இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

வள்ளுவர் காட்டும் கண்ணோட்டத்தின் மூன்று நிலைகள்

கே. தமிழரசி


ஆட்சியாளர்களுக்கு வேண்டும் பண்புகளை வள்ளுவர் பொருட்பாலில் எடுத்துரைக்கின்றார். ஆட்சியாளர்களுக்கு குற்றம் கடிதல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல் என்ற பல பண்புகள் தேவை என்று வள்ளவப் பட்டியல் விரிகின்றது. அவற்றுள் ஒன்றாகக் கண்ணோட்டம் என்ற பண்பும் வள்ளுவரால் சுட்டப்பெறுகின்றது.

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு (பொருட்பால் 571)

என்று கண்ணோட்டம் என்ற ஒன்றாலே உலகம் இயங்கி வருகிறது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

கண்ணோட்டம் என்பது என்ன? அது யாரிடம் எவ்வகையில் செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்தால் கண்ணோட்டம் என்பது ஒருநேர்கோட்டில் நடப்பது போன்ற பயிற்சி என்பது தெரியவரும். அதில் சற்று விலகினாலும் கண்ணோட்டம் என்ற கருணை ஒருபக்கச் சார்பாக அமைந்துவிடும். எனவே கண்ணோட்டம் பற்றிய தெளிவான சிந்தனைக்கு வள்ளுவரின் கண்ணோட்டம் என்ற அதிகாரம் வழிவகுக்கின்றது.

இக்கண்ணோட்ட என்ற அதிகாரத்தின் தலைப்புப் பொருத்தத்திற்குப் பற்பலர் உரை கண்டுள்ளனர். பரிமேலழகர் ‘தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கப்படாமை’ என்று விளக்கம் தருகிறார். மணக்குடவரும் பரிப்பெருமாளும் ‘‘கண்ணால் காணப்பட்டவரை அருள் செய்தல்’’ என்று பொருள் கொள்ளுகின்றனர். பரிதியார் ‘அரசர்க்கு கிருபையாகிய பார்வை வேணும் ’ என்று பொருள் உரைக்கிறார். ‘அரசன் அளியுடையனாதல்’ என்கிறது திருக்குறள் குமரேச வெண்பா. ‘குடிமக்களிடம் காட்ட வேண்டிய அன்பு, இரக்க உணர்வு’ என்கிறார் ஸ்ரீசந்திரன்.

இதன் வழியாகக் கண்ணோட்டம் என்பது ஆட்சியாளர்களுக்குத் தேவையான இயல்பு என்று தெரியவந்தாலும் தற்காலத்தில் நடைபெறம் சிபாரிசு என்பதாகக் கண்ணோட்டம் அமைந்துவிடாதா என்று ஓர் ஐயம் தோன்றலாம். இதற்கு விடை பகர பின்வரும் உரை முனைகின்றது.

‘‘பழகினவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல், அவர்கள் தகாதன செய்தொழுகும் பொழுது பொறுத்தாற்றல் முதலிய இயல்புகள் கண்ணோட்டத்தின் பாற்படும். பழகினவர் அன்றி வருந்துவோர் மட்டும் ஒரேவழி நிகழும்.

கண்ணோட்டம் என்பது சிறந்த பண்பாடு. ஒழுக்கம். அதுபோழ்து விழிப்புணர்வும் சிறந்த செயல்பாட்டுத் திறனும் இல்லாதார் கண்ணோட்டத்தின்வழி இழப்புகளைச் சந்திக்கக் கூடும். அவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது’ (தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை,ப.172) என்று கண்ணோட்டத்திற்கு விளக்கம் காணுகிறார் குன்றக்குடி அடிகளார்.

கண்ணோட்டம் என்பதனை விழிப்புணர்வுடன் செயல்படுத்தவேண்டும். இல்லையானால் அப்பண்பினை ஆட்சியாளர்கள் விலக்கிவிடலாம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்துத் தற்கால அரசு எந்திரங்களின் செயல்பாட்டாளர்களாக விளங்கும் அதிகாரிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருந்துவதாகும்.

கண்ணோட்டம் என்பது தன்னுடன் பயின்றவர்களுக்கு அருள் செய்வது என்றால் ஒரு அதிகாரியுடன், அல்லது ஓர் ஆட்சியாளருடன் படித்தவர் தனக்காக, பிறருக்காக ஏதேனும் ஒன்றைச் செய்யச்சொன்னால் மறுக்காமல் செய்யவேண்டும் அதுவே கண்ணோட்டம் என்று வைத்துக்கொண்டால் அதன் பெயர் இக்காலத்தில் சிபாரிசு என்பதாகிவிடுகின்றது. ஒரு வேலையைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ள இயலாதபோது தற்காலத்தில் வேலையை தருபவரின் உறவினரை , பழகினவரை அணுகி அவர் வழியாக அதிகாரியை ஆட்சியாளரை அணுகுதல் போன்றன தற்காலத்தில் நடைபெற்றுவருகின்றன. இதனைத் தடுக்க எண்ணிய குன்றக்குடி அடிகளார் கண்ணோட்டத்தை விழிப்புடன் செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இழப்பு ஏற்படும் என்கிறார். இதன் காரணமாகக் கண்ணோட்டம் செய்யாமை நன்று என்ற அவரின் முடிவு இக்காலத்திற்கு மிகவும் பொருந்துவதாகும்.

இதனையே வள்ளுவர் இவ்வதிகாரத்தின் மற்றொரு குறளில் காட்டுகின்றார்.

‘‘கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து்இவ் வுலகு’’ (பொருட்பால்-578)

என்ற குறளில் சுட்டப்பெற்றுள்ள செய்தியும் மேற்காட்டப்பெற்ற செய்தியும் ஒருங்கு அமைவதை உணர்ந்தால் கண்ணோட்டம் என்பதன் உண்மைப் பொருளை விளங்கிக்கொள்ள இயலும்.

இக்குறளுக்குப் பரிமேலழகர் ‘‘தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடு ஓராதவர்க்கு முறை சிதைதல் மேல்’’ என்று பொருள் கொள்ளுகிறார். மற்ற உரையாசிரியரகள் கருமம் சிதையாமல் என்பதற்குப் பொருள் செலவில்லாமல் கண்ணோடியவர்களுக்கு இவ்வுலகம் உரிமையாகும் எனப் பொருள் கண்டுள்ளனர். இவ்வுரைகளால் சிறப்பில்லை.

இதற்கு உரிய தற்கால விளக்கத்தைக் குன்றக்குடி அடிகளார் தெரிவிக்கின்றார்.

‘‘ கண்ணோட்டமும் கடமையும் பெரும்பான்மையும் முரண்படுவன. இவை முரண்படாமல் கடமை தவறாமல் கண்ணோட்டம் காட்டுதல் ஒரு அருந்திறன் ஆகும்’’ (குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரை.ப.175) என்பது குன்றக்குடி அடிகளாரின் கருத்தாகும்.

கடமைக்குக் குறுக்கே வருவது கண்ணோட்டம் என்பதை அடிகளார் உணர்ந்து உரை செய்துள்ளார். அலுவலகத்தில் காலியாக உள்ள பணியாளர் இடத்தை நிரப்புவதற்கான நேர்காணல்கள் நடப்பது வழக்கம். அவ்வாறு ஒரு நேர்காணலில் ஓர் அதிகாரி கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது. ஏனென்றால் இருப்பது ஒரு காலிப்பணியிடம். அவ்விடத்திற்கு நாற்பது பேர் வந்திருந்தால் கண்ணோட்டத்துடன் நடந்து கொண்டால் அது தவறில் முடியும். நாற்பதில் ஒருவர் தனக்குத் தெரிந்தவராக இருந்தால் தேரவு அதிகாரி அவரைத் தேர்வு செய்துவிடுவாரேயானால் அவர் நேர்மை மறந்தவராகிவிடுகிறார். நாற்பது பேரையும் தேர்வில் ஈடுபடுத்தி அவரில் தகுதி மிக்க ஒருவரை நியமிப்பது ஆலுவலரின் கடமை. இதைத்தவிர்த்து, இவ்விடத்தில் கண்ணோட்டம் கருதி தனக்கு அறிந்த ஒருவரைத் தேர்ந்து விட்டால் மீதமுள்ள முப்பத்தொன்பது பேருக்குத் துன்பம் அளித்தவராக அவ்வதிகாரி மாறிவிடுகிறார். எனவே கண்ணோட்டத்தினை எச்சரிக்கையாகக் கையாளவேண்டும்.

கண்ணோட்டத்தை சிபாரிசாக மாற்றிவிடாமல் காப்பது மேற்குறள் ஆகும். இது கண்ணோட்த்தின் முதல் வகை என்று கொண்டால் தன்னோடு பழகியவர்கள் துன்பம் தந்தாலும் அதனைப் பொறுத்தாற்றும் கண்ணோட்டம் தேவை என்பது இரண்டாம் வகையாகும்.

ஓறுத்து ஆற்றும் பண்பினர் கண்ணும்கண் ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலை (பொருட்பால் 579)

என்கிறது திருக்குறள். தன்னோடு பழகியவர்கள் என்ற நிலையில் தனக்குக் கீழ் பணிபுரிவோர், தன் கட்டளைக்கு அடங்குவோர் போன்ற பலரையும் வைத்து எண்ண இயலும். இவர்கள் துன்பமே தந்தாலும் அவற்றைப் பொறுத்தாற்றும் கண்ணோட்டம் என்பது சிறப்பானது என்கிறார் வள்ளுவர்.

தனக்குத் துன்பஞ் செய்தாரிடத்தும் கண்ணோட்டமே காட்டப்பெறுதல் வேண்டும் என்று இக்குறளுக்கு உரை காணுகின்றார் குன்றக்குடி அடிகளார்.

தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் மாவளத்தான் என்ற சோழனைப் பின்வருமாறு போற்றிப்பாடுகின்றார்.

‘‘மற்றிது
நீர்த்தோ நினக்கென் வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவா என்னினும்
நீபிழைத்தாய் போல நனி நாணினையே
தம்மைப் பிழைத்தோர் பொறுக்குஞ் செம்மல்’’ (புறநானூறு 43)

தான் பிழைத்தாலும் அதனைக் கருதாது தம்மைப் பிழைத்தோரைப் பொறுக்கும் செம்மல் என்று மாவளத்தான் இதனுள் புகழப்படுகிறான். இப்பண்பே கண்ணோட்டம் மிக்கப் பண்பாகும்.

கண்ணோட்டத்தின் மூன்றாம் நிலை என்பது தனக்கு விடத்தையே கொடுத்தாலும் அதனை ஏற்பது என்பது.

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (பொருட்பால் 560)

என்ற குறள் தரும் செய்தி மிக நுண்மையானது. நஞ்சினைத் தருகின்றபோது அது நஞ்சென அறியாமல் தந்தால் கூட உண்டுவிடலாம். ஆனால் நஞ்சு என்று தெரிந்தே அதை உண்ணுவது என்பது நயத்தக்க நாகரீகம் உடைய செயல்தான்.

அதாவது தான் இறந்த பின் நஞ்சு தந்தவரைக் கண்ணோட்டம் செய்ய இயலாது. அவர் தரும்போதே அக்கணத்திலேயே கண்ணோட்டத்தைக் காட்ட மனம் மகிழ்ந்து நஞ்சைப் பருகவேண்டும் என்று கண்ணோட்டத்தின் மூன்றாம் நிலையைக் காட்டுகிறார் வள்ளுவர்.

இதற்குப் பொருள் தந்த குன்றக்குடி அடிகளார் ‘கண்ணோட்டம் காட்டும் பண்பிற் சிறந்தவர்கள் நஞ்சினைத் தந்தாலும் குடித்துவிட்டுச் சாகாமல் வாழ்வார்கள் என்பதை உணர்த்த நஞ்சுண்டு அமைவர் என்றார். தூய அருளுள்ளம் படைத்தாதின் செங்குருதி நஞ்சினுக்கு மருந்து் போலாவாம். ஆதலால் மரணமில்லை என்று கூற அமைவார் என்றார். சாக்ரடீசு, அப்பரடிகள் வரலாறுகளைக் கற்று அறிக’’ (குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரை.ப175) என்று இக்குறளுக்கு உரை விளக்கம் செய்கிறார் குன்றக்குடி அடிகளார்.

திருநாவுக்கரசர் தனக்குத் தரப்பட்ட நஞ்சுணவைத் தானே வாங்கி உண்டு அதன்பின்னும் வாழ்ந்தார். அவர் தனக்கு நஞ்சூட்டிய காவலைரையோ, மன்னரையோ பிழைக்கவில்லை. இதுவே கண்ணோட்டத்தின் முடிநிலை என்று வள்ளுவர் கருதுகிறார்.

ஆகவே கண்ணோட்டத்தின் முதல்நிலை என்பது கண்ணோட்டத்தைச் சிபாரிசாக மாற்றிவிட இடம் தந்துவிடக்கூடாது என்பதாகும். கண்ணோட்டத்தின் இரண்டாம் நிலை தனக்கு அடங்கியோர் தனக்குத் துன்பமே செய்தாலும் அதனைப் பொறுத்து அவருக்குக் கருணை செய்யவேண்டும் என்பதாகும். கண்ணோட்த்தின் மூன்றாம் நிலை என்பது தன்னைக் கொல்ல வந்தாலும் அதனையும் மகிழ்வுடன் ஏற்கும் நிலையாகும். இவ்வாறு பொறுமையும் கண்ணோட்டமும் உள்ளவர்களாலேயே இவ்வுலகில் அமைதி இன்னும் இருந்து கொண்டுள்ளது. இனியும் அமைதி தழைக்கும்.

இவ்வகையில் கண்ணோட்டம் என்ற அதிகாரத்திற்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உரை தற்காலத்திற்குப் பொருந்தும் ஆற்றலுடையதாக உள்ளது என்பதை உணரமுடிகின்றது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p78.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License