இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பழனி பாத யாத்திரையில் காவடிப் பாடல்களும் அவற்றின் கலைநயமும்

முனைவர் மு. பழனியப்பன்


நகரத்தார்கள் நானூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பழனி நடையாத்திரையை இன்றுவரை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். காரைக்குடிக்கு அருகில் உள்ள குன்றக்குடியில் இருந்து பழநி மலைக்கு தை மாதத்தில் ஏறக்குறைய ஆறு நாட்கள் நடைபயணமாக நடந்து சென்று பழனி முருகனைக் காண்பது என்பது இந்த யாத்திரையின் முறை ஆகும். அரண்மனைப் பொங்கல் குழு, கண்டனூர் குழு, நெற்குப்பை குழு ஆகிய மூன்று குழுக்கள் மிக முக்கியமான குழுக்களாக இந்நடையாத்திரையில் விளங்குகின்றன. இக்குழுக்கள் காவடிகள் கட்டிச் செல்வதன் காரணமாக இந்நடையாத்திரையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

நகரத்தார்களின் முன்னோர்கள் உப்பு வணிகம் கருதி பழனிக்குச் செல்லும்போது கிடைத்த வருவாய்ப் பெருக்கம் காரணமாக இந்நடையாத்திரையைத் துவங்கியுள்ளனர். இக்குழுக்களுக்கு முன்னணியில் சாமியடிகளும், வேல் தாங்கியவர்களும் செல்ல அவர்களுக்குப் பின்பாக காவடி அன்பர்கள் செல்கின்றனர். நிறைவாக வரும் காவடி பச்சைக் காவடி என்று பெயர். இக்காவடி ஓர் எடுத்துக்காட்டுக்குச் சொல்ல வேண்டுமானால் தொடர்வண்டிகளில் காணப்படும் நிறைவுப் பெட்டி (கார்டு பெட்டி) போன்றது. இப்பச்சைக் காவடியே காவடிகள் அனைத்தையும் உள்ளடக்கி நிறைவாக வரும் காவடியாகும். இக்காவடி வருகிறதா என்று பார்த்துவிட்டால் அனைத்துக் காவடிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடந்துவிட்டன என்று பொருள்.



இக்குழுவினர்கள் தவிர ஊர்தோறும் பழனி பாதயாத்திரை அன்பர்கள் ஏறக்குறைய இரண்டு மாத காலமாக கடுமையான விரதம் இருந்து நடத்தும் யாத்திரை இதுவாகும். பாத யாத்திரை செல்பவர்கள் அசைவ உணவு தவிர்க்க வேண்டும். கழுத்தில் மாலை அணியவேண்டும். நாளும் முருனைப் பணியவேண்டும். இறப்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது. கட்டாயமாகப் பாத அணிகள் (செருப்பு) அணியக் கூடாது என்றெல்லாம் இந்நடையாத்திரையின் விரதம் அமைந்திருக்கிறது. இவற்றையும் சேர்த்துக் காவடி செலுத்துபவர்களுக்கு இன்னும் பல விரதங்கள் இருக்கின்றன. காவடியை ஒரு முறை கட்டி பழனி மலைக்கு ஒருவர் செல்ல முயற்சி எடுத்துச் சென்றுவிட்டார் என்றால் அவர் தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகக் காவடி செலுத்த வேண்டும் என்பது மரபாகி விடுகின்றது.

மேலும் காவடி எடுப்பவர் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர் காவடிக்குழுவோடு இருக்க வேண்டும். வேறு இடங்களில் தங்குதல் கூடாது. காவடியைத் தூக்கி நடையாத்திரை ஓர் இடத்தில் துவங்கப்படுகிறது என்றால் அதன்பிறகு அவர் உடல் கழிவுகள் எதையும் கழிக்க இயலாது. கழிக்கக் கூடாது. இதன் காரணமாக அவரின் உணவுக் கட்டுப்பாடு என்பது மிகக் கவனத்துடன் வைக்கப்படுகிறது. நீர்சத்து அதிகமாக உள்ள கஞ்சியே இந்த நடையாத்திரை நாட்களில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. காரம், மணம் ஆகியவற்றோடு அவர் உணவு உண்டால் அவரால் கழிவுகளை அடக்குவது கடினம் என்பதால் இவ் எளிய உணவே அவர்களின் உணவாகின்றது. மேலும் ஒருவருக்கு நெருக்கடியாக கழிவகற்றுதல் நடைபெற்றால் அவர் தன் உடல் சுத்தி செய்த பிறகுதான் காவடியைத் தூக்க இயலும். இதன் காரணமாக தன்னோடு உடன் வரும் காவடிக்காரர்களின் நேரம் பாழ்படுத்தப்பெறும். இதைவிட முக்கியமான ஒரு தகவல் காவடியைப் பழனிக்குத் தூக்கிச் செல்லும் காவடிக்காரர் பழனியில் காவடியைச் செலுத்திய பின் அதே காவடியை வீடுவரைத் திரும்பவும் நடந்தே கொண்டுவரவேண்டும் என்பது நியதி. இதில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு இதற்காகக் காவடி சுமப்பவர்கள் அமர்த்தப்பட்டு அவர்கள் பழனியில் இருந்து திரும்பவும் நடந்து காவடியை எடுத்து வருகிறார்கள். ஆனால் பழனிக்குச் செல்லும்போது அவரவர் காவடியை அவரவரே சுமத்தல் வேண்டும்.

மேலும் காவடி செலுத்துபவர் தன் காவடியில் உள்ள சர்க்கைரையைக் கவனமாகப் பாதுகாத்து பழனி மலையில் உள்ள முருகனுக்கு பஞ்சாமிர்தமாக அதனை அபிடேகத்துக்கு அளிக்கவேண்டும். பழனியிலிருந்து பஞ்சாமிர்தத்தைச் சுமந்து வந்து, வீட்டிற்குக்கொண்டு வரவேண்டும். ஏறக்குறைய ஒரு மாதகால இடைவெளி கொண்ட இந்த நடையாத்திரை கடுமையான பயணமுடையது. ஒன்று கூடி முருகனை வழிபடுவது. நடையாத்திரையின்போது நடையின் சுமை தெரியாமல் இருக்க முருகமந்திரங்கள், பாடல்கள் பாடப்பெறுகின்றன. அப்பாடல்கள் தனக்கென தனித்த நடை உடையன.



பாடல்கள் கால்கள் நடக்கும் பாத யாத்திரை இடைவெளிக்குத் தக்கவாறு அமைக்கப்பெற்றுள்ளன. மென்மையான இசை கொண்ட எளிமையான சொற்கள் அடங்கிய பாடல்களாக இவை அமைகின்றன. கண்ணதாசன், சௌந்திரா கைலாசம் போன்ற பிரபல கவிஞர்கள் பாடிய பாடல்களும் இதனுள் இடம்பெறுகின்றன. இவை தவிர, பெயரறியாதவர்கள் தயாரித்த பாடல்களும் இப்பாடல்களில் அடங்கும். பாடலோடு அமையாமல் காவடி சுமப்பவர் அந்தப் பாடலில் பங்கேற்கும் வண்ணம் சிறு சிறு சொற்களை அவர்கள் சொல்லும் நிலையில் பாடல்கள் அமைக்கப்படும். இதன்மூலம் நடப்பவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படுகிறது. பழனியை நெருங்க நெருங்கப் பாடலில் வேகம் கூடும். படிப்பவரின் ஆர்வம் கூடும்.

இப்படிப்பட்ட பாடல்கள் காவடிப்பாடல்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. இவை பல தாள்களில் எழுதப்பெற்று பதிவாகியுள்ளன. பல இணைய தளங்களில் பதிவாகியுள்ளன. பஜனை.காம் என்ற தளம் இக்காவடிப்பாடல்களின் தொகுப்பு தளமாக விளங்குகிறது. இத்தளத்தில் பாடல்கள் பாடப்பெற்றும், பதியப்பெற்றும் நல்ல தொகுப்பாக உள்ளது. இத்தளத்தின் வழியாகப் பழனிப் பாடல்களை, பாடிய பாடகர்களை, கவிஞர்களை அறிந்து கொள்ளமுடிகின்றது.

கு. சே. ராமசாமி, அரு. சோ, சேவுகன் செட்டி, குறள் இலக்குவம், சித. சம்பந்தம், எஸ். எம். அழகப்பன், வாசன்ஸ் காபி எஸ். எம் . அழகப்பன், மா. கண்ணப்பன் அருண் வீரப்பா, அழகு சுந்தரம், அழகு திருநாவிற்கரசு, இராகவன், இளை. சரவணன், கமலா பழனியப்பன், கண்ணதாசன். அர.சிங்காரவடிவேலன், கண்ணதாசன், மீனவர், சொ. சொ. மீ. சுந்தரம், முத்துக்கருப்பாயி சபாரத்தினம், லெ. சுப்பிரமணியன், வள்ளியம்மை, வி. ஆர் பழனியப்பன், விக்னேஷ் முத்தையா, வீ, ஆர். சுப்பையா, லெ. சக்திக்குமார், வெங்கட் கணேசன் போன்றோர் பழனி பாதயாத்திரைப் பாடல்களின் ஆசிரியர்களாக அறியப்பெறுகின்றனர். இவர்கள் தவிர பெயரறியாதாவர்கள் பலர் உண்டு. ஆண்டாண்டு தோறும் பழனி நடையாத்திரை மலர்கள் வெளியிடப்பெறுகின்றன. இவற்றில் பற்பல கவிதைகள், பாடல்கள் இடம்பெறுகின்றன.

இதனோடு இப்பாடல்களை மரபு சார்ந்து பாடும் கலைஞர்கள் குறிக்கத்தக்கவர்கள். கால்நடைப் பயணத்தின் போது இக்காவடிப் பாடல்கள் பாடப்படுகின்றன என்றாலும், காவடிகள் புறப்படுமுன் வீடுகளில் நடத்தப்படும் பூசைகளில் இக்காவடிப் பாடல்கள் பாடப்படுகின்றன. இதன் காரணமாக இப்பாடல்கள் கலைவடிவத்தைப் பெறுகின்றன. அரசி. பழனியப்பன், அருண்வீரப்பா, அழகம்மை ஆச்சி, அழகுசுந்தரம், அருளிசைமணி நாகப்பன், வி, ஆர் பழனியப்பன், எஸ்.வி சண்முகம், வள்ளியம்மை, நா. வள்ளியப்பன், லெட்சுமணன் சக்திக்குமார், ஆர்காட் லெட்சுமணன், லெ. சுப்பிரமணியன், ராம்தேவ், மீனாட்சி ஆச்சி, முத்துக்கருப்பாயி சபா ரத்தினம், மீனாட்சி சுந்தரம், என்.கே. பழனியப்பன், சொர்ணா, சித. சிதம்பரம், சாமிநாதன், அழகு சுந்தரம், இராஜா வெள்ளையப்பன், கருப்பஞ்செட்டி (பழம்நீ), சிட்டாள், ஏ. ஆர். சுப்பிரமணியன், சொர்ணவல்லி என்ற அகிலா, லெ. சக்திகுமார், லெட்சுமணன் (பழம்நீ), அழகம்மை ஆச்சி, இராகவன், இளைய பெருமாள், லெ. சோமசுந்தரம், எம். சோமசுந்தரம், செல்வ கணேஷ் போன்ற பலர் இக்காவடிப்பாடல்களைக் மரபிசையில் பாடி வருகின்றனர். இவர்கள் தவிர இன்னும் பலர் உள்ளனர். தற்போதைய நிலையில் இக்கலைஞர்கள் அறிமுகமாகின்றனர்.



பழனி பாத யாத்திரையின்போது மிகவும் சிறப்புமிக்க ஒரு பாடல் என்றால் அது “ஆடுக ஊஞ்சல் ஆடுகவே” என்ற பாடலாகும். இப்பாடல் வேல் வடிவில் இருக்கும் முருகப்பெருமானை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் போது பாடப்படும், பாடப்படுகிறது. ஊஞ்சலில் முருகன் ஆட, ஆட பாத யாத்திரை பக்தர்களின் கால் நோவு குறையும் என்று நிலையில் இப்பாடல் முக்கியத்துவம் பெறுகின்றது. இதுதவிர, பல பாடல்கள் உள்ளன. சக்தி, சிவன், திருமால், கருப்பர் போன்ற பல கடவுளர்களை வணங்கும்படியான பாடல்களும் காவடிப் பாடல்களாகப் பாடப்படுகின்றன.

ஆளுயரம் அரிவாளாம், அதுக்கேத்த கம்பீரமாம்,
காலிலே முள்ளுச் செருப்பாம் கருப்பனுக்கே தனிச்சிறப்பாம்.
வராரய்யா வாராரு, கருப்பரிங்கே வாராரு,
வாராரய்யா வாராரு, கருப்பரிங்கே வாராரு.

என்ற பாடல் கருப்பர் குறித்துப் பாடப்படும் பாடலாகும். இப்பாடலில் உள்ள “வாராரய்யா வராரு” என்ற ஈரடிகள் காவடி சுமப்பவர்களால் பின்பற்றிப் பாடப்படும் அடிகளாகும். இவ்வடிகளைப் பாடுபவர் பாட, மற்றவர்கள் நினைவில் கொண்டு பாடும் முறையில் எளிமையும், இனிமையும் ஓசை ஒழுங்கும் கொண்டு இப்பாடல்கள் புனையப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்
அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்
தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள் - முருகன்
சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்
காலமெல்லம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்
முருகன் காவடியில் ஆடிவரும் அழகைப் பாருங்கள்

என்ற பாடல் முருகனைப் பற்றிய பாடலாகும்.

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்
நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல்
தேவியவள் தந்த வேல் தேவர் மூவர் போற்றும் வேல்
குழந்தைக் குமாரவேல் குன்று தோறுமாடும் வேல்
பாலகனின் கைவேல் பாவவினை தீர்க்கும் வேல்
கந்தன் கதிர்வேல் கவலைகளைப் போக்கும் வேல்

என்னும் பாடல், வேலை வழிபடும் பாடலாகும். இதன் முதலடி திரும்பத் திரும்பப் பாடப்படுவதாகவும், காவடி சுமப்பவர்கள் சொல்லி இப்பாடலில் பங்குபெறுவதாகவும் அமைகின்றது.

இவை போன்று எளிய சொற்கள், திரும்பச் சொல்வதற்கு ஏற்று மெட்டுகள் கொண்டு இப்பாடல்கள் பாடப்படுகின்றன. இப்பாடல்களை, இவற்றின் கலை நயத்தை, இப்பாடல்களுடன் இணைந்த வழிபாட்டு முறைகளை ஆராய்வதற்கான களம் நிறைய உள்ளது. இதனை ஆய்வாளர் கவனத்தில் கொண்டு ஆராய முற்படலாம் என்ற நிலையில் இக்கட்டுரை இக்கலையை அறிமுகம் செய்யும் கட்டுரையாக அமைகின்றது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p71.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License