இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சுற்றிச் சுற்றி வந்தீங்க...!

முனைவர்.ப.பாண்டியராஜா


நீண்ட காலத்துக்கு முன்னர், ஒரு வார இதழில் சுஜாதா அவர்கள் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். கதையின் முடிவில், இனி, ‘கதையின் தொடக்கத்திலிருந்து படிக்கவும்’ என்று எழுதியிருப்பார். மீண்டும் கதையின் தொடக்கத்திற்குச் சென்றால், அது கடைசி வரியின் தொடர்ச்சியாக அமைந்திருக்கும். கதையின் வருணனை மட்டுமல்ல, கதையின் நிகழ்ச்சிகளும் அவ்வாறே அமைந்திருக்கும். மிகவும் கவனத்துடன் எழுதப்பட்ட அந்தக் கதையின் அமைப்பு பலத்த வரவேற்பைப் பெற்றது. ஏதோ ஒரு சுழலுக்குள் சென்றமாதிரி, கதை மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றிச் சுற்றி வந்தது. அந்த மாதிரி கதை அமைப்பும், வாக்கிய அமைப்பும் தமிழுக்குப் புதியது. பல புதிய உத்திகளைத் தமிழ் எழுத்துலகில் புகுத்திய சுஜாதா அவர்களின் வெற்றிக்கு இதுபோன்ற முயற்சிகள்தான் காரணம்.



ஆனால், தமிழ் உலகத்துக்கு இது ஒன்றும் முற்றிலும் புதிய உத்தி அல்ல என்பதற்குச் சான்றாகச் சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் உள்ளது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகை என்ற பாடல்தொகுப்பில் உள்ள முல்லைத்திணைப் பாடல் அது. முல்லைத் திணை என்பது இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளை உடையது. உரிப்பொருள் என்பது பாடலின் மையக் கருத்து (the main theme). தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். அவன் செல்வதன் நோக்கம் வீடு உயர அல்லது நாடு உயர என்பதுவே. வீடு உயர அவன் மேலும் பொருள் சேர்க்கப்போகலாம். நாடு உயர அவன் மன்னன் படையில் சேர்ந்து, பகைவருடன் போரிடச் செல்லலாம். எப்படியிருப்பினும் அவன் தலைவியின் ஒப்புதலுடன் ஊரைவிட்டு நெடுந்தூரம் சென்றிருக்கிறான். அந்த நாட்களில் தலைவி பொறுமையுடன் தனது அன்றாடப் பணிகளை ஆற்றிக்கொண்டிருப்பாள். தலைவனின் பிரிவை எண்ணி அழுது புலம்புவதில்லை. இவ்வகைப் பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்கள் எனப்படும். இருப்பினும், தலைவன் தான் திரும்பும் காலத்தைத் தலைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வான். பொதுவாகப் பொருள் நிமித்தமோ, போர் நிமித்தமோ பிரிந்து சென்ற தலைவன் கார்காலத்தில் திரும்பிவிடுவது வழக்கம். எனவே கார்காலம் வரும்வரை பொறுமையுன் காத்திருக்கும் தலைவி கார்காலம் தொடங்கியவுடன் நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பித்துவிடுவாள். கார்காலம் என்பது தென்மேற்குப் பருவக்காற்று தென்னிந்தியாவில் நிலைகொள்ளூம் காலம். ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களைக் கொண்டது. அதற்கு முந்தைய காலம் முதுவேனில் காலம். அப்போது வரண்டு கிடந்த பூமி, மழை பெய்யத் தொடங்கியதும் பச்சைப் பசேல் எனப் பசுமையாகக் காட்சியளிக்கும். புல், பூண்டு, மரம், செடி, கொடி ஆகியவை செழிப்புடன் காட்சியளிக்கும் காலம் அது. அதுமட்டுமல்ல, அவை மொட்டுவிட்டு, மலர்ந்து, விதம் விதமான வண்ணப்பூக்களுடன் சிரித்துத் தலையாட்டும். வீட்டுக் கொல்லைப்புறத்தில் அவரை, பீர்க்கு, புடலை ஆகிய விதைகளை நடுவார்கள். இவை மழையில் கலித்து வளர்ந்து வீட்டுப் பின்புறத்தையே புதர்க்காடாய் மாற்றிவிடும்.



ஒருவேளை தலைவன் திரும்பி வரத் தாமதமானால், தலைவி ஏங்க ஆரம்பித்துவிடுவாள். சரியாக உண்ணாமல் உறங்காமல் அவனை நினைத்து வாடிய வண்ணமே இருக்கும் தலைவி மெலிந்துபோய்விடுவாள். சரியான சாப்பாடு இல்லாததால், உடல் மெலிந்து இரத்தச்சோகை நோயால் பாதிக்கப்படுவாள் (malnutrition and anaemia). அப்போது அவளின் மேனி நிறம்மாறி மஞ்சள்பூத்துவிடும். இவ்வாறு மஞ்சள்பூத்த மேனி மாரிக் காலத்துப் பீர்க்கம்பூவைப் போல் இருக்கும். இதைவைத்து ஓர் அழகிய பாடலைப் புனைந்துள்ளார் புலவர் கோக்குள முற்றனார்.

கார்காலத் தொடக்கத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிப்போன தலைவன் இன்னும் திரும்பவில்லை. தன்னை மறந்து தன் பணியில் ஈடுபட்டிருக்கிறாரோ என்னவோ? கார்காலம் வந்து, செடிகொடிகளும் தழைத்து அவை பூக்கும் காலமும் வந்துவிட்டதே. தலைவர் இதைப் பார்க்கவில்லையா? என்று தோழி தலைவியிடம் கூறி அங்கலாய்க்கிறாள். தலைவி, “நம் கொல்லைப்புறத்தில் புதராக மண்டிக்கிடக்கும் பீர்க்கங்கொடியில் மலர்ந்துள்ள பூக்கள் சிலவற்றைப் பறித்துக்கொண்டுபோய், உன் தலைவி இந்த நிலைக்கு ஆளாகிவிட்டாள் என்று சொல்ல்லக்கூடியவர் யாராவது கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று ஏக்கத்துடன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. “இன்னள் ஆயினள் நன்னுதல்” என்று அவர்

துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழி, நம்படப்பை
நீர்வார் பைம்புதல் கலித்த
மாரிப் பீரத்து அலர்சில கொண்டே - குறுந்தொகை 98

(நன்னுதல் = நல்ல நெற்றியை உடைய தலைவி; துன்ன = நெருங்கி; படப்பை = கொல்லைப்புறம்; வார் = வழிந்தோடு; பைம்புதல் = பச்சைப் புதர்; கலித்த = செழித்துப் படர்ந்த; பீரம் = பீர்க்கு; அலர் = பூ)


இந்தப் பாடலின் இறுதி அடியை, முதல் அடியுடன் திரும்ப இணைக்க, அது ஒரு தொடரும் வாக்கியமாகத் தெரிகிறது இல்லையா? அவ்வாறு அமையும் வகையில் தன் பாடல் அடிகளை அமைத்திருக்கிறார் புலவர். இந்தப் பாடலின் அடிகள் கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தால், இது ஒரு மிகச் சாதாரணமான பாடலாக இருந்திருக்கும்.

நம்படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த
மாரிப் பீரத்து அலர்சில கொண்டு
இன்னள் ஆயினள் நன்னுதல் என்றுஅவர்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழி.



இதற்கு மாறாக, இன்னள் ஆயினள் நன்னுதல் என்று தன் பாடலைத் தொடங்குகிறார் புலவர். இப்போது, பாடலைச் செய்யுளாக இல்லாமல், உரைநடையாகப் பார்ப்போம்.

“இன்னள் ஆயினள் நன்னுதல்” என்று அவர் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி, நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே, “இன்னள் ஆயினள் நன்னுதல்” என்று அவர் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி, நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே, “இன்னள் ஆயினள் நன்னுதல்” என்று அவர் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி, நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே … என்று சுற்றிச் சுற்றிச் சுற்றிச் சொல்லிக்கொண்டே போகுமாறு தன் பாடல் அடிகளையும், பாடலின் நிகழ்ச்சிகளையும் அமைத்திருக்கும் புலவர் கோக்குள முற்றனார் சுஜாதாவுக்கு முன்னோடியாய்த் திகழ்கிறார் அன்றோ!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p54.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License