இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஈழம் - போரும் வாழ்வும்

முனைவர் ப.தமிழரசி & க. மகேஸ்வரி


முன்னுரை

இலங்கையின் வடகிழக்கு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை அல்லது தனிநாடு என்ற கோரிக்கையை முன் வைத்து ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது. தனிச் சிங்களச் சட்டம், பௌத்தம் அரச மயமாக்கப்படல், இலங்கைக் குடியுரிமைச் சட்டம், யாழ் பொது நூலகம் எரிப்பு, சிங்களப் பேரினவாதம், அரசின் சித்திரவதை, பாலியல் வன்முறை, இலங்கைத் தமிழர் இனஅழிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் போர் வலுப்பெற்றது. இந்தக் கொடிய போர் குறித்தும், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்வு குறித்தும் ஈழப் பெண்கவிஞர்களின் கவிதை வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

போரின் தன்மைகள்

போர் என்றாலே பல உயிர்களைப் பறிக்கக் கூடியது. அத்தகைய போர் பல ஆண்டுகளாக ஈழ மண்ணில் நடைபெற்றது. போரில் குழந்தைகள், பெண்கள், வீரர்கள் என ஏராளமானோர் தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர். போர்க்களம் சென்று போரிட்டு உயிர் நீத்தோர் பலர்.

“தாய் மண்ணின் கூரையிலே போர்
சேய்கூட மாய்கின்ற சோகமயக் கோலங்கள்” (வேதா கவிதைகள், ப.98)

என்ற வேதாவின் கவிதை வரிகளிலே போரின் அத்தனை தன்மைகளும் புலப்பட்டுவிடும்.

துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு வீச்சு, ஷெல் மழை, எனப் பல வகைகளில் மனித உயிர்கள் மலினப்படுத்தப்படுகின்றன. வீதிகள் தோறும் இரத்தமும் சதையுமாய், வீடுகள் தோறும் கை, கால்களை இழந்தவர்களுமாய் காட்சியளிக்கின்றது ஈழம்.

“துப்பாக்கி வெடிச்சத்தம்
தொடர்ந்து கேட்கின்றது
பதுங்கு குழிகளில்
மனிதர்கள் தவிக்க
தொடர்கிறது அந்த இரவு
மானிடத்தின் மரணத்திற்கு
இரத்தம் தோய்ந்த இந்த
தெரு சடலங்கள்
கற்பிழந்த பெண்கள்
கருகிக் காய்ந்த குழந்தை
....................” (விலங்கிடப்பட்ட மானுடம், ப.15)

கவிஞர் சுல்பிகாவின் இக்கவிதை வரிகள் விடிகின்ற பொழுதுக்குள் மீளாத துன்பங்களைத் தருகின்ற போரின் கொடிய நடவடிக்கைகளை எடுத்தியம்புகின்றது. இரவு விடிவதற்கு முன் கற்பை இழந்து உயிரைத் துறந்த பெண்கள், குண்டுகளின் தீப்பசிக்கு இரையான குழந்தைகள் ஆகியோரது மரணத்தைப் பறைசாட்டுகின்றது.

மனித உயிரை ஒரு நொடிப் பொழுதில், கண்மூடித் திறக்கின்ற தருணத்தில் எடுத்து விடுகிறது ஆயுதம். ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து கொண்டிருக்கும் யுத்த பூமியில் இறப்பு என்பது இயல்பாகிவிட்டது. அனைவரின் மனதையும் கல்லாக்கி விட்டது. ஈழமண்ணில் வாழ்கின்ற தமிழின மக்களைப் போரின் பெயரால் ஒவ்வொருவராக அல்ல, கொத்துக் கொத்தாக அழிக்கப்படுகின்ற கொடுமையை,

“ஈழ வான்பரப்பில்
இயந்திரப் பறவைகள்
தமிழின அறுவடை” (மை கவிதைத் தொகுதி, ப.49)

என்று கவிஞர் நளாயினி கூறுவது மறுக்கப்படாத உண்மை.



பெண்களும் போர்க்களமும்

போர் மேற்கொள்கின்ற எதிரிகளான இராணுவப் படையினர் இரவு வேளைகளில் தமிழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களின் கற்பைச் சூறையாடுகின்றனர். அவ்வரக்கர்களின் செயல் அவற்றோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அப்பெண்களின் மேல் வெடி வைத்து அவர்களது உயிரையும் பறித்து விடுகின்றனர்.

எதிரிகளின் இக்கொடிய செயல்களால் மரணித்த கோணேஸ்வரியும் அவரைப் போன்ற பலரது மரணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. தமிழ்ப் பெண்கள் இத்தகைய செயலுக்கு ஆளாக்கப்பட்டு அழிக்கப்படும் நிலையினை கவிஞர் ரேவதி எழுதியுள்ளார்.

“வீரர்களே! வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்
....................................
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக் கூடும்
ஆகவே,
வெடி வைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விட முடியாதபடி” (பெயல் மணக்கும் பொழுது, பக்.227)

இத்தகைய கொடுமைகளினால் பெண்கள் போர்க்களம் சென்று, போராடி, தாய்மண்ணை மீட்கத் துணிந்து செயல்பட்டுள்ளனர். வீட்டிற்குள் அடங்கி வீட்டுவேளை செய்வதற்கே பெண்கள், அடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என்ற எண்ணத்தை உடைத்து நாட்டைக் காக்க, போர் செய்யப் புறப்பட்டுள்ள பெண்புலிகளின் சிறப்பினை,

“அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு?
என்றடைந்த சிறையுடைத்து
மண்அதிர விண்அதிர மாவீரப் பெண்களாக
புதிதாய் உயிர்த்தவர்கள் பூக்களல்ல நாம் புலிகள்” (கனவு மெய்ப்பட வேண்டும், ப.54)

என்று பெருமைப்படக் கூறுகிறார் கவிஞர் பாரதி.

கலாச்சாரத் தடைகளை மீறி போர்க்களம் காணல், நவீன இயந்திரங்களை இயக்குதல், அவற்றைப் பழுதுபார்த்தல், உடற்பயிற்சி, எல்லைகளைக் காத்தல், போர் புரிதல் எனப் பலவகையிலும் பெண்கள் செயல்படுவதை,

“சாக்குத் தொப்பியில்
மழைநீர் ஊறி
தலையெல்லாம் கணக்க
கருவியோடு தானும்
குளிரில் பல்கிடுக்க
மரத்தின் மறைவிலிருந்து
பகைத்தளம் நோக்கி தன்
விழி விரித்த வீரி ஒருத்தி” (பெயரிடாத நட்சத்திரங்கள், ப.91)

என்ற கவிதை வரிகளில் உணரலாம். போர் செய்கின்ற ஆண்மகனை வீரன் என்று கூறுவதைப் போன்று பெண்ணை, அவள் வீரத்தை மையப்படுத்தி ‘வீரி’ என்றழைக்கிறார் கவிஞர்.



வாழ்க்கைச் சூழல்

போரால், அனைவரும் கூடி மகிழ்ந்து கொண்டாடும் திருவிழாக்காலங்களும் துயரத்தையே பறைசாட்டுகின்றன. எந்தக் கணமும் மரணம் ஏற்படும் எனும் வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, விழாக் காலங்களில் மகிழ்வோடு குறுஞ்செய்திகளை அனுப்புவது இயல்புக்குப் புறம்பானது. பண்டிகை நாட்களிலும் கூடப் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி உயிரைப் பாதுகாக்கும் துயரம் தீர்வது எப்பொழுது? என்ற கேள்வியும் ஏக்கமும் நிறைந்த வாழ்க்கையை,

“இந்தப் பண்டிகை நாட்களில்
என் அன்பே!
நம் ஊரின் எந்தப் பதுங்கு குழியில்
பதைக்கும் விழிகளோடு உயிர் தரித்திருக்கிறாய்?
...................................
நாதஸ்சுவரமும் மேளச்சத்தமும்
கலந்தொலிக்கும் இத்திருவிழா நாட்களில்
கோவில் கேணி பிரதிபலித்த
நம் தலைகீழ் பிம்பங்கள் போல் ஆகிற்று வாழ்க்கை!” (இரவுகளில் பொழியும் துயரப்பனி, பக்.32-33)

எனக் கூறும் கவிஞர் தமிழ் நதியின் கவிதை, பண்டிகை நாட்களில் சமைப்பதற்காக எடுக்கப்பட்ட அரிசியிலும் குருதி ஒட்டியிருக்கின்ற நிலையையும் மக்களின் அச்சம் நிறைந்த வாழ்க்கையும் எடுத்தியம்புகின்றது.

வாழ்க்கை மீதான நம்பிக்கை

எதிரியை எதிர்த்துப் போராட பயந்து புதைகுழிகளில் சாகாத பிணங்களாய் வாழ்வதை விட எதிர்த்துப் போராடும் துணிவு வேண்டும். ‘பலவீனமே தோல்விக்கு அடிப்படைக் காரணம். தோல்வியைத் தோற்கடிக்க பலவீனத்தை வெற்றி பெற வேண்டும். அப்போது வாழ்வு இன்பம் அடையும் என்று எதிர்காலம் நோக்கி நம்பிக்கையுடன் செல்லத் தூண்டும் கவிஞர் சுல்பிகாவின் கவிதை வரிகள்,

“நாமிந்த உலகிற்கு
நரகத்துளலவா வந்து பிறந்துள்ளோம்
புதைகுழிகளில்
சாகாத பிணங்களாய்
சதா வாழவா வந்தோம்
இல்லவேயில்லை
புதைகுழியிலிருந்து
புதிதாய்ப் பிறப்போம்
புதுமைகள் செய்வோம்
பலவீனங்களல்ல
பலத்தின் அடிப்படையே நாம்” (விலங்கிடப்பட்ட மானுடம், ப.6)

நம்பிக்கையின்றி வாழ்க்கையை வாழ்பவன் மரணத்தை வேண்டி தன் கல்லறையை நோக்கி செல்பவனாகிறான். ஆனால் ஈழ மக்கள் பல இன்னல்களைக் கடந்து நம்பிக்கையோடு போராடி வாழ்வை வெற்றி பெற வேண்டும் என்பதைக் கவிதைகள் எடுத்துக் கூறுகின்றன.



முடிவுரை

ஈழத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற போரில் உயிர்கள் பலவற்றை இழந்தும் துன்பங்களைச் சுமந்து கொண்டும் போருடன் சேர்த்து வாழ்க்கைப் போராட்டத்தையும் மேற்கொள்கின்றனர் ஈழமக்கள். பெண்கள் போரால் தங்களுக்கு நிகழும் கொடுமைகளால் போராளிகளாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயினும் வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்படும் இன்னல்கள் தீரும் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் வாழ்ந்து வருவதை கவிஞர்களின் கவிதைகளின் மூலம் அறிய முடிகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p67.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License