இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

உங்களிடமிருந்து தொடங்குங்கள்

மு. கோபி சரபோஜி


அம்மா அடித்ததால் அந்தச் சிறுவனுக்கு அவள் மேல் கோபம். “நான் உன்னை வெறுக்கிறேன்; நான் உன்னை வெறுக்கிறேன்” என கத்தியபடி வீட்டை விட்டு வெளியேறி அருகிலிருந்த பள்ளத்தாக்கை நோக்கி ஓடினான். அதன் பின்பும் அவன் கோபம் தணியவில்லை. பள்ளத்தாக்கில் நின்று கொண்டு “நான் உன்னை வெறுக்கிறேன்; நான் உன்னை வெறுக்கிறேன்” என்று கத்த பள்ளத்தாக்கும் அதை அவன் குரலிலேயே எதிரொலித்தது. முதன்முதலாக எதிரொலியைக் கேட்ட அந்தச் சிறுவன் பயத்தோடு மீண்டும் அம்மாவிடமே ஓடி வந்து பள்ளத்தாக்கில் “நான் உன்னை வெறுக்கிறேன்; நான் உன்னை வெறுக்கிறேன்” என ஒரு பையன் என்னிடம் கத்தினான் என்றான்.

நடந்தவைகளை ஊகித்த அந்தச் சிறுவனின் அம்மா மீண்டும் பள்ளத்தாக்கிற்குச் சென்று “நான் உன்னை நேசிக்கிறேன்; நான் உன்னை நேசிக்கிறேன்” என கத்தும்படி சொல்லி அனுப்பினாள். அவனும் அப்படியே செய்ய பள்ளத்தாக்கும் அதே மாதிரியாகவே எதிரொலித்தது. முன்பு போல் இல்லாமல் பயமற்றவனாய் அந்தச் சிறுவன் அம்மாவிடம் வந்து நடந்தவைகளைச் சொன்னான். இந்தச் சம்பவத்தில் வரும் சிறுவனைப் போல நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதையே எந்தவித சமரசமுமின்றி திருப்பித் தரக்கூடியது உங்களின் வாழ்க்கை. வாழ்க்கை மட்டுமல்ல உங்களின் நண்பர்கள், எதிரிகள், உங்களைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் மட்டுமின்றி இவர்களைப் போல நீங்கள் அறியாத பலரையும் உள்ளடக்கிய சமுதாயமும் நீங்கள் கொடுப்பதைத்தான் திருப்பித் தர தயாராக இருக்கிறது. இதுவரையிலும் நீங்கள் கடன் கேட்காத ஒருவரிடம் ஒரே ஒருநாள் மட்டும் கடன் வாங்கிப் பாருங்கள். மறுநாளே அவர் உங்களிடம் கடன் வாங்கத் தயாராகி விடுவார். அப்படியாகவே நாம் வாழ்க்கையை வாழப் பழகி விட்டோம்!

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது திபேத்தில் இருந்த தலாய்லாமா காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் திபேத்திய மொழியில் இருந்தது. காந்தியடிகளுக்கும், அவருடன் தங்கியிருந்தவர்களுக்கும் அந்த மொழி தெரியாததால் அந்தக் கடிதத்தை காந்தியடிகளால் படிக்க முடியவில்லை. உடனே காந்தியடிகள் பதிலுக்கு தலாய்லாமாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். தன் தாய்மொழியான குஜராத்தி மொழியில் எழுதிய அந்தக் கடிதத்தை தனது செயலாளர் மகாதேவதேசாயிடம் கொடுத்து தபாலில் அனுப்பி வைக்கச் சொன்னார். கடிதத்தைப் பார்த்த தேசாய், “பாபுஜி, இந்தக் கடிதத்தை குஜராத்தி மொழியில் எழுதி இருக்கிறீர்களே… தலாய்லாமாவுக்கு குஜராத்தி மொழி தெரியுமா?” என்று கேட்டார். அதற்குக் காந்தியடிகள், “நிச்சயமாகத் தலாய்லாமாவுக்கு குஜராத்தி மொழி தெரியாது. என்ன செய்வது? திபேத்திய மொழி தெரியாத எனக்கு அந்த மொழியில் கடிதம் எழுதிய தலாய்லாமாவுக்கு வேறுவிதமாகப் பதில் எழுத எனக்குத் தோன்றவில்லை” என்று பதிலளித்தார். எல்லா உபதேசங்களையும் விட உண்மையான உபதேசம் வாழ்ந்து காட்டுவது எனபதற்கேற்ப வாழ்ந்து காட்டிய காந்தியடிகள் இந்தச் செயலின் மூலம் தலாய்லாமாவுக்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்தே மனிதனின் வாழ்க்கை நிலையை - மன நிலையை உணர்த்திக் காட்டினார்.



எனவே பிறரை திறமையாக ஏமாற்றி, வஞ்சித்து உங்களின் வெற்றிகளை அடைவதற்கான முயற்சிகளையோ, செயல்களையோ ஒருபோதும் செய்யாதீர்கள். அப்படி செய்வீர்களேயானால் நீங்கள் எடுத்த அதே அஸ்திரத்தை உங்களுக்கு எதிராக மற்றவர்களும் எடுக்கத் தயங்க மாட்டார்கள். பதிலுக்குப் பதில் என்பதைத் தவிர மற்ற அனைத்துமே இரண்டாம் பட்சம் தான் என நினைக்கும் மனநிலை புரையோடிப் போய்விட்ட சமூகத்தில் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் நீங்களோ, நானோ, நம்மைச் சுற்றியிருப்பவர்களோ காந்தியோ, புத்தனோ, ஏசுபிரானோ அல்ல. சராசரிகள் தான்! சராசரி நிலையிலிருந்து சாதனை நிலையான வெற்றியை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருப்பவர்களே! அதற்கு மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் ”ஒத்துழைப்பு” அவசியம்! அத்தியாவசியம்!! அப்படியான ஒத்துழைப்பு கிடைக்க வேண்டுமானால் “நான்” என்ற எண்ணத்தை அகந்தையை விட்டுக் கொடுக்க வேண்டும். “நான்” என்ற அகந்தையை விடும் போது ”ஒத்துழைப்பு” என்பது உங்களை தானாகவே வந்து சேரும்.

எதிலும் நான் சொல்வதும், நினைப்பதும் தான் சரியாக இருக்கும் என வாதிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வாழ்க்கையை நேசிக்கவும், நேசிக்கின்ற வாழ்க்கையில் பிறருடைய எதிர்ப்பின்றி வெற்றி பெறவும் வேண்டுமானால் உங்கள் வாழ்க்கையை வாத, பிரதி வாதங்களுக்குள் உட்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பை மட்டும் பெற முயற்சி செய்ய வேண்டும். எந்த அளவிற்கு அதிகமான ஒத்துழைப்பு கிடைக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கையை சுவராசியமானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமைத்துக் கொள்ள முடியும். உள்நாட்டுப் போரினால் அமெரிக்கா சின்னா பின்னமாகிக் கொண்டிருந்த போது அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் தனது போர்த்துறை அமைச்சராக இருந்த ”ஸ்டாண்ட்டன்”க்கு முக்கியமான உத்தரவு ஒன்றை அனுப்பினார். அதைப் படித்துப் பார்த்த ஸ்டாண்ட்டன் “ஒரு படுமுட்டாள் தான் இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும்” என்று சொல்லி அந்த உத்தரவைக் கிழித்தெறிந்தார். லிங்கனுக்கு இந்தச் செய்தி தெரியவந்தது. “நான் இந்த நாட்டின் அதிபர். என் உத்தரவை ஒரு அமைச்சராக இருப்பவர் மதிக்காதது மட்டுமின்றி கிழித்தெறிவதா? நிறைவேற்ற முடியாது என அவர் எப்படிச் சொல்லலாம்?” என சராசரிகளைப் போல் லிங்கன் எகிறிக் குதிக்கவில்லை. என்ன செய்தார் தெரியுமா?

‘ஸ்டாண்ட்டன் என்னை படுமுட்டாள் என்று சொல்லி இருந்தால் நான் அப்படிப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும். நானே சென்று அவரைப் பார்த்து வருகின்றேன்” என்று சொல்லி அவர் இடத்திற்கே சென்று சந்தித்தார். அன்புடன் அவரின் தோள் மீது கை போட்டு விவாதித்தவர் இந்த விசயத்தில் உங்களின் ஒத்துழைப்பு வேண்டும். அபோது தான் பிரச்சனையை சமாளிக்க முடியும்” என்றார். நெக்குருகிப்போன ஸ்டாண்ட்டன் எந்தவித எதிர்ப்புமின்றி லிங்கனுக்கு ஒத்துழைப்போடு அவர் சொல்லை மீறாத மரியாதையையும் அள்ளிக் கொடுத்தார்.



ஒத்துழைப்பு கிடைத்ததால் வெற்றி பெற்ற வரலாற்றை தெரிந்து கொண்டதைப் போல ஒத்துழைப்பு கிடைக்காததால் ஒரு மகத்தான வலிமை கொண்ட படை தோல்வியடைந்த வரலாற்றையும் தெரிந்து கொண்டால் ஒத்துழைப்பின் அவசியமும், அருமையும் உங்களுக்கு புரியும். தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே பெற்று வந்த ஹிட்லரின் ஜெர்மானியப் படைகள் இரஷ்யாவிற்குள் நுழைந்தன. குறிப்பிட்ட தூரம் நுழைந்தவுடன் அங்கு நிலவி வந்த தட்பவெப்பநிலை உள்ளிட்ட பல விசயங்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அப்படையின் தளபதி அங்கிருந்த நிலைமைகளை தெளிவாக விளக்கி ஹிட்லருக்கு கடிதம் எழுதியதோடு தொடர்ந்து படைகள் முன்னேறிச் செல்லாமல் இருக்க உத்தரவிடும்படி கோரியிருந்தார். தளபதியின் கடிதத்தைக் கண்ட ஹிட்லர் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என சொல்லாத குறையாய், ”படைகள் தொடர்ந்து முன்னேறி இரஷ்யாவிற்குள் செல்லட்டும்” என்று உத்தரவிட்டார்.

படைத்தளபதியின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அதை முறையாக பரிசீலிக்காமலும், அவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தராமலும் ஹிட்லர் போட்ட உத்தரவால் ஜெர்மானிய படைகள் இரஷ்யாவிற்குள் முன்னேறிச் சென்றன. இரஷ்யாவின் சீதோஷ்ண நிலை பற்றி முழுமையாக அறிந்திராத நிலையில் முன்னேறி வந்த படைகளை அதே சீதோஷ்ண நிலையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு இரஷ்யப்படைகள் தோற்கடித்தன. அந்தத் தோல்வி ஒரு மாபெரும் உலக யுத்தத்தின் போக்கையே திசை மாற்றியது. கூடவே ஹிட்லரின் வீழ்ச்சியையும் ஆரம்பித்து வைத்தது. வெற்றியாளனின் தனித்துவம் இது போன்ற சூழ்நிலைகளில் தான் அடையாளமிடப்படுகிறது. ஒத்துழைப்பை பெற்று வெற்றி பெற்ற லிங்கனின் முடிவை விரும்புகிறீர்களா? அல்லது ஒத்துழைப்பைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் நினைப்பதே சரி என நினைத்து தோற்ற ஹிட்லரின் முடிவை விரும்புகிறீர்களா? என்பது உங்கள் சாய்ஸ்!



விட்டுக்கொடுத்தால் மட்டும் உதவி கிடைத்துவிடுமா? என கேட்கலாம். அதற்கு என் பதில் நிச்சயம் கிடைக்கும். காரணம், விட்டுக்கொடுக்கும் போது தான் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதோடு அவர்கள் சொல்கின்ற விசயங்களையும், அதன் உண்மைச் சூழ்நிலைகளையும் ஏற்றுக் கொள்ள முடியும். தான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்ற இந்த மனித இயல்பை செயல்படுத்தி குடும்பங்களில், அலுவலகங்களில், நிர்வாகங்களில் பலரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். வெற்றி பெற்றும் வருகின்றனர். நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? அவர் விட்டுக் கொடுக்க மாட்டாரா? என சராசரி கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பீர்களேயானால் உங்களால் சாதிக்க முடியாது. ஒருநாளும் வெற்றி பெற முடியாது. உங்களின் வெற்றிக்கு, இலக்கு நோக்கிய முன்னேற்றத்திற்கு தான் மற்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறீர்கள். எனவே முதலில் விட்டுக்கொடுக்க நீங்கள் தயாராகுங்கள். இந்த விசயத்தில் சுயநலவாதியாய் இருந்தால் மட்டும் தான் வெற்றி நிச்சயம். உங்களுக்கு எதிரில் நிற்பவர் உங்களுடன் கை குலுக்க கையை நீட்டுவாரா? மாட்டாரா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதை விட தயங்காமல் உங்கள் கையை நீட்டிப் பாருங்கள். தானாகவே அவருடைய கை உங்களை நோக்கி வரும். அனுபவித்தவர்களின் அனுபவ பாடமான “முன் கையை நீட்டு. முழங்கை தானே நீளும்” என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள்.

“ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திற்குச் செல்வதற்கான ஆரம்பம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில் தான் இருக்கிறது” என்ற சீனப் பொன்மொழியைப் போல உங்களின் வெற்றிக்கான ஆரம்பப் பயணம் விட்டுக்கொடுத்தலில் தான் இருக்கிறது. அதன் மூலம் நீங்கள் பெறும் ஒத்துழைப்பு உங்களின் வாழ்வின் போக்கையை திசைமாற்றும் என்பதால் விட்டுக் கொடுத்தலை உங்களிடமிருந்து தொடங்குங்கள். பிறரிடம் மாற்றம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதற்கு பதில் உங்களிடம் மாற்றம் செய்ய வேண்டிய அல்லது நீங்கள் மாற வேண்டிய விசயங்கள் ஏதுமிருக்கிறதா? என யோசியுங்கள். அந்த யோசனை உங்கள் வாழ்க்கையை சுவராசியமானதாய், சுகமானதாய் மலர வைக்கும். நதியாய் நடை போட வைக்கும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p58.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License