இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

மருதத்திணையில் நகை மெய்ப்பாடு

கி. ச. புனிதவதி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,
காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605008.


மற்றும்


முனைவர் வேல். கார்த்திகேயன்
இணைப் பேராசிரியர் & நெறியாளர், தமிழியல் துறை,
காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605008.


முன்னுரை

வயலும் வயல் சார்ந்த பகுதியில் நிகழும் தலைவன், தலைவியின் வாழ்க்கைச் சூழல்கள் மருதத்திணையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. வயலும் வைகறைப் பொழுதும் முதற்பொருட்களாகவும், மருதம், காஞ்சி, தாமரை, உழவுத்தொழில் முதலியன கருப்பொருட்களாகவும். ஊடல் உரிப்பொருளாகவும் உள்ளன. இவ் ஊடல் உரிப்பொருள் சிறக்க எண்வகை மெய்ப்பாட்டு உணர்வுடன் படிப்போர்க்கு உவமை வழி உணர்த்திட சங்கப் புலவர்களால் பாடப்பட்டுள்ளன. சங்க அகப்பாடல்களில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் உள்ள மருதத்திணைப் பாடல்களில், இவ் எண்வகை மெய்ப்பாட்டில் நகை மெய்ப்பாட்டிற்கு உவமை பயன்பட்டுள்ள நிலையில் அவற்றின் பயன்பாட்டினையும், சிறப்பினையும் ஆராய்வதாய் இக்கட்டுரை அமைகின்றது.

மருதத்திணையில் நகை மெய்ப்பாடு

மருதத்திணையில் நகை மெய்ப்பாடு பரத்தை, தலைவி, உறவினர் கேட்பக் கூறும்போதும், தோழி தலைவனுக்கு வாயில் மறுக்கும் போதும், தலைவி தலைவனுக்குச் கூறும் போதும் தோன்றுகின்றன.


பரத்தையர் பிரிவில் தலைவியிடம் தோன்றும் நகை மெய்ப்பாடு

தலைவன் கூறும் பொய் மொழிகளை ஆதாரத்துடன் நிறுவுபவளாகத் தலைவி செயல்படுகின்றாள். பரத்தையர் இல்லத்திலிருந்து வந்த தலைவனிடம் பரத்தையர் சேரியிலிருந்து தானே வந்தீர் என்கிறாள் தலைவி. அதற்குத் தலைவன் அப்படி எனக்கு யாரையும் தெரியாது என்கிறான்.

அதற்குத் தலைவி,

“களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்

பேணினன் அல்லெனோ- மகிழ்ந! - வானத்து
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே?” (அகம்.16 15-19)

என்று நீர் கூறாமல் விட்டாலும், எங்கிருந்து வந்தாய் என்பதை, நம் பிள்ளை வீதியில் சிறுதேர் உருட்டிக் கொண்டு தனியே விளையாடிய போது, அப்பரத்தை ‘என் உயிரே வருக’ என்று தன் மார்பில் அணைத்துக் கொண்டதை யான் கண்டேன். அத்துடன் அவளிடம் சென்று நீயும் ‘இப்புதல்வனுக்குத் தாய்’ என்றேன். அப்போது தாம் செய்த களவு வெளிப்பட்டபோது வெட்கித் தலைகுனிந்து நிலத்தைக் கீறினாள். அக்காட்சி, அப்பரத்தை வானிலுள்ள அருந்ததி தெய்வத்திற்கு ஒப்பானவள் என எண்ணினேன் என்று தலைவனிடம் உரைக்கிறாள்.


இங்கு களவு செய்தவர் அகப்பட்டுக் கொண்டபோது ஏற்படுகின்ற மன உளைச்சலுக்குப் பரத்தை ஆளானதையும், வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்படுவாள் என்பதையும் தலைவி உரைக்கிறாள். தலைவன் பரத்தமை ஒழுக்கம் கைக்கொண்டு உள்ள நிலையினையும், அவன் அதை மறைப்பதையும் தலைவி உவமை வழி நகையாக வெளிப்படுத்துகிறாள். அத்துடன் அப்பரத்தை அருந்ததி கடவுளுக்கு ஒப்பிடும் போது அவள் அப்படிப்பட்டவள் அல்லல் என்பதையும் தலைவனுக்கு இடித்துரைக்கிறாள்.

தன் தலைவனின் தவறைத் தட்டிக்கேட்பதில்கூட சங்க இலக்கியத் தலைவி நகைச்சுவையுடன் கூறி அவனை நல்வழிப்படுத்துவதாகப் புலவர் படைக்கிறார்.

“உள்ளத்து ஊடலைத் தொல்காப்பியர்,
கற்பு வழிப்பட்டவள் பரத்தை ஏத்தினும்
உள்ளத் தூடல் உண்டுஎன மொழிப” (தொல்.பொருள்.பொருளி.நூ.1179)

என்றும் குறித்துள்ளார். பரத்தையைப் புகழ்வது போலக் கூறினாலும், தலைவியின் உள்ளத்தில் ஊடல் உண்டு. அதனை மறைத்து, ஊடலை வெளிப்படுத்தாது, அதற்கு எதிரான நகைப்பை வெளிப்படுத்தி தலைவனை நல்வழிப்படுத்துகிறாள்.

எள்ளல் நடை குறித்து வ.ஜெயா, “நகைச்சுவை மிளிர, ஆனால் அதே சமயத்தில் குற்றம் நெஞ்சைச் சுடுமாறு கூறுவதை இவ்வகையினுள் அடக்கலாம். குறைகாணும் போக்கினைச் சுவையுணர்வோடு தருவது எள்ளல் நடை என்பர். வஞ்சப் புகழ்ச்சி, அங்கதம் முதலியன இதற்கு இணையானவை” (முனைவர் வ.ஜெயா,சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழியும் கருத்தும், ப.13) என்கிறார். பரத்தையை அருந்ததிக்கு ஒப்பிடும்போது, கற்பு காட்டலாகப் பொருளாகக் கொண்டு மனத்தினால் அறியப்பட்ட உவமத்தின் வழி எள்ளல் நிலைக்களனைக் கொண்ட நகை மெய்ப்பாடு தோன்றியுள்ளதை அறியலாம். மருதத்திணையின் ஊடல் உரிப்பொருளைப் தலைவி, பரத்தையர் பிரிவினால் தோன்றிய ஊடலைத் தலைவன் உணர்ந்துகொள்ள நகை மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளாள்.

பரத்தைத் தலைவனை எள்ளி நகையாடுதல்

தலைவன் பரத்தையர் பிரிவில் உள்ளான். தலைவியின் உறவினர் கேட்ப, பரத்தை உரைக்கிறாள்.

“வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
வையவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன்துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே” (நற் 40 5-12)

என்று தன் சொந்த மனையில் தனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்ற செய்தி அறிந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. பகலில் வருவதற்குத் தைரியமற்றவனாய், குழந்தை, செவிலியிடம் உறங்க, தலைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, நடுஇரவிலே திருடனைப் போல் வந்துள்ளான் என்று ஏளனம் செய்கிறாள் பரத்தை. எள்ளல் வழி பிறந்த நகையாகக் குறிக்கப்படுகிறது.


தலைவன் பகற்பொழுதில் வந்தால் தலைவி, சுற்றம், பரத்தை என்று அனைவரிடமும் பதில் சொல்ல வேண்டி வரும். இப்படி நள்ளிரவில் கள்வன் போல் வந்தால் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை இராது. ‘நள்ளென் கங்குல் கள்வன் போல’ என்ற உவமை வழி தான் பரத்தையரிடம் இருப்பது தவறு என்பதை உணர்ந்தும், மீளமுடியாத சூழலிலும் தன் புதல்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், மேலும் ஒரு குற்றத்தையொத்த செயலைச் செய்ய வைக்கின்றது என்று பரத்தையால் சுட்டிக்காட்டப்படுகின்றது. சத்தம் இடாமல், வருவது தெரியாமல், செய்ய வேண்டியதைச் செய்யும் திறமுடைய நள்ளிரவில் வரும் கள்வன் போல் என்று தலைவனைப் பரத்தை சுட்டுவது என்பது,

“பேச்சின் உயிர்ப்புக்கு உவமை பெருந்துணை செய்கிறது” (டாக்டர் ஆ. அமிர்தகெளரி, சங்க இலக்கியத்தில் உரையாடல், ப.324)

எனும் ஆ. அமிர்தகெளரி கருத்து வழி இப்பாடல் உவமத்தின் வழி பொருட்புலப்பாட்டிற்குப் பொருந்தியுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

பரத்தை, தலைவி தன்னைப் புறம்பேசினால் என்று ஊடலும், தன்னிடமிருந்து தலைவன் தன் புதல்வனைப் பார்க்க வந்துள்ளான் என்று தலைவன் மீது கொண்ட ஊடலும் என மருதத்திணையின் ஊடல் உரிப்பொருள் சிறக்க, திருடன் போல் என்ற குண உவமத்தின் வழி எள்ளல் நிலைக்களனைக் கொண்ட நகை மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளதைச் சான்றின் வழி அறிய முடிகின்றது.

இதைப்போன்று குறுந்தொகையில் இடம்பெறும் பாடலில்,

“கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே” (குறுந். 8)

என்று பிறரை இகழாது நகைத்தல் என்னும் எள்ளல் நிலைக்களனைக் கொண்ட நகை மெய்ப்பாடு இப்பாடலில் பயின்று வந்துள்ளது. பரத்தையிடம் தலைவன் இருக்கும் போது தன்னைப் பற்றிப் பெருமையாகக் கூறிவிட்டு, தலைவியின் இல்லத்திற்குச் சென்றதும், ஒரு விளையாட்டுப் பொம்மையைப் போல தாம் செய்வதை அப்படிச் செய்து காட்டும் கண்ணாடியாக மாறியுள்ள நிலையை எள்ளி நகையாடுகின்றாள். புதல்வனை ஈன்றெடுக்கும் உரிமையுடைய தலைவியின் முன் தலைவன் அஞ்சி வாழ்வதும், தம்மிடம் வீர வசனங்களைப் பேசியதையும் இணைத்துப் பார்த்து நகைக்கிறாள் பரத்தை.

ஆடிப் பாவை போல என்னும் உரு உவமத்தின் வழி எள்ளல் நிலைக்களனைக் கொண்ட நகை மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.

இப்பாடலில் தலைவன் செய்கை என்பது நகைப்புக்குரியதாகின்றது. தன் காமத் தேவைக்காக வரும் தலைவன் பரத்தையைப் புகழ்வதும், தலைவி என்பவள் குடும்பத்தைக் கட்டிக் காக்கும் திறம் படைத்தவள் என்பதினால் அவள் வார்த்தைக்கு மதிப்பளித்துத் தான் செய்த பரத்தைமை ஒழுக்கத்தை மறைக்க அவன் நடப்பதும் வேடிக்கையாய் உள்ளது என்கிற நிலையில் ஆராயப்படுகின்றது.

‘பாட்டாவது ஒவ்வொரு நிலையிலும் உணர்ச்சி மொழி வாய்ந்ததாகும்’ (தா.ஏ.ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப.229)

எனும் தா. ஏ. ஞானமூர்த்தியின் கருத்திற்கேற்ப மேற்கூறிய பாடல்களில் வழி மெய்ப்பாட்டு உணர்விற்கு மொழி அடிப்படையானது என்பது பெறப்படுகின்றது.


இவ்வாய்வின் வழி அறியப்படுவன

* மருதத்திணையின் ஊடல் உரிப்பொருள் சிறக்க உவமை பயன்பட்டுள்ளதை மேற்கண்ட ஆய்வின் வழி அறியமுடிகிறது.

* ஊடலை வெளிப்படுத்துவதாக தலைவி, பரத்தை உள்ளனர். தலைவன் ஊடலை வெளிப்படுத்துவதில்லை. தலைவன் வினையின் பொருட்டும், பரத்தையின் பொருட்டும் பிரிந்திருப்பதினால் அவன் யார் மீதும் ஊடல் கொள்வதில்லை.

* பரத்தைப் பிரிவினால் தலைவி ஊடல் கொள்வதாகவும், பரத்தையைப் பிரிந்து தலைவன் தலைவியைச் சென்று சேரும்போது பரத்தைக்கு ஊடல் தோன்றுவதாகவும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

* பரத்தையை அருந்ததி கடவுளுக்கு ஒப்பாகவும், தலைவனை நள்ளிரவு கள்வன் போலவும், செய்வதைத் திரும்ப அப்படியே செய்யும் ஆடிப்பாவை போலவும் உவமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

* உவமை வாயிலாக ஊடல் நகையாக வெளிப்படுகின்றது. இல்லாத ஒரு குணத்தை இருப்பதாகக் கூறி அவர்களின் தவறு சுட்டிக்காட்டப்படுகிறது. அதன்வழி நல்வழிப்படுத்தப்படுவதாக உள்ளது.

முடிவுரை

எட்டுத்தொகை மருதத்திணையில் நகை மெய்ப்பாடு தோன்றுவது என்பது தலைவன் செய்யும் பரத்தமை ஒழுக்கத்தை சுட்டிக்காட்டி நல்வழிப்படுவதாக தலைவி கூற்று வழியும், தலைவன் பரத்தையை நாடி இருந்தாலும், குடும்பத்தைக் காக்கும் தலைவியிடம் பணிந்து செல்கிறான் என்பது பரத்தை கூற்று வழியும் அறிய முடிகிறது. மருதத்திணையின் உரிப்பொருள் ஊடல் தலைவன் மீது ஏற்படும் போது அதை அப்படியே அவனிடம் காட்டாது நகைச்சுவை உணர்வுடன் அவன் செய்யும் செயலைச் சுட்டிக்காட்டுவதாக சங்க இலக்கியம் உள்ளன என்பது இவ்வாய்வின் வழி அறிந்துணரப்படுகிறது.

துணைநின்ற நூல்கள்

1. அமிர்தகெளரி, டாக்டர் ஆ. சங்க இலக்கியத்தில் உரையாடல், 184, பிரகாசம் சாலை, பாரி நிலையம், சென்னை - 600 108. முதல் பதிப்பு: 1989.

2. சாமிநாதையர், டாக்டர் உ.வே., குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர்உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.

3. சுப்பிரமணியன் முனைவர் ச.வே. (உ.ஆ), தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. முதற்பதிப்பு - மே, 1998.

4. செயபால், முனைவர் இரா. (உ.ஆ), சங்க இலக்கியம் அகநானூறு (புத்தகம் 1) (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை - 600 098. நான்காம் அச்சு: அக்டோபர், 2011.

5. ஞானமூர்த்தி, டாக்டர் தா.ஏ., இலக்கியத் திறனாய்வியல், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை - 600 040. பதிப்பு: அக்டோபர், 2020.

6. வேங்கடராமன் வித்துவான் ஹெச். (பதி.ஆ), நற்றிணை மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.

7. ஜெயா, முனைவர் வ., சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழியும் கருத்தும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச்சாலை, சி.ஐ.டி.வளாகம், தரமணி, சென்னை - 600 113. முதல் பதிப்பு: 2003.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p298.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License