைமுறை தலைமுறையாக எடுத்துச்செல்ல, இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலிய எழுத்து மொழி ஊடகங்களையும், நாட்டுப்புற நம்பிக்கைகள், கதையாடல்கள், பாடல்கள் என பேச்சு மொழி ஊடகங்களையும் அன்றாட வாழ்வியலில் மதம் சார்ந்த நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களையும் துணைகொண்டு பாதுகாத்திருக்கிறார்கள். மெய்நிகர் உலகில் எழுத்துமொழி, பேச்சுமொழி காட்சிப்பதிவுகள், நகைமொழிகள் முதலியவற்றின் வழியாக மனிதர்கள் தங்கள் தொடர்பாடலை நிகழ்த்தி அடையாளங்களைப் பதிவு செய்கின்றனர். கட்டற்றக்களைக்களஞ்சியமான விக்கிப்பீடியா “நகைமுகம் அல்லது புன்னகை தவழும் முகம் அல்லது ஸ்மைலி (☺/☻) எனப்படுவது, மனித முகத்தின் அழகிய புன்னகையைக் குறிக்கப் பயன்படுகின்ற உணர்ச்சித்திரம் (emoticon) ஆகும். இது பொதுவாக, மஞ்சள் நிறமுடைய (வேறு பல நிறங்களும் பயன்படுத்தப்படுவதுண்டு) வட்டத்தில் (அல்லது கோளத்தில்) கண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கரிய நிறப் புள்ளிகளும் புன்னகை பூக்கும் வாயைக் குறிப்பதற்கு வளைந்த வடிவமுடைய கரிய நிற வளைகோடொன்றும் அமைந்த நிலையில் காணப்படும். மேலும், ஸ்மைலி என்ற சொல்லே சிலவேளைகளில், அனைத்துவிதமான உணர்ச்சித்திரங்களையும் (emoticon) குறிக்கப் பயன்படுத்தப்படுவதுண்டு” என்று விளக்குகின்றது.



மெய்நிகர் உலகில் செல்லப்பயன்படும் கருவிகள்

தற்காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் மெய்நிகர் உலகம் செல்லப்பயன்படும் கருவிகளை மனிதர்கள் தங்கள் கரங்களிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அதாவது கணினி மற்றும் அலைபேசி. கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச்சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன” என்று தமிழ் விக்கிப்பீடியாவில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இந்தக் கருவிகளோடு மெய்நிகர் உலகமான இணைய வெளியை இணைத்துக் கொண்டால் போதுமானது. இக்கட்டுரையில் கணினிகொண்டு மெய்நிகர் உலகம் செல்லும் முறைமட்டுமே பெரும்பாலும் விவரிக்கப்படுகின்றது.

மெய்நிகர் உலகின் உலாவல் முறைகள்

இணையம் பயன்படுத்துவதற்கான வசதிகளைப் பயன்படுத்தி இணைய தளங்கள், இணைய முகவரிகளைக் கண்டறிய உதவும் தேடுபொறிகள் இவற்றின் வழியாக மனிதர்கள் மெய்நிகர் உலகில் உலாவலைச் செய்யலாம். இணையதளங்கள் அதன் அமைப்பு, பயன்படுதன்மை இதனைக் கொண்டு சில வகையாகப் பிரிக்கின்றனர். அவை, சமூக வலைத்தளங்கள், வணிக வலைத்தளங்கள், வலைப்பூக்கள், விளையாட்டுத் தளங்கள், செய்தி ஊடகத் தளங்கள், பொழுதுபோக்குத் தளங்கள், கல்வித்தளங்கள், வேலைவாய்ப்புத் தளங்கள், துறைசார்ந்த தளங்கள், நிறுவனம் சார்ந்த தளங்கள் எனப் பலவகைபடும்.



மொழி அடையாளங்கள்

மெய்நிகர் உலகின் கருத்தாடலில் இயற்கை மொழியின் எழுத்துமொழி பெரும்பங்கை வகிக்ன்றது. அதன்பின் புகைப்படங்கள், காணொலிகள் இறுதியாக மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நகைமுகங்கள் பங்குவகிக்கின்றன. ஆகவே, இயற்கை மொழியை மெய்நிகர் உலகில் கொண்டுசெல்லவேண்டியது மனிதர்களுக்கு முதன்மைத் தேவையாகிறது. ஆகவே, மனிதக்குழுக்கள் தங்கள் இயற்கைமொழியை பொறிமொழி வழியாக உட்செலுத்தி மெய்நிகர் உலகில் தொடர்பாடலை நிகழ்த்துகின்றனர். உலகின் பல்வேறு மொழிக்குழுவினரும் தங்கள் மொழியை மெய்நிகர் உலகில் கொண்டுசெல்ல தொடர்ந்து முயன்றதன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களும் இறுதியாக சிக்கல் தீர்வாக மொழியின் ஒருங்குறி அமைப்புமுறையும் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ் மொழியிலும் ஒருங்குறியீட்டுத் தன்மை பின்பற்றப் பின்பே சிக்கல் தீர்ந்தது. “தொடக்கத்தில், தமிழ் இணையத் தளங்களில் பல்வேறு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததில், பல்வேறு சிக்கல்கள் இருந்தன. எழுத்துருவைக் கட்டாயமாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது இணையதளம் இயக்கு நேர எழுத்துரு (Dynamic Font) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதிலுள்ள மிகப் பெரிய சிக்கல், இயக்குநேர எழுத்துரு பயன்படுத்தப்பட்ட கோப்புகளை தொடர்பிலா (Offline) முறையில் படிக்க முடியாது. இதனால், தமிழ் இணையப் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடும் படியாக இல்லை. இந்த தருணத்தில் உலக நாடுகள் மொழிகளுக்கெல்லாம் கணனியில் ஒரு பொதுவான வடிவத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் உருவானது. பிரசித்தி பெற்ற உலக மொழிகளின் அட்டவணை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். அதில், அம்மொழிகளுக்கென, பிரத்தியேகமாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதில் தமிழுக்கென குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கியுள்ளனர். அதுதான் ஒருங்குறி எழுத்து(Unicode). இதனால் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்கிற அவசியமில்லாமல் போனது. எல்லா இயங்குதளங்களிலும் (Operating System), எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாக படிக்கவும் முடிகிறது. (1) இவ்வாறு உலக மொழியினங்கள் அனைத்தும் சேர்ந்து முயன்று மெய்நிகர் உலகில் தங்களுக்கான மொழி அடையாளத்திற்குத் தீர்வு கண்டுள்ளன.

ஆனால், “கணினித் தொழில் நுட்பம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட காரணத்தால் கணினியின் செயல்பாட்டை அதன் நுணுக்கத்தை முழுமையாக உணராதவர்கள் எளிதில் பயன்படுத்தக் கணினிக்கென ஒரு கணினி மொழி ரோம வரிவடிவில் உருவாக்கப்பட்டு ரோம வரிவடிவில் அமைந்த மொழிகளில் உள்ள வளங்களை உள்ளீடு செய்யவும் செயலாற்றவும் வெளியிடவும் ஆங்கிலத்தை ஒத்த கணினி மொழி ஒரு சில இலக்கண விதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுக் கணினிக்குக் கட்டளையிடச் செயற்கை மொழிகளை உருவாக்கி மென்பொருள் உருவாக்கப் பயன்படுத்திய காரணத்தால் தொடக்கத்தில் இருந்து அண்மைக்காலம் வரை கணினி செயல்பட ரோம வரிவடிவமே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஆங்கில மொழி போல் தோற்றம் கொண்டு ஆங்கில இலக்கண விதிகள் சிலவற்றின் அடிப்படையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதால் கணினி ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்களால் பயன்படுத்தப்பட்டது.” (2)



தற்சமயம் உலகின் பெரும்பான்மை மொழிகள் ஆங்கிலமொழிப் பின்புலத்தில் தங்கள் மொழியை இடைமுகப்புமொழியாகக்(Interface Language) கொண்டு செயல்படுகின்றன. செம்மொழியான தமிழ்மொழிக்கும் இந்த அவலநிலை என்னும் பொழுது மிகவும் வருந்தத்தக்கது. ஆயினும், “தங்களின் மொழியின் சிறப்பை அறிந்த பிரெஞ்சு அறிவுலகமும் புலம் பெயர்ந்த சீனர்களும் பொதுவுடமை ஆட்சியில் இருந்த சோவியத் ரஷ்யாவும் தங்களுக்கென ஆங்கிலம் அல்லாத கணினிக்கான வரிவடிவை உருவாக்கிக் கொண்டது கணினி வரலாறு சுட்டிக்காட்டும் பாடம். அதன் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கணினிக்கான வளங்களை ஆங்கிலம் அல்லாத மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்தனர்” (3)

மேற்கண்ட தகவலிலிருந்து மெய்நிகர் உலகின் மிகப்பெரும் அடையாளம் மொழி என்பதை உணரவேன்டும்.



தனிமனித அடையாளங்கள்

தனிமனிதர்கள் தங்கள் தாய்மொழியைக்கொண்டு உலாவலை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தமையால் அதிகம் உள்நுழையத் தொடங்கினர். அவர்களின் வரவினை தக்கவைக்கும் விதமாக சமூக வலைத்தளங்கள் கட்டமைக்கப்பட்டன. சமூக வலைத்தளங்கள் உலக அளவில் வரும் இத் தனிநபர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகப் பாவித்து, அவர்களைத் தங்கள் தளத்தின் வணிக விளம்பரங்களைப் பார்வையிட வைத்தல் வழியாகத் தங்கள் பொருளீட்டலைச் செய்துகொள்கின்றன. சான்றாக இன்றைக்குத் தமிழகச் சூழலில் பிரபலமாக இருக்கும் முகநூலினைக் குறிப்பிடலாம். இவ்வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும், வரவினை அதிகப்படுத்தவும் தங்கள் தளத்தில் இலவசமாக கணக்கினைத் தொடங்க அனுமதிக்கின்றன. மேலும், தனிநபர் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு அது காலக்கோடு என வழங்கப்படுகின்றது.

இது தவிர, தங்கள் விருப்பம்போல் ஒரு புதிய பக்கத்தினைத் தொடங்கவும் அனுமதி வழங்கப்படுகின்றது. இது ஒரு தனிநபரின் வலைப்பூபோல முகநூலில் செயல்படுகின்றது. மேலும், தங்கள் சிந்தனை ஒத்த கருத்தாடலை நிகழ்த்தும் குழுவை உருவாக்கவும் அதனை நிர்வகிக்கவும் பிற நபர்களை அக்குழுவில் இணைக்கவும் அனுமதிக்கின்றது. இது மெய் உலகின் தேநீர்க்கடை கூட்டம் போன்றது. இங்கே, அக்கம்பக்கத்திலும் அவ்வூரில் உள்ளோர் மட்டுமே கலந்துகொள்வர். மெய்நிகர் உலகில், மெய்யுலகின் எந்த முனையிலிருந்தும் காலம் நேரம் கடந்து கலந்து கொள்ளலாம். காலக்கோடு நம் வீட்டுத் திண்ணை போல நண்பர்களை அழைத்துக் கருத்தைப் பறிமாறலாம். யாரை அழைக்க வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அவர்களைத் தடுக்கலாம். இங்கே தனிமனிதர்கள் தங்களின், மதம், சாதி, இனம், மொழி, தனிமனித விருப்பங்கள், இலக்குகள், சமூக விழாக்கள், வழக்கங்கள், வீட்டு நிகழ்வுகள், பொருளாதார நிலைகள், அரசியல் நிலைப்பாடுகள், சண்டை சச்சரவுகள் எனப் பல்வேறு வகையில் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தலாம். இந்த அடையாளப்பதிவுகளோடு ஒத்துப் போகிறவரும் இதில் கலந்து கொள்கின்றனர். தங்களுக்கான இணை தேடலிலும் தனிநபர்கள் சமூக வலைத்தங்களைப் பயன்படுத்தத் தவறவில்லை. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பாலியல் தேவையுடையோரும் இத்தளங்களின் வழியே தங்கள் கருத்தொத்தோரைக் கண்டறியத் தலைபடுகின்றனர். ஆயின் இம்மெய்நிகர் உலகில் தனிமனிதர்கள் வெளிக்காட்டும் அடையாளங்கள் உண்மைதான் என்று சொல்வதற்கில்லை. ஒரே நபர் இம்மெய்நிகர் உலகில் வெவ்வேறு அடையாளங்களோடு உலாவ வாய்ப்பு உள்ளது.



மேலும் , தனிநபர்கள் அவர்களே சுயமாகக் கட்டணம் செலுத்தி நேரத்தையும் இடத்தையும் இணையவெளியில் வாங்கித் தங்களுக்கான இணையதளங்களையும் நிர்வகிக்கின்றனர். இவர்களும் தங்களுக்கான வாடிக்கையாளர் வருகையைத் தங்களின் அறிவுத்திறத்தால் உருவாக்கப்பட்ட கருத்துப்பொதிகளால் வரவழைக்கின்றனர். இவர்களின் இணையப்பக்கங்களில் வாடிக்கையாளர் வருகை அதிகமானால், விளம்பரதாரர்கள் தேடிவந்து விளம்பர இடம்பெற்றுச் செல்லுவர்.

சமூக அடையாளங்கள்

உலக அளவில் ஒவ்வொரு சமூகக் குழுக்களும் தங்களின் மெய்யுலக அடையாளங்களை இணையவெளியின் அனைத்து வாய்ப்புகளிலும் பதிவு செய்கின்றனர். சான்றாக, தமிழீழப் போராளிகள் அல்லது அக்கருத்தியலில் உடன்பாடுடையோர் தங்களின் கருத்துக்களைத் தனித்த தளங்களிலும், சமூகத்தளங்களிலும் அடையாளப்படுத்திப் பரவலை நிகழ்த்துகின்றனர். சான்றாக, “தமிழ்த்தேசியம், தமிழ்மொழி, தமிழ்க்கலாச்சாரம் என்ற நடைமுறை சமூக அரசியல் வாஞ்ஞைக்கு பொருள்படக்கூடிய தமிழ் பதம் தமிழியம் என்பதாகும். தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்குக் கல்வி, மருத்துவம், குடியிருப்பு, தொழில் என்பன சிறப்பாக அமைய தமிழியம் என்ற பதத்தின் செயற்படுதன்மை உதவியாக அமையும். அடுத்து தமிழ்மொழியின் உயிர்ப்பினை தொடர்பாடல் மொழி, தொழில்நுட்ப மொழி, கலாச்சார மொழி, சமயமொழி என்பனவற்றில் பிரதிபலிக்கவும் தமிழியம் என்ற பதத்தின் செம்பணியுதவும்” (4) என்று ஒரு இணையதளம் தங்கள் அடையாளத்தைப் பதிவிடுகின்றது.

இவ்வாறே வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மொழிக் குழுவினர், சமயக்குழுவினர், அரசியல் குழுவினர் என மெய்யுலகின் அனைத்துக் குழுவினரும் தங்களின் அடையாளங்களைப் பதிகின்றனர்.

மெய்நிகர் உலகின் சிக்கல்கள்


1. நேரத்தையும் இடத்தையும்( Time and Space ) விலை கொடுத்து ஒரு தனிநபரோ குழுவோ வாங்கியிருந்தாலும் நம்முடைய தனிநபர் பாதுகாப்பு என்பதை இழக்கின்றோம். நம்மைக் குறித்த அனைத்துத் தரவுகளும் நமக்கு இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் வசம் இருக்கும்.

2. சமூக வலைத்தளங்களில் தனிமனித அடையாளங்கள் மூன்றாவது நபரால் மாற்றப்படலாம், மறைக்கப்படலாம், களவாடப்படலாம். முகநூல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் நிலைப்பதிவுகளை மாற்றிச் சோதனைக்கு உட்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து விவாதிக்கும் ஒரு தளம் கீழ்க்கண்டவாறு கருத்துரைக்கின்றது. “தொலைக்காட்சி விளம்பரங்கள் முதல் நூற்றுக் கணக்கான வழிகளில் நமது உணர்ச்சிகளை கார்ப்பரேட்டுகள் தம் விருப்பப்படி வளைப்பதற்கு இந்த முடிவுகள் முகநூலால் விற்கப்படும் என்று உறுதியாக நம்பலாம். மகிழ்ச்சி, துன்பம் இன்ன பிற மனித மன உணர்வுகளை நண்பர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதாக நீங்கள் பயன்படுத்தும் வசதி, உங்கள் மன உணர்வுகளைச் செயற்கையாகத் தூண்ட முடிவதையும், உங்கள் மனநிலையின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? மேட்ரிக்ஸ் படத்தில் வருவதைப் போல மெய்நிகர் உலகின் மாய உணர்ச்சிகள் உங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை முகநூலின் சோதனை நிருபித்திருக்கிறது. இனி நீங்கள் அழுவதும் , சிரிப்பதும் உங்கள் கையில் இல்லை. அவர்கள் அழச்சொன்னால் அழ வேண்டும், சிரிக்கச் சொன்னால் சிரிக்க வேண்டும். அப்போது அழுவதற்கும், சிரிப்பதற்கும் உரிய கருப்பொருளும், நிகழ்வுகளும் தலைகீழாக கூட மாறியிருக்கலாம். ஆக முகநூல் மூலம் நீங்கள் உங்கள் உலகை கட்டியமைக்க முடியாது. முகநூல்தான் உங்களது அறிவு, அரசியல் பார்வையினைக் கட்டியமைக்கும்” (5)

3. தனிமனித ஆளுமைச்சிதைப்பாடு மெய்நிகர் உலகால் ஏற்படுகின்றது. “கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிலர் குறிப்பிட்ட தளங்களுக்கு அடிமையாகி இருப்பதுண்டு. அதாவது அவர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்தத் தளங்களில் அதிக நேரத்தை வீண‌டித்துக் கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு முகநூலே கதி என இருக்கும் முகநூல் பிரியர்கள் இருக்கின்றனர். முழுநேரமும் யூடியூப்பில் நிகழ்படக் காட்சிகளாக பார்த்து கொண்டிருக்கும் யூடியூப் பிரியர்களும் இருக்கின்றனர். கூகுலின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் பற்றி சொல்லவே வேண்டாம். புதிய இமெயில் வந்துள்ளதா என்று பார்க்க கை அடிக்கடி பரபரக்கும்”. (6)

4. சமூகத்தால் காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு நியதிகள் மாறவும் அதனால் சமூக சீர்குலைவிற்கும் மெய்நிகர் உலாவல் வழிவகுக்கின்றது. குறிப்பாக இளம் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. “செங்கல்பட்டு அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஒரு மாணவன் வகுப்பறையில் பயன்படுத்திய கைபேசியை வாங்கி ஆசிரியர் பரிசோதித்தார். அதில் முழுக்க ஆபாச நிகழ்படங்கள். அதைவிட அதிர்ச்சி, பள்ளியின் ஆசிரியை ஒருவரை மிகவும் ஆபாசமான கோணங்களில் அந்த மாணவன் நிகழ்படமாகவும் எடுத்திருந்தான். எச்சரிக்கப்பட்டு, பிரச்னை முடிக்கப்பட்டது. விஷயம் தெரிந்ததும் அந்த ஆசிரியை, 'இந்த வேலையே வேண்டாம்’ என்று விலகிச் சென்றுவிட்டார்”. (7)

5. சமூக விரோதிகள் தங்களை அடையாளப்படுத்திக் கூடுமிடமாகவும் மெய்நிகர் உலக அடையாளங்கள் அமைந்துவிடுகின்றன.

முடிவுரை

இறுதியாக, எவ்வாறாயினும் மெய்நிகர் உலகம் என்பது மனித வாழ்வில் தவிர்க்கவியலாத ஒன்றாக இடம்பெற்ற நிலையில் அதனை முறையாகப் பயன்படுத்தும் அறிவினை அனைவருக்கும் ஊட்டவேண்டியது மிகப்பெரும் கடமையாகும். குறிப்பாக வளரும் தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்தல் அவசியமாகும். நேரமும் காலமும் கடந்த இந்தத் தொடர்பாடல் உலகின் மொழி என்பது மிகவும் முதன்மை என்றறிந்து தமிழ் மொழியின் அடையாளத்தை முழுமைப்படுத்த வேண்டியது தமிழ்மொழி இனக்குழுக்களின் காலத்தேவை. மெய்நிகர் உலகின் தன்மைகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்துபவர்களுக்கு அது நம் கையில் தவழும் வரம் என்பதை அறிவோம்.

அடிக்குறிப்புகள்

1. http://www.thinakaran.lk/vaaramanjari/2010/0
2. https://groups.google.com/forum/#!topic/vallamai/ShDBxqGKAQ8 3. https://groups.google.com/forum/#!topic/vallamai/ShDBxqGKAQ8 4. http://www.tamilwin.com/mshow-RUmryBScNWkq7.html
5. http://www.vinavu.com/2014/08/13/facebook-decides-what-you-feel/
6. http://keepmeout.com/en/
7. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=35591.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p53.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License