இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

எட்டுத்தொகை அக இலக்கியங்களில் அகத்தொடர்புகள்

முனைவர் பொ. இராதாஜெயலட்சுமி

முன்னுரை

அகம் என்பது உள்ளத்தைக் குறிக்கின்றது. உள்ளத்தால் உணரப்பட்டு பிறரிடம் வெளிப்படுத்த இயலாது உள்ளத்திற்குள் நிகழும் தொடர்பு அகத்தொடர்பாகும். மனிதர்களின் சிந்தனை மற்றும் எண்ணத்தின் விளைநிலமாக உள்ளம் திகழ்கின்றது. இவ்வுள்ளம் பல ஆற்றல்களை உள்ளடக்கிய நுண்பொருளாகும். புறத்தில் நிகழும் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள் உள்ளம் சார்ந்தே நிகழ்கின்றது. இவ்வாறு உள்ளம் சார்ந்து நிகழக்கூடிய உள்ளுணர்வுகளைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய எட்டுத்தொகையில் இடம் பெற்றுள்ள அக நூல்களாகிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள அகத்தொடர்புகளை ஆய்வு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

அகம்

அகம் என்ற சொல்லிற்கு உள், மனம், மார்பு, ஞானம், வீடு, பூமி, ஆழம் என்று பலவகையான பொருள்களை அகராதிகள் குறிப்பிடுகின்றன.

“அகப்பொருளாவது, போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன்தானே அறிதலின் அகம்” என்று தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறுகின்றது.

ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்று நச்சினார்க்கினியர் விளக்கமளிக்கின்றார்.

அக இலக்கியங்களில் தலைவன் தலைவி இருவரிடையே தோன்றும் உணர்வுகளை அகவுணர்வுகள் என்றும், இவ்வுணர்வுகளால் நிகழும் தொடர்புகளை அகத்தொடர்புகள் என்றும், இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக அமைவது பாலுணர்வு என்றும் சங்க இலக்கியங்கள் வரையறை செய்கின்றன. பாலுணர்வு உள்ளம் சார்ந்தவையாக இருப்பினும் அவற்றிற்கான தூண்டுதல்கள் உடல் வழியில்தான் நிகழ்கின்றன. உடல் மன வளர்ச்சியின் பிரதிபலிப்பாய் ஏற்படும் உணர்ச்சி மற்றும் நடத்தைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அவற்றை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அவ்வுணர்வுகள் அமுக்கத்திற்கு உள்ளாகி நனவின் தற்காப்புச் செயலுக்குக் கட்டுப்பாடு அடங்கி நடக்கிறது. இவ்வாறு அமுக்கத்திற்கு உள்ளாகிய உணர்வுகள் உள்ளத்திற்குள் தோன்றும் மகிழ்ச்சி, சினம், இரக்கம், அன்பு இன்னும் பிற உணர்வுகள் மற்றும் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டினாலும், முகக் குறிப்பினாலும், உடல் உறுப்புகளின் அசைவுகளினாலும் வெளிப்படுகின்றன. இவற்றைத் தொல்காப்பியர் ‘மெய்ப்பாடு’ என்று குறிப்பிடுகின்றார். இம்மெய்ப்பாடு எட்டு வகைப்படும் என்பதை,

“நகையே அழுகை இலிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”
(தொல் பொருள் - நூற்பா - 247)

என்ற நூற்பா வழி அறிய முடிகிறது.



அகத்தொடர்பு

மக்களின் வாழ்வைக் கருவாகக் கொண்டு அமைந்த அக இலக்கியங்களில் தலைவன், தலைவி என்று பொதுப் பெயராலேயே குறிக்கப்படுகின்றனர். ஏனெனில் அக வாழ்வு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். ஒத்த வயதும், தோற்றப் பொலிவும், உணர்வும் உடைய ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஒருவர் பால் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டு அகத்துள்ளேயே தொடர்பு நிகழும். இவ்வாறு ஈர்ப்பு ஏற்பட்டுத் தொடர்பு நிகழும் போது, அது காதலாக மலர்கிறது. அவ்வாறு மலரும் போது நண்பர்களின் வாயிலாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கூடி மகிழ்வர். இவ்வாறு உணர்வொத்து காதலில் இணைந்த காதலர்கள் இன்பம், துன்பம் ஆகிய இரு நிலைகளிலும் இணைந்தே இருப்பார்கள். சான்றாக,

“பிறப்பே குடிமை, ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறைய யருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”
(தொல் பொருள் - நூற்பா - 269)

என்ற தொல்காப்பிய நூற்பா அமைகின்றது.

இவ்வாறு கூடியிருந்து பிரிதல் பொருட்டு, தலைவன் பிரிவால் தலைவியோ, தலைவியின் பிரிவை எண்ணித் தலைவனோ வருந்தும், தன் நெஞ்சிற்கு வருத்தம் நீங்கும் வகையில் அறிவுரையோ ஆறுதலோ கூறுவதாகும். தனக்குள்ளேயே நிகழக்கூடிய இத்தொடர்பை அக இலக்கியங்கள் அகத் தொடர்பு என்று சுட்டுகின்றன.

நற்றிணையில் அகத்தொடர்பு

தலைவியின் அழகில் மதி மயங்கிய தலைவனுக்கு, அவள் நினைவு மீண்டும் மீண்டும் காமத்தைத் தூண்ட அது நோயாக உருப்பெற்றது. அவ்வாறு தோன்றிய காம நோய்க்கு தலைவி விருந்தாக அமையாததால் பலவாறு வருந்திப் புலம்பிய நெஞ்சிற்கு,

“அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே”
(நற்றிணை பா.எ - 140)

என்று தலைவன் கூறுவதாகச் சுட்டப்பட்டுள்ளது.

நெஞ்சே தலைவியை இழித்தும், பழித்தும் எண்ணிவிடாதே. எனக்கு ஏற்பட்ட நோய்க்குத் தலைவியே மருந்து என்று தலைவன் தனக்குள்ளேயே தொடர்பு கொள்வதாக அமைந்துள்ளது.



குறுந்தொகையில் அகத்தொடர்பு

காதலுக்கு நாடு, மொழி, இனம் எதுவும் தடையில்லை என்பதை உணர்த்தக் குறுந்தொகைத் தலைவி முடங்கிக் கிடந்து, துன்பப்படுவதை விட முயன்று எழுந்து வெற்றி பெறுவதே மேலென்று எண்ணி,

“வல்வேற் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே”
(குறுந்தொகை பா.எ . 11)

என்று தன் நெஞ்சைத் தலைவனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சங்கு வளையல்கள் நெகிழ்ந்து விழுமாறு தவிக்க விட்டுவிட்டுத் தலைவன் பொருள் தேடச் சென்றுவிட்ட ஒவ்வொரு நாளும், உறக்கமில்லாமல் கலங்கிய கண்ணோடு தனிமைத் துயரால் வருந்திக் கிடக்கக் கூடாது. இப்பொழுதே முற்பட்டு எழுந்து நம் தலைவன் வேற்று மொழி பேசக் கூடிய நாட்டிற்குச் சென்றிருந்தாலும் சரி, அங்கு சென்றடைவதே சிறப்பென்று தலைவி தன் நெஞ்சை ஆற்றுப்படுத்துகிறாள்.

ஐங்குறுநூற்றில் அகத்தொடர்பு

தலைவியைக் காப்பதே உயிரினும் மேலானது என்று உலகைப் பற்றிக் கவலை கொள்ளாது, பொருள் தேட காட்டு வழியில் நெடுந்தொலைவு சென்ற தலைவன் மேலும் செல்லாது மீளக்கருதித் தன் நெஞ்சிடம்,

“அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்
கதிர் தெறு வெஞ் சுரம் நினைக்கும்,
அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே”
(ஐங்குறுநூறு - பா. எ - 330)

என்று கூறுவதாக அமைந்துள்ளது. நம் காதலி நாம் சென்ற காட்டு வழியின் கொடுமைகளை எண்ணி கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பாள். நாம் கடமை கருதி மேலும் நெடுந்தொலைவு பிரிந்து சென்றால், நம் பிரிவிற்காக வருந்தும் போது, அவள் அழகு நலன்கள் கெட்டுவிடும் உலகைப் பற்றிக் கவலை கொள்ளாது, தலைவியின் உறுப்புநலன்களைப் பாதுகாப்பதே நம் கடமை என்று தலைவன் கூறுகிறான்.



கலித்தொகையில் அகத்தொடர்பு

மனித வாழ்விற்கு நம்பிக்கையே மூலதனமாகும். அவ்வகையில் தலைவன் தன்னோடு கூடி மகிழ்ந்திருந்து நீங்கிய பின் வருந்திய தலைவி தன் நெஞ்சிற்கு அவன் தன்மையை எடுத்துக் கூறி நம்பிக்கையூட்டுவதை,

“ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ -
ஓர்வு உற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்
அறம்புரி நெஞ்சத்தவன்”
(கலித்தொகை - பா.எ - 42)

என்ற பாடல் புலப்படுத்துகிறது.

நம் தலைவன் தன்னுடைய கொடைத் தன்மையை அறிந்து நாடி வந்தவர்களுக்குத் தனது தேரையும் கொடுக்கக் கூடிய கைகளை உடையவன். இவ்வளவு மென்மையான உள்ளம் கொண்ட நம் தலைவன் காம நோயால் வருந்தித் தவிக்கும் அளவிற்கு நம்மை மணந்து கொள்ளாமல் காலம் தாழ்த்தமாட்டான் என்று வருந்தும் தன் நெஞ்சிற்கு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.

அகநானூற்றில் அகத்தொடர்பு

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்த நெஞ்சம் பொருள் தேடத் தூண்டுகிறது. ஆனால், தலைவனோ பொருளை எப்பொழுது வேண்டுமானாலும் தேடிப் பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணியவனாய் தன் நெஞ்சிடம்,

“நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் - வாழிய நெஞ்சே!”
(அகநானூறு - பா.எ - 77)

என்று கூறுகிறான்.

நெஞ்சமே! நம் தலைவியின் நெற்றியில் பசலை படர பிரிந்து சென்று, பொருளீட்ட எண்ணிக் காட்டையும் கடந்து செல்வது நன்று என நினைத்தாயானால், நீ எனக்குக் கேடு நினைத்ததாய் ஆகிவிடும். ஆதலால், நீ எனக்குக் கேடு நினைக்காமல் வாழ்வாயாக என்று கூறுவதாக அமைந்துள்ளது.

முடிவுரை

உணர்வுகள் என்பது எப்போதும் எக்காலத்தும் மாறாத ஒன்றாகும். சங்கச் சான்றோர்கள் வீரம், நம்பிக்கை, உறுதி, முயற்சி, கடமையைக் கண்னெனப் போற்றிய திறம், உள்ளுணர்வுக்கு மதிப்பளித்தச் சிறப்பு இவையெல்லாம் நம்மை சிந்தை நெகிழ வைக்கின்றன. இவ்வாறு சங்கச் சான்றோர்கள் வாழ்ந்து அனுபவித்து உணர்ந்த உண்மைகளையும் உணர்வுகளையும் பதிவு செய்து வைத்து சென்றுள்ளனர். அவை இன்று சங்க இலக்கியங்களாக மிளிர்கின்றன என்பதை அறிய முடிகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p133.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License