இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கியத்தில் குற்றமும் தண்டனையும்

பி. துரைமுருகன்


‘ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது (பிளேட்டோ). ஆகவே, அது சரியாக வழங்கப்பட்டால்தான் சமுதாய நலன்கள் பெருகி நிற்கும்’ (1) எனும் நிலையைச் சங்கப் பாடல்களின் வழி காணலாம். பண்பட்ட சமூகங்களிலேயே நெறிப்பட்ட வாழ்க்கை முறையும், சீரிய விழுமியங்களும் சமூக அறங்களும் காணப்படும் எனும் நிலையில் சங்கச் சமூகம் இத்தகைய இயல்புடையதாய் விளங்கி வந்துள்ளது. திட்டமிட்ட நிர்வாக அமைப்புகள் பலவற்றைக் கொண்டதாக பண்டை அரசுகள் நிலவி வந்துள்ளன என்பதற்கு வேந்தர் பற்றிய சங்கப் பாடல்கள் சான்றாகின்றன. நீதி வழங்குதலில் நிறுவன வயப்பட்ட அமைப்பு அக்காலத்தே நிலவி வந்துள்ளது. இதன் அடிப்படையில் சங்க காலத்தில் வழக்கிலிருந்த குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள் எங்ஙனம் இருந்தன என்பதை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

‘முடியாட்சி முறை நிலவி வந்த சங்க காலத்தில் இன்றைய நாளில் விளங்கி வரும் குடியாட்சி அமைப்பின் உறுப்புகளாகக் கருதப்படும் சட்டமியற்றல், நிருவகித்தல், நீதி வழங்குதல் என்னும் மூன்றிற்கும் மன்னனே தலைவனாக அமைந்திருந்தான். மன்னனின் விருப்பங்களே நாட்டின் ஆணைகளாக உருப்பெற்றன. மன்னனின் ஆணைகளே அன்றைய நாளில் வலிமை மிகு சட்டங்களாகக் கொள்ளப்பட்டன. நாட்டில் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநிறுத்துவதற்குத் தேவையெழும் நேரங்களில் எல்லாம் மன்னன் ஆணைகளைப் பிறப்பித்து வந்தான். நாட்டின் அனைத்து அதிகாரங்களும் மன்னனிடத்தில் குவிந்திருந்தன’ (2). நீதி வழங்குவதற்காக அறங்கூறு அவையம் இருந்தது. (3) இதுவன்றி ஊரவை, அரசவை ஆகிய அமைப்புகளும் நீதி வழங்குவதில் முதன்மை பெற்றிருந்தன. அறங்கூறவையத்தில் குற்றம் நீங்கிய சான்றோர் இருந்தனரென்பதை மதுரைக்காஞ்சி (4) குறிப்பிடும். இவ்வாறு அறங்கூறும் அவையமும், நீதியுரைக்கும் சான்றோரும் பண்டு இருந்தனர் என்பதைக் கொண்டு அக்காலத்தில் குற்றங்களும் இருந்து வந்ததென்பதை உணரலாம்.



குற்றம்

‘சமுதாயத்தில் உறுப்பினராக வாழும் மக்கள் தங்கள் வலிமையைப் பிறருக்கு எதிராகப் பயன்படுத்த முற்பட்ட போது அது குற்றம் என்று கருதப்பட்டது. ஒருவர் தன் நலனைப் பேணுவதற்காக அடுத்தவரின் உயிர், உடல், உடைமை முதலியவற்றிற்குத் தீங்கிழைக்கும் செயலை இன்று குற்றம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்’ (5)

சமுதாயம், எல்லோரும் ஒழுக வேண்டியனவாகச் சில பொது நெறிகளை வகுத்துத் தந்துள்ளது. இத்தகைய நெறிக்கு மாறுபட நடப்பது குற்றம் எனப் பொருள் கொள்ளலாம்.

சங்க இலக்கியங்களில் குற்றங்கள்

சங்க இலக்கியங்கள் தமிழரின் பல்வேறுபட்ட வாழ்வியலைப் பேசுகின்றன. ஆயினும் குற்றங்கள் அவற்றிற்கான தண்டனைகள் குறித்து விரிவாகச் சுட்டவில்லை.

"ஆன்முலை அறுத்த அறினிலோர்க்கும்
மாணிழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பியகொடுமையோர்க்கும்"
(6)

என முறையே ஆன்முலையறுத்தல், மகளிரின் கருவைச் சிதைத்தல், பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் என்பனவற்றைக் குற்றங்களாகக் கருதியமை புலப்படும். மேற்காட்டிய பாடலின் இறுதியடிகள்,

"வழுவாய் மருங்கின் கழுவாயும் உளவென
நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடிற்றே ஆயிழை கணவ”
(7)

என்கின்றன.



அதாவது மேற்குறித்த குற்றங்களைப் போக்கிக் கொள்ளக் கழுவாய் உண்டென்றும், செய்ந்நன்றி கொன்ற குற்றத்திற்குக் கழுவாய் இல்லையென்றும் குறிப்பிடுகின்றன.

‘இப்பாட்டில் செய்த குற்றத்திற்கேற்ற தண்டம் வழங்கும் தமிழ் மரபிற்கு மாற்றாகக் குற்றம் செய்தோரின் வருணத்திற்கேற்பத் தண்டம் வழங்கும் அயல் வழக்கம் பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் என்ற அடியாற் புலனாகும். தமிழறங்கூறும் ஒரு பாடலில் இவ்வடி பின்வந்தாரால் சேர்க்கப்பட்டது என்றும், குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் என்றே இவ்வடி இருக்க வேண்டுமென்றும் அறிஞர் கருதுதல் பொருத்தமேயாம்’ (8)

வேற்றரசன் பொருட்டு ஒற்று வருதல் குற்றமாகக் கருதப்பட்டுள்ளது. புறநானூற்றின் 47ஆம் பாடலுக்கான அடிக்குறிப்பு.

‘சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தான் என்று கொல்லப் புக்குழி கோவூர்க்கிழார் உய்யக்கொண்டது’ என அமைந்துள்ளமை கொண்டு ஒற்றுவருதல் குற்றமாக எண்ணப்பட்ட தென்றறியலாம்.

"மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
புனல் தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு"
(9)

எனும் குறுந்தொகையடிகள் நன்னன் என்பானின் மாமரத்திலிருந்து விழுந்து நீரில் மிதந்து வந்த மாங்காயைத் தின்ற கோசர்குலப் பெண் குற்ற மிழைத்தவளாகக் கருதப்பட்டதை உரைக்கின்றன.

பெண்ணோடு உறவு கொண்டு பின்னர் அவளை அறியேன் என ஒதுக்குவது பண்டைத் தமிழகத்தில் குற்றமாக எண்ணப்பட்டுள்ளமையையும் அவ்வாறு செய்தவன் அறனிலாளன் எனத் தூற்றப்பட்டதையும்,

"தொல்புகழ் நிறைந்த பல்பூங்கழனி
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற"
(10)

அகநானூறு குறிப்பிடுகிறது. இவையன்றி வேறு குற்றங்கள் எனும் நிலையில் சங்கப் பாடல்களில் சான்றுகள் இல்லை.

தண்டனைகள்

சங்கப் பாடல்களில் குற்றங்கள் குறித்து மிகுதியான பதிவுகள் இல்லையெனினும் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் நடைமுறை இருந்துள்ளது. சாட்சிகள் குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கும், பொய் சாட்சிகள் சொல்லப்பட்டன என்பதற்கும் சான்றுகள் காணப்படுகின்றன.

"அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை" (11)

"அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே" (12)

"திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்" (13)

எனும் பாடலடிகள் உண்மையை மறைத்துப் பொய்யுரைக்கும் நிலையைத் தெளிவுறக் காட்டுகின்றன.



பொய் சாட்சி கூறியவன் கீழே தங்கியதால் மரம் பட்டுப்போய் கவினிழந்ததைக் கலித்தொகை,

"கரிபொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின்வாடி
எரிபொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் கொல்லோ"
(14)

என உவமையாகச் சுட்டுகிறது.

உயிரைப் பறித்தலே குற்றங்களுக்கான அதிகபட்சத் தண்டனையெனச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. ‘தண்டனை முறையின் அடிப்படை நோக் கம் குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதாகும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படும்போது முதல்நிலையில் அக்குற்றவாளி மீண்டும் அக்குற்றத்தைச் செய்தல் கூடாது. அடுத்த நிலையில், ஒரு குற்றவாளி தண்டிக்கப்படுவதைக் கண்டு சமுதாயத்தில் மற்றவர்களும் அக்குற்றத்தைச் செய்தல் கூடாது’ (15) எனும் நோக்கங்களின் அடிப்படையிலேயே சங்ககால தண்டனை முறைகளும் இருந்துள்ளன.

மாங்காயை உண்ட பெண், அக்குற்றத்திற்காக தன்னிறையளவு செய்யப்பட்ட படிமையை எண்பத்தொரு களிறுகளொடு கொடுத்தும் ஏற்காத நன்னன் அப்பெண்ணைக் கொன்றமையை,

“ஒன்பதிற்று - ஒன்பது களிற்றொடு அவள்நிறை
பொன் செய் பாவை கொடுப்பதும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன்”
(16)

எனக் குறுந்தொகை விளக்கும்.

பெண்ணின் நலம் நுகர்ந்து அவளை அறியேன் எனக் கூறிய ஆடவனின் அப்பெண்ணுடனான உறவை அறிந்தார்வாய்க் கேட்டறிந்த அவையத்தார், அவரது அடாச் செயலை உண்மையெனத் தெளிந்து அவனை, தளிர்கள் கொண்ட பெரிய மரத்தின் கவர்த்த கிளையில் இறுகக் கட்டி வைத்துத் தலையில் சாம்பலைப் பெய்து தண்டித்தமையை,

“முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை”
(17)

எனும் பாடலடிகள் விளக்கக் காணலாம்.


முடிவுரை

* சங்கச் சமூகம் பல்வேறு விழுமிய தகவுகளைக் கொண்டதாக இருப்பினும், அச்சமூகத்திலும் சமூக ஒழுங்கிற்கு மாறுபட்டோரும் சமூக நெறிமுறைகளை மீறுவோரும் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு அக்காலத்தில் காணப்பெற்ற குற்றங்களும் தண்டனைகளும் சான்று கூறுகின்றன.

* நீதி வழங்குவதற்கென்று ஊரவைகள், மன்றங்கள், அரசவை எனும் அவையங்கள் இருந்துள்ளமையால் சமூக ஒழுங்கிற்காக வரையறுத்துக் கொள்ளப்பட்ட நெறிமுறைகள் இருந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

* சங்கப் பாடல்கள் காட்டும் குற்றங்கள் என்பவை சமூகத்தின் அடித்தளத்திலும் அரசு எனும் நிறுவனம் சார்ந்த நிலையிலும் இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது.

* அரச நலனோடு தொடர்புடைய குற்றங்களுக்கு மரண தண்டனையும், பிற குற்றங்களுக்கு எளிய முறையிலான தண்டனைகளும் வழங்கப் பெற்றுள்ளன என்பதையும் அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கம்

1. இராஜ முத்திருளாண்டி, இலக்கியத்தில் இராஜமுத்திருளாண்டி, ப. 39

2. முத்துவேலு, மு., தமிழ் இலக்கியத்தில் சட்டநெறிகள், ப. 2

3. மதுரைக்காஞ்சி, பா. 492

4. மதுரைக்காஞ்சி, ப. 489 - 492

5. முத்துவேலு, மு., தமிழ் இலக்கியத்தில் சட்டநெறிகள், ப. 68

6. புறநானூறு, பா. 34 : 1 - 3

7. புறநானூறு, பா. 4 - 7

8. பாலசுப்பிரமணியன், கு.வெ., சங்க இலக்கியத்தில் புறப்பொருள், பக். 145 - 146

9. குறுந்தொகை, பா. 292 : 1 - 2

10. அகநானூறு, பா. 256 : 14 - 17

11. குறுந்தொகை, பா. 184 : 1

12. நற்றிணை, பா. 196 : 9

13. அகநானூறு, பா. 256 : 18

14. 34 : 10 - 11

15. முத்துவேலு, மு., தமிழ் இலக்கியத்தில் சட்டநெறிகள், ப. 81

16. குறுந்தொகை, பா. 292 : 3 - 5

17. அகநானூறு, பா. 256 : 19 - 20

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p129.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License