இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தகவல் பரிமாற்றத்திற்குக் கூத்து இசையின் பயன்பாடு

வீ. முத்துலட்சுமி


முன்னுரை

இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் கொண்டு பிரகாசிப்பது தமிழ்மொழி. இசைத்தமிழ் கேட்பவரைத் தம்பால் இசையச் செய்யும் பேராற்றல் பெற்றது. இசையைக் கேட்டு யானையானது நின்று கொண்டே தூங்கியமையும், ஆரலைக் கள்வர்கள் தம் கொலைத்தொழிலை மறந்து செயலற்று நின்றனர் என்ற செய்திகள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன.

நாடகம் என்பது கூத்து. இது ஆடல், பாடல், அழகு என்ற மூன்றையும் தன்னகத்தே கொண்டு செயல்படுவது. இதனை நிகழ்த்த கூத்தர், பொருநர், பாணர், விறலி என்ற கலைஞர் குழுக்கள் இருந்துள்ளனர். இசையும் கூத்தும் எவ்வாறு தகவல்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்றன என்பதை இங்கே காணலாம்.

இசை மூலம் தகவல்தொடர்பு

ஓரறிவு பெற்ற தாவரம் முதல் ஆறறிவு பெற்ற மனிதன் வரையுள்ள எல்லா உயிரினங்களையும் இன்பமடையச் செய்யும் பேராற்றல் பெற்றது இசை ஒன்று மட்டுமே. இசை மலராத மலர்களை மலரச் செய்யும் ஆற்றல் உடையது. இசையைக் கேட்டு பாம்புகள் மயங்குவதும், மதம் பிடித்த யானை அடங்குவதும் இயல்பே. வண்டி இழுக்கும் மாடுகளும், ஏர் காளைகளும் இசை கேட்டு தம் வேலைப்பளுவை மறக்கின்றன. மெல்லிய இசை நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் உடையது. ஓம்ம்ம்... என்ற இசை ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்தது. பாரதியார் தமது குயில்பாட்டில்,

“காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும்”

என இசையின் வல்லமையை எடுத்தியம்பியுள்ளார். நவீன அறிவியல் உலகில் இசையால் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.



இக்காலத்தில் தகவல் தொடர்பானது, அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது. இத்தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிப்பதற்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, மனிதன் மிக விரைந்து ஓடும் குதிரையை விட ஒலி இன்னும் மிக விரைந்து செல்லும் என்பதை உணர்ந்திருந்தான். எனவே ஒலியின் மூலம் தகவல்களைத் தெரிவித்தான். “பறை” என்னும் இசைக்கருவியின் மூலம் “டம்டம் என ஒலியெழுப்பித் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்பினான்.

மலையுச்சியில் ஒருவன் நின்று பறையறைந்து தகவல்களை அறிவிப்பான். அடுத்த மலையில் உள்ளவன் அதைக் கேட்டு அவனுக்கு மறுமொழியாகக் குறியீட்டு முறையில் பறையறைவான். அடுத்த மலையிலுள்ளவனுக்கு அதே போல் குறியீட்டின் மூலம் தகவல்களை அனுப்புவான். இம்முறைதான் “தந்தி” என்னும் மின்னணு தகவல் தொடர்பு சாதனத்திற்கு முன்னோடியாக இருந்தது எனலாம்.

திருவிழாக் காலங்களில் இறைவன் ஊர்வலத்திற்கு முன் யானையின் மேல் “நகரா” என்ற இசைக்கருவியை வைத்து ஒருவன் முழங்கிச் செல்வான். அதனைத் தொடர்ந்து இறைவன் பவனி வருவார்.

போர் நிகழப் போவதையும், போரில் வென்றதையும், போர் நிறுத்தத்தையும் பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தே தெரிவித்தனர்.

மன்னனின் ஆணையை மக்களுக்குத் தெரிவிக்கவும், வெள்ளப்பெருக்கை அறிவிக்கவும், மரணம் உட்படத் துக்கச் செய்திகளை தெரிவிக்கவும் இசையே பயன்பட்டன.

முரசின் முக்கியம்

சங்க கால இசைகளில் “முரசு”க்கென தனி இடம் இருந்துள்ளது. அரசனுடைய வெற்றிச் சின்னங்களில் முரசும் ஒன்றாகும். நாட்டின் தேசியக் கொடிக்குத் தற்போது எவ்வளவு மதிப்பும் மரியாதையும் உள்ளதோ, அதைப் போன்ற செல்வாக்குடையது முரசாகும்.

திருச்செந்தூரில் இறைவனுக்கு உச்சிகாலப்பூசை முடிந்த செய்தியை அறிந்த பின்பு பாஞ்சாலக்குறிச்சியில் கட்டபொம்மன் உணவு உட்கொள்வதும், ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாளுக்குப் பூசை முடிந்த செய்தியறிந்த பின்பு மதுரையில் மன்னர் திருமலைநாயக்கர் உணவு உட்கொள்வதும் வழக்கம். இதனால் ஆங்காங்கே முரசு மண்டபங்கள் அமைத்து மன்னனுக்கு ஒலியெழுப்பித் தகவல்களைத் தெரிவித்தனர் என்பதையும் அறியலாம்.

முரசின் இச்செயல்பாட்டை இக்காலத்தில் உள்ள அலைபேசியோடு ஒப்பிட்டால் முரசு மண்டபங்களை மின்னனு கோபுரங்கள் (Cell Phone Tower) உடன் ஒப்பிடலாம். இதற்கெல்லாம் முன்னோடியாக முரசையும் கொள்ளலாம். இறைவன் கூத்தாடும் போது, கரத்திலுள்ள மருதத்தை ஒலித்ததால் உயிரினங்கள் தோன்றின என புராணங்கள் குறிப்பிடுகின்றன.



பறையறைதல்

பறையெனும் கருவி ஒருமுகம், இருமுகம் என இரு வகைப்படும். ஒருமுகமுடையதை “இரும்பறை” எனவும், இரட்டை முகமுடைய பறையை “இணைமுகப்பறை” எனவும் வழங்கினர். பறையின் ஒலியைக் கொண்டே பேரோசைப்பறை, போர்ப்பறை, வெருப்பறை, வெறியாட்டுப்பறை எனவும், தவளையின் குரலையுடைய பறையைத் “தட்டப்பறை” என்றும் வழங்கினர். வளை, வயிர், வீணை, கோடு, துடி, சங்கு போன்ற பிற கருவிகளுடன் இணைத்துப் பறை முழக்கப்பட்டதை சீவகசிந்தாமணியின் (1776,1847,1859) பாடலடிகள் சுட்டுகின்றன.

தொல்காப்பியத்தில் முதற், கரு, உரி என்ற முப்பிரிவில் கருப்பொருள்களுள் ஒன்றாகப் பறை அமைந்துள்ளது. “அசுணம் பறையொலிக் கேட்டால் மயங்கி இறந்து விடும்” அதனைப் பிடிப்பவர்கள் பறையறைந்து இசையால் மயங்கியிருக்கும் போது உடனே பிடித்து விடுவர். உழவர்களை வருவித்து வையைப் புனலை அடைப்பர். பரிபாடலில் (10-7) பறையறைந்து “கரைகாப்பாருடைய காவலோடே அப்பறையொலி ஒலிப்பதால்” நம் இலக்கியங்கள் கூறுகின்றன.

வெற்றி மட்டுமல்லாது, தோல்வியையும் உரக்க ஓசைகளையுடைய பறைகளை முழக்கினர். வயல்களில் வேலை செய்பவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்காக மருதப்பறையினை ஒலித்தனர்.

புறநானூறு 395 -7 “அரிப்பறையறையுள் ஓப்பி” என்ற வரி, நெல்லினை அறுக்கும்போது அரிப்பறையை கொட்டிய செய்தியை, தெரிவிக்கின்றது.

மலைபடுகடாம் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றைக் காவல் காக்கும் போது ‘பன்றிப்பறையறைந்த’ செய்தியைக் கூறுகின்றது.

மதயானை வருகையை அறிவிக்க, எங்கும் பறை அறைந்தனர். யானையை நீர் அருந்தச் செய்யும் போதும் பறையறிந்தே செல்ல வேண்டும் என மன்னன் ஆணையிட்டுள்ளான். யானை மீது பறையை ஏற்றி மக்களுக்கு நற்செய்திகளை அறிவித்தனர்.

மணநாளில் மணப்பறைக் கொட்டி தகவல்களைத் தெரிவித்தனர். “தண்ணகம்” என்ற சாவுப்பறை “தழீஇம் தழீஇம்” என ஒலிப்பது சாவுப்பறை “டொண் டொண் டொடு” என்றெல்லாம் ஒலிக்கக்கூடியது என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகின்றது.

இன்றும் திருவிழா, சுகாதாரம், மருத்துவம், நில வருவாய் கட்டுதல், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவது குறித்தும், மீன் ஏலம், தோப்பு குத்தகை முதலிய செய்திகளையும் பறையறைந்தே தெரிவிக்கின்றனர்.



தகவல் தொடர்பில் கூத்துக்களின் பங்கு

கூத்தர்கள் தமது கூத்தின் மூலம் பல்வேறு தகவல்களைப் பரப்புகின்றனர். தொல்காப்பியக் காலத்தில் மக்களின் அக, புற வாழ்க்கையில் கூத்துக்கள் நீக்கமற நிறைந்து காணப்பட்டது.

மன்னன் போரில் வெற்றி பெற்ற செய்தியை முன்தேர்க்குரவையும், மன்னன் போருக்குச் செல்வதை வென்றிக்குரவையும், வெற்றி பெற்ற மன்னனின் சிறப்பைப் பின்தேர்க்குரவையும் வெளிப்படுத்தின.

காதல் வாழ்வில் காதலர்களின் குறியிடம் கூறவும், காணாமல் போன காதலனைக் கண்டுபிடிக்கவும் கூத்துக்கள் பயன்பட்டன.

பொருநராற்றுப்படையில், கரிகால் பெருவளவனின் வளம் பொருநன் மூலமாகவே வெளிப்படுகின்றன.

இன்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை (சான்றாக எய்ட்ஸ்) ஏற்படுத்தவும், அரசியலில் ஏற்படும் வெற்றி தோல்விகளை வெளிப்படுத்தவும் கூத்துக்கள் உதவுகின்றன.

இசையும் கூத்தும ஒருநாளின் இருபொழுதுகள் போல இணைந்தே செயல்பட்டுள்ளன. இசையில்லாத கூத்து சிறக்காது. கூத்து சிறக்க வேண்டுமானால் கண்டிப்பாகப் பின்னணி இசை வேண்டும்.

இப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து செயல்படும் கூத்தும் இசையும் கற்காலம் முதல் இக்காலம் வரை தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் மிகச்சிறந்த ஊடகங்களாகச் செயல்பட்டன என்றால் அது மிகையாகாது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p75.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License