இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

இலக்கியங்களில் மனித உரிமைகள் குறித்த கருத்தியல்கள்

முனைவர் பா. தமிழரசி


இன்றைய உலகில் மனிதஉரிமைகள் மிகவும் இன்றியமையாதவொன்று. ஓர் அரசாங்கத்தின் செயல்பாட்டினை அளவிடும் ஓர் அளவுகோலாக இன்று மனித உரிமைகள் காணப்படுகின்றன.

வரலாறு

ஐரோப்பிய நாடுகளில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக மனித உரிமைகளைப் பற்றிய தத்துவரீதியான, தர்க்கரீதியான விவாதங்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் ஒரு சமுதாயத்திற்கு எத்தகைய அரசியல் பண்புகள் மற்றும் நடத்தைகள் வேண்டும் என்பதை ஆளும் உயர்குடியைச் சார்ந்தவர்களே தீர்மானம் செய்கின்றனர்.

மனிதனின் ‘இயற்கைஉரிமை’ என்ற வாதத்திலிந்துதான் இன்றைய மனித உரிமை தோன்றியதாகச் சிலர் கூறுவர். கிரேக்கத் தத்துவஞானியான அரிஸ்டாட்டில் இயற்கை உரிமையினைப் பற்றி முதன் முதலில் கூறியவர் ஆவார்.

இன்றைய நூற்றாண்டில் மனித உரிமைகள் ஐந்து பின்புலங்களைக் கொண்டுள்ளது.

1. இயற்கை உரிமை

2. சட்டம்

3. சமூகத் தேவைகள்

4. தனிமனித ஆளுமை

5. சமூக ஒழுக்க மாண்புகள்.

இயற்கை உரிமை

பெண்ணிற்குரிய இயற்கை உரிமை காலங்காலமாக மறுக்கப்பட்டிருக்கின்றது. கணவன் மனம் கோணாமல் சமைத்துப் போட்டுக் கொண்டும், சந்தோசத்தைத் தந்து கொண்டுமிருந்தால் மட்டுமே கற்புக்கரசியாகப் பட்டம் பெற முடியும். இவ்விதத்தில் கணவன் எப்படிப்பட்டவனாக இருப்பினும், தம் பதிவிரதா தர்மம் காக்கப்பட வேண்டுமெனில், அவனுடன் ஒட்ட ஒழுக வேண்டும். அதுவே இல்லற தர்மம் என்பதாக நாலடியார் வழிப்படுத்துவதுடன் ‘பெண்ணிற்கு என தனித்த சுயம்’ என்பதைக் கூட மறுத்தொதுக்கியும் விடுகிறது. சான்றாக,

“கடக்கருங் கானத்துக் காளையின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி, சுடர்த்தொடிகு!
பெற்றான்னொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு” ( நாலடி . 398)

என்ற பாடலில் தவைனுடன் நாளை எவ்வாறு தொலைதூரம் நடந்து செல்வாய் என்று கேட்ட தோழிக்குத் தலைவியானவள், குதிரையைப் பெற்ற ஒருவன் அதைப் பெற்ற அப்பொழுதே அதில் ஏறி நடத்தும் முறையையும் அறிந்தவனே அல்லனோ என்று பதில் தருகிறாள்.

இப்பாடல் வழி நடத்தப்பட வேண்டியவள் பெண், வழி நடத்துபவன் ஆண் என்ற கருத்தாக்கத்தையும் முன் வைக்கிறது.



தனிமனித ஆளுமை

ஒரு மனிதன் தனது சுற்றுச்சூழலோடு உறவுகொள்ளும் சிறப்பான முறையை உருவாக்கும் அவரது சிந்தனை, உணர்வுகள், நடத்தை ஆகியவற்றின் ஒட்டுமொத்தமே அவரது ஆளுமைப்பண்பு என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

* ஆளுமைப்பண்பு மேம்பட வேண்டுமானால் நமது மனப்பாங்கு நேர்முகமாக அமைய வேண்டும்.

* பிறர்பால் நட்புணர்வு கொள்ள வேண்டும்.

* அல்லல்படுபவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டும்.

* இயன்ற அளவு அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.

* பிறர் மகழ்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளாது அதில் நாம் பங்கு கொள்ளவேண்டும்.

ஸ்கின்னரின் நடத்தைக் கோட்பாடு

சூழ்நிலைக்கேற்ப மனிதனின் செயல்பாடு மாறுபடுகிறது, நிலைநிறுத்தப்படுகிறது என்பதை விளக்குவதே ஸ்கின்னரின் நடத்தைக் கோட்பாடு ஆகும். ஒரு நடத்தையை வலியுறுத்தவோ அல்லது மாற்றவோ தேவையான தூண்டலை சூழல் அளிக்கிறது. அந்தத் தூண்டல் பரிசாகவோ, தண்டனையாகவோ இருக்கலாம். தண்டனையால் குறிப்பிட்ட விரும்பத்தகாத நடத்தையை நிறுத்தி விடலாம்.

“கழனிமாஅத்துவிளைந்துஉகுதீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறிதம்இல்
கையும் காலும் தூக்கத்தூக்கும்
ஆடிப்பாவைப் போல
மேவனசெய்யும்,தன் புதல்வன் தாய்க்கே.” (குறுந். 8)

தலைவனின் விரும்பத்தகாத நடத்தையை இப்பாடல் பதிவுசெய்துள்ளது. தன்னிச்சையாகச் செயல்படும் போது வெளிப்படாத நடத்தை நெறிப்படுத்தலால் சாத்தியமாகும். தலைவனின் இழிவான நடத்தை பரத்தையால் எள்ளலுக்கு உள்ளாகும் போது நெறிப்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நன்னடத்தையையும் நெறிப்படுத்தி வலியுறுத்தி வந்தால் ஒரு கட்டத்தில் அது மனிதரிடம் நிலை கொண்டுவிடும் என்கிறார் உளவியல் அறிஞர் ஸ்கின்னர். பரத்தையின் உரிமை பறிபோகும் சூழலில் தலைவனை இழிவுக்குள்ளாக்கும் செயலில் ஈடுபடுகிறாள்.



சமூகத் தேவைகள்

போர்க்காலச் சமூகத்தில் அரசன் மண்ணைக் காக்கும் பொருட்டு பொருளாதாரா ரீதியாகவும், தொழில் நுட்பத்தின் வாயிலாகவும் மனிதனை மூலதனமாகக் கருதிப் பணி நியமனம் செய்தான். இதற்கு அடுத்த நிலையில் சமுதாயவியல் அக்கரையோடு பணி நியமனம் செய்ய வேண்டிய சூழல் அக்காலச் சமூகத்தில் நிலவியது. வள்ளுவர்,

“குடிப்பிறந்துகுற்றத்தின் நீங்கவடுப்பரியும்
நாணுடையான் கட்டேதெளிவு” (குறள் - 502)

என்றகுறளில், நல்லகுடியில் பிறந்தவனா, குற்றத்திற்கும் பழிச் சொல்லிற்கும் நாணம் உடையவனா என்று அறிந்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்கிறார். இதனை நடப்புக் காலத்தில் வர்க்கமுரண்பாடு என்கின்றனர். இன்று இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரப் பின்புலத்தில் சாதியை வகைப்படுத்திப் பிரிக்கப்பட்டது. ஆனால் முன்னோடிய காலங்களில் ஒருகுறிப்பிட்ட இனக்குழு பிற இனக்குழுவோடு இணைந்து வாழும் வாய்ப்பு அதிகமில்லை. எப்படி‘அந்தணர் என்போர் அறவோர்’ என்ற கருத்து முகிழ்ந்ததோ அது போல் பணிநியமனத்திற்கு குடிப்பிறப்பிற்கு அவசியமென்று கருதியிருக்கிறார். பண்டைக் காலம் முதல் நடப்புக் காலம் வரை பணி நியமனத்தில் அரசியல் குறுக்கீடு நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதை மாற்றவோ, மறைக்கவோ முடியாது.

சமூக ஒழுக்க மாண்புகள்

மனிதனின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக ஒழுக்கம் கட்டமைக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றது. இவ்வித நிகழ்வுகள் இயங்கியல் தன்மை கொண்டதாக இருப்பதால், இவை மரபுரீதியான கருத்தாக்கமாக மாறுகின்றன. காலச் சுழற்சியில் மனிதனை எடை போடும் தளமாக மாறியது. இவ்விதத் தளத்தில் இயங்குவதற்று மனிதன் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்நிலையில் இயங்கும் மனிதனின் செயல்பாடுகளைக் கொண்டு சமூகம் அவனை ஒழுக்கம் சார்ந்தவன், ஒழுக்கம் சாராதவன் என்று மதிப்பிடுகின்றது.

இதனை லீய்ட்டன் “ ஒரு பொது நோக்கை நோக்கி நிலையாகவும் உறுதியாகவும் ஒரு சேர ஈர்க்கும் மனிதக் குழுவின் ஆற்றலே ஒமுக்கம் எனப்படும்” (1) என்கிறார்.

மனிதனை அடையாளப்படுத்தும் கூறுகளில் இல்வாழ்க்கை என்பது ஒன்றாகும். இவ்வித வாழ்க்கையில் முதன்மைப்படுத்தப்படுபவள் பெண். ஆகையால் பெண்ணை மனைத்தக்க மாண்புடையாள் என்கிறார் வள்ளுவர். இவர் இல்லறத்தில் உடைமைப் பொருளாக்கப்படுவதுடன் கணவனின் தனிச் சொத்தாகக் கட்டமைக்கப்படுகிறாள். இக்கருத்தானது நடப்புக் காலத்திலும் இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு நிகழ்வாகும். காலந்தோறும் பெண் நுகர்வுப் பொருளாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதன் வழி திருவள்ளுவர் பெண்களுக்கான ஒழுக்க நெறிகளை வரையறை செய்வதற்கு முற்படுகிறார். இவ்வித ஒழுக்க நெறிகள் பெண்களிடம் “ நிறை காக்கும் காப்பே காப்பு “ என்று காக்கப்பட்டு போற்றப்பட்டன. இவ்விதச் செயல்பாடுகளுக்குக் காரணம் யாதெனில், பெண் இனத்தின் மீதான ஆண் இனத்தின் நுகர்வுச் செயல்பாடு எல்லை மீறிய நிலையில் இவை தொடர்பான ஒழுக்க நெறிகள் குறித்த விழிப்புணர்வு நடப்புக் காலத்திலும் தேவைப்படுகிறது. வள்ளுவர் இதனை,

“பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்” (குறள்- 146)

என்ற குறளில், பிறன் மனைவியிடம் நெறி கடந்து செல்பவன் பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு வகையான குற்றத்திற்கும் ஆட்படுவான் என்ற கருத்தை முன்வைக்கிறார். ஒழுக்கம் சார்ந்த கருத்தியல் கொண்டு இதனை அணுகும் போது குற்றம் நீங்கிய வாழ்க்கை முறைகள் கொண்டு வாழ்பவன் சமுதாயம், இனம் ஆகியவற்றில் மேம்பாடு அடைகிறான் என்பதை அறியமுடிகிறது.



மனித உரிமை மீறலுக்கான காரணங்கள்

* மதவெறி

* இனவெறி

* சாதி வெறி

* அரசியல் காரணங்கள்

* பொருளாதாரக் காரணங்கள்

* சித்தாந்தப் பாகுபாடு

* எல்லை மீறல்

* பதவி போட்டிக்கான பிரச்சினை

* சுயநலம் போன்றவை

மனித உரிமையின் இன்றைய நிலை

மனித உரிமையின் இன்றைய நிலை மிகவும் மோசமானதாகவும் கொடியதாகவும் உள்ளது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறப் போராட்டங்களும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

குறிப்புகள்

1. இலக்கியமும் நவீன வாசிப்பும் - சரவணஜோதி, சீ., ப.45

2. ம. திருமலை, ஒப்பிலக்கியம் கொள்மைகளும் பயில் முறைகளும், ப.212

3. க. கைலாசதி, பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், ப. 120.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p116.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License