இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சிலம்பில் வஞ்சினம்

முனைவர் பா. பொன்னி


சிலப்பதிகாரம் சங்க காலத்தைத் தொடா்ந்து எழுந்த காப்பியம் ஆதலால் சிலம்பில் சங்க இலக்கியச் சாயல்கள் சில தொடா்ந்தும் சில மாற்றம் பெற்றும் அமைந்து வரக் காணஇயலுகின்றது. வஞ்சினம் என்பது புறப்பாடல்களில் காணக் கூடிய ஒன்று. சிலம்பில் வஞ்சினம் இடம் பெறக் கூடிய பல சூழல்களை நாம் அறிய முடிகிறது. சிலம்பில் கண்ணகி சேர மன்னன் ஆகியோரது வஞ்சின மொழிகள் தாண்டி வஞ்சினம் வெளிப்படக் கூடிய சில இடங்களும் காணப்படுகின்றன.

வஞ்சினம்

போருக்குச் செல்லக் கூடிய அரசன் ஓா் இலக்கை முன்மொழிந்து அதனை அடையாத நிலையில் தான் பெறவிருக்கும் கெடுதலையும் உடன் மொழிவது வஞ்சினம் ஆகும். இந்த வஞ்சினத்தைத் தொல்காப்பியர் காஞ்சித்திணையுடன் பொருத்தி வஞ்சினக்காஞ்சி என்னும் துறையாக அமைத்துள்ளார்.

காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். போரில் தனக்கோ அல்லது தம்மை எதிர்த்து வரும் பகைவருக்கோ ஏதோ ஒரு புறம் அழிவு உண்டு என்னும் நிலையாமையை உணா்த்துவதால் இத்துறை காஞ்சித் திணையின் கீழ் அடங்குகிறது. வஞ்சினக் காஞ்சி குறித்து

இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும் (தொல்.பொருள்.புறத்.நூ - 19)

என்று தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார். வஞ்சினம் குறித்து “வீரயுகத் தலைவனின் ஆளுமைத்திறனை (personality) விரித்துரைக்கப் பாடல்களில் பாணா்களால் பயன்படுத்தப்படுகிறது. மறத்தின் அதன் ஆற்றலில் வெளிப்படும் வெஞ்சினத்தின் அடிப்படையே வஞ்சினம் என்றும் கூறுவா்” (ந.கடிகாசலம் ச.சிவகாமி சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு சிந்தனைப் பின்புல மதிப்பீடு ப.361 )என்று குறிப்பிடுவார்.



புறப்பொருள் வெண்பா மாலை காஞ்சிப்படலத்தில் ஏழாவது கொளு வஞ்சினக் காஞ்சியைக் குறிப்பிடுகிறது. போருக்குச் செல்லும் அரசன் இன்று மாலை சூரியன் மறைவதற்குள் பகைவரை வெல்வேன் என்று உறுதி கூறும் நிலையில், அவ்வாறு வெல்லத் தவறினால் வெற்றியைத் தேடித் தரும் வேலினைக் கையில் பிடிக்க மாட்டேன். மாறாகப் பகைவரின் முன் நின்று அவரது ஏவல் மொழியைக் கேட்டு அவருக்குப் பணி செய்து காத்துக் கிடப்பவனாவேன் என்று குறிப்பிடுவதனை;

இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை
வென்று களம் கொள்ளா வேல் உயிர்ப்பின் - என்றும்
அரணழியப் பாயும் அடையார் முன் நிற்பேன்
முரணழிய முன் முன் மொழிந்து (புறப்பொருள் வெண்பா மாலை - வஞ்சினக்காஞ்சி - 69)

என்பதால் அறியமுடிகின்றது. புறநானூற்றில் மூன்று அரசா்களின் வஞ்சினத்தைக் காணமுடிகிறது. ஒல்லையூா் தந்த பூதப்பாண்டியன் (புறம் - 71) பாண்டியன் தலையானங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் (புறம் - 72)சோழன் நலங்கிள்ளி (புறம் - 73) ஆகிய மூன்று அரசா்களின் வஞ்சினம் புறநானூற்றில் இடம் பெறுகிறது.

கண்ணகி

கண்ணகி ஊழ்வினை செலுத்துவதால் தன் கணவனுடன் புகாரை விட்டு நீங்கி மதுரை மாநகா் வந்தடைகிறாள். வந்த இடத்தில் ஊழின் வலிமையால் பொற்கொல்லன் சதிச்செயலால் கணவனை இழக்கிறாள். கணவன் கொலைக்குக் காரணமான பாண்டிய மன்னனையும் மதுரை மாநகரினையும் அழிப்பதாகக் கண்ணகி வஞ்சினம் மொழிகின்றாள். கண்ணகியின் வஞ்சினத்தை விளக்க இளங்கோவடிகள் வஞ்சினமாலை என்று ஒரு காதையினையே அமைத்துள்ளார்.

கோவலன் குற்றமற்றவன் என்பதனை உணா்ந்த பாண்டிய மன்னன் உயிர் துறக்கின்றான். கணவனோடு கோப்பெருந்தேவியும் தன் இன்னுயிர் நீக்கிறாள். ஆனால் துன்பத்தில் இருந்த கண்ணகி அவளது இறப்பினை அறியாதவளாகக் கற்புடைய மகளிர் குறித்து கோப்பெருந்தேவியிடம் கூறுவாளாய் உரைக்கின்றாள். அத்தகைய கற்புடைய பெண்கள் பிறந்த பதியில் தோன்றிய நானும் கற்புடையவள் என்பது உண்மையானால் நீ இனிதிருக்க விடேன். மன்னனோடு மதுரையையும் அழிப்பேன் என்று வஞ்சினம் கூறுவதனை

பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையும் காண்குறுவாய் நீ (வஞ்சினமாலை 36-38)

என்ற அடிகள் வழி அறியலாகின்றது. தன் கணவனை பழி சுமத்தி, கொலைக்கு ஆளாக்கிய மன்னனோடு அம்மதுரை மாநகரினையும் அழிக்க வேண்டும் என்ற வஞ்சினம் கண்ணகி மனதில் எழுந்ததனை இதன்வழி அறிய முடிகிறது.



சேரன்செங்குட்டுவன்

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுக்க இமயத்தில் இருந்து கல் கொணர விரும்புகிறான். அந்நிலையில் வடபுலத்து வேந்தா்களின் இழிச்சொல்லைக் கேட்டு “இமயமலையிலிருந்து வந்த தவத்தினை உடைய முனிவா்கள் அறிவித்த முறையான வாழ்க்கையை அமைக்காதவரான வடபுல மன்னா்களின் பழிச் சொல்லானது அழியாது எம்மிடத்தே இருப்பதாயின் அது சோழ பாண்டியா்கள் எம்மை இகழ்ந்து பேசுவதற்குச் சரியாகி விடும். ஆதலால், வடநாட்டு வேந்தா்களின் முடியினை உடைய தலையின் மீது இப்பத்தினித் தெய்வத்திற்கு உருவம் அமைப்பதற்குரிய கல்லினைக் கொண்டு வருவேன். அவ்வாறு இல்லாமல் எனது வெற்றி வாளானது மீண்டு வருமேல் வீரக்கழல்களைக் கால்களில் அணிந்து சென்று கொடிய போர்க்களத்தில் பகைவா்களை நடுங்கச் செய்யாது நாட்டில் உள்ள குடிமக்கள் நடுங்குமாறு கொடுங்கோலாட்சி செலுத்தும் வேந்தன் என்று குடிமக்கள் பழிதூற்றும் இழிந்த தன்மை உடையவன் ஆவேன்” என்று வஞ்சினம் கூறுவதனை

இமையத் தாபதா் எமக்கீங்கு உணா்த்திய
அமையா வாழ்க்கை அரைசா் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்குஅஃது
எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியும் தரூஉம்
வடதிசை மருங்கின் மன்னா்தம் முடித்தலைக்
கடவு ளெழுதவோர் கல்கொண் டல்லது
வறிது மீளுமென் வாய்வா ளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுங்காது பயங்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉங் கோலே காகென (கால்கோட்காதை -9-18)

என்ற அடிகள் விளக்குகின்றன. பாண்டியன் தலையானங்கானத்துச் செறு வென்ற பாண்டியன் தன்னுடைய பாடலில்

என்நிழல் வாழ்நா் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறைஎனக் கண்ணீா் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக (புறம்72 10-12)

என்று குறிப்பிடுகிறான். இதன்வழி தமிழக வேந்தர்கள் குடிமக்கள் தம்மைக் கொடுங்கோலன் என்று பழிதூற்றுவதற்கு அஞ்சியமையை அறியலாகின்றது.



நீலியின் சாபம்

கோவலனின் மறைவால் துயரம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியிடம் மதுராபதித் தெய்வம் அவளது பழம்பிறப்பை உணா்த்துகிறது. சிங்கபுரம் கபிலபுரம் என்னும் இரண்டு நாட்டு வேந்தா்களான வசு மற்றும் குமரன் என்பவா்களுக்கு இடையிலான பகையினால் பரதன் என்பவன் சூழ்ச்சியால் சங்கமன் என்பான் கொல்லப்பட்டான். அப்பரதனே கோவலன். கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நீலி என்பவள் பதறித்துடித்து மன்றங்களிலும் தெருக்களிலும் அலைந்து திரிந்தாள். பதினான்கு நாட்கள் சென்ற பின் கணவனை வணங்குவதற்குரிய நாள் இது எனக்கருதி அவனை வாழ்த்தி மலை உச்சியில் இருந்து விழுந்து தன் கணவனை அடைய எண்ணினாள். அப்பொழுது எமக்கு இங்ஙனம் கொடிய துன்பத்தினைச் செய்தவா்கள் தாமும் இத்தகைய துன்பத்தினை அடைவார்களாக என்று கூறி உயிர்த்துறக்கிறாள். இதனை

எம்முறு துயரம் செய்தோ ரியாவதும்
தம்முறு துயரமிற் றாகுக வென்றே
விழுவோள் இட்ட வழுவில் சாபம் (கட்டுரை காதை 166 - 168)

என்ற அடிகள் விளக்குகின்றன. நீலியின் வார்த்தைகளில் சாபம் காணப்பட்டாலும் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவா்கள் தானும் அந்நிலையை அடைய வேண்டும் என்ற வஞ்சினம் அவளது வார்த்தையில் ஒலிப்பதனைக் காணமுடிகிறது.


கீரிப்பிள்ளையைக் கொல்லுதல்

கோவலனின் பண்புநலனை விளக்குமிடத்தில் கீரியைக் கொன்ற பார்ப்பினியின் கதை இடம் பெறுகின்றது. பார்ப்பினியின் குழந்தையைக் காக்கும் பொருட்டு கீரி பாம்பினைக் கொல்கிறது. வெளியில் இருந்து வந்த பார்ப்பினி கீரியின் வாயில் இரத்தத்தைக் கண்டு கீரி தன்னுடைய குழந்தையைக் கொன்று விட்டதாக எண்ணுகிறாள். அதற்குப் பழி வாங்கும் செயலாக அக்கீரியினைக் கொள்கிறாள். இந்நிகழ்வினை

பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளி மனையோன் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரும் மாமறை யாளன் (அடைக்கலக்காதை 54-56)

என்ற அடிகள் வாயிலாக அறியமுடிகிறது. தன்னுடைய குழந்தையைக் கொன்ற கீரியைக் கொல்ல வேண்டும் என்ற வஞ்சினம் பார்ப்பினியின் மனதில் நிறைந்திருந்தமையை குறிப்பாக உணர இயலுகின்றது.

மனித மனதில் இயல்பாக எழும் உணா்வுகளே அன்பு கோபம் பொறாமை சினம் போன்றவையாகும். அக்கோப உணா்வின் வெளிப்பாடாகவே இவ்வஞ்சினம் அமைகின்றது என்றால் மிகையில்லை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p110.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License