இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
அறிவியல் & தொழில்நுட்பம்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் புதிய பல் துலக்கி வடிவமைப்பு

உ. தாமரைச்செல்வி


பிளாஸ்டிக் பைகள் இன்றைய மனிதன் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாகி விட்டது. எந்தப் பொருள் வாங்கினாலும் வணிக நிறுவனங்கள் அதை பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்ட பின்பு குப்பைக்குச் சென்று விடுகின்றன. குப்பைக்குச் சென்ற இந்தப் பைகள் அழிந்து விடுகின்றனவா? என்றால் அதுதான் இல்லை. இது மண்ணில் புதைக்கப்பட்டால் கூட மக்கிப் போவதில்லை. அழியா வரம் பெற்ற இந்தப் பைகளை அழிக்க முயற்சிப்பதை விட தவிர்க்க முயற்சிக்க வேண்டும் என்று வருங்காலம் வளமாக இருக்க விரும்பும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உலகம் முழுக்கப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில் சில நாடுகள் பிளாஸ்டிக் பைகளை முழுமையாகத் தவிர்த்து விட்டன. பல நாடுகள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினாலும், அதன் உற்பத்தியைத் தடுக்கவில்லை. கண்டும் காணாத இந்தப் போக்கினால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்தப் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடுகள் பற்றிய சிறு புள்ளி விவரம்.

1. உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 50 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

2. ஒவ்வொரு நிமிடத்திற்கும் 10 இலட்சம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

3. இந்தியாவில் பிற நாடுகளை விட பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறி முதல் அனைத்துப் பொருட்களின் விற்பனைக்கும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு ஊடுருவிப் போய்விட்டது.

4. பிளாஸ்டிக் பைகளை அழிப்பது மிகவும் கடினமானது. இப்பிளாஸ்டிக் பைகள் முழுமையாக அழியக் குறைந்தது 300 ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

5. பயன்பாட்டிற்குப் பின்பு குப்பைக்குச் செல்லும் பிளாஸ்டிக் பைகள் அழிக்க முடியாமல் பூமியின் நிலப்பரப்பில் பல இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஆறு, குளம், கடல் என நீர்நிலைகளிலும் கூட மிதந்து கொண்டிருக்கின்றன.

6. பூமியின் நிலப்பரப்பில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளைத் தின்று அவைகளைச் செரிமானம் செய்ய முடியாமல் பல கால்நடைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. பூமியினுள் மேலாகப் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் பைகள் மழைநீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுத்துவிடுவதால், நிலத்தடி நீரின் அளவும் குறைந்து கொண்டே இருக்கின்றன. இதனால் வருங்காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது.

7. ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் பைகளால் குடிநீர் ஆதாரங்களாகத் திகழும் ஆறு, குளங்கள் விசத் தன்மைக்கு மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. ஆறு, குளம், கடல் போன்றவற்றில் வாழும் உயிரினங்கள் சிறிது சிறிதாக அழிந்து கொண்டே இருக்கின்றன.



இந்தியாவில் 20 மைக்ரான் கனம், 8க்கு 12 அங்குலத்திற்க்குக் கீழான அளவிலுள்ள பிளாஸ்டிக் பைகளுக்குத் தடையுள்ளது. ஆனால், இந்தத் தடையைச் செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் அக்கறை கொள்ளாததால் நாடு முழுக்க பிளாஸ்டிக் பைகள் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால், கால்நடைகள் நலனுக்காகப் பாடுபடும் தொண்டு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர். இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பிளாஸ்டிக் பைகளின் தவறான பயன்பாடு கால்நடைகளுக்கு மட்டுமில்லாமல் வருங்காலத் தலைமுறையினருக்கும் ஆபத்தாக இருப்பதால் அதை முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் அல்லது உற்பத்தியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்திட வேண்டும் என்றும், இதுகுறித்து இந்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசுக்குக் குறிப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.





மாசு ஏற்படுத்தி வரும் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பழைய பண்பாடுகளை மறந்து, புதுப்புது பயன்பாடுகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதால் இயற்கையை இழந்து செயற்கையால் வந்த விளைவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் மாசடைதல், புவி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை என்று புதிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் பிளாஸ்டிக்கிலான புட்டிகளில் அடைக்கப்பட்டுத்தான் விற்பனைக்கு வருகின்றன. சாதாரணமாக நாம் பல் துலக்குவதில் கூட நாம் பழையதைத் துறந்து, புதியதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி"

- என்று உடல் நலத்திற்கு உதவும் நம் பண்டைய தமிழர்களின் பல் துலக்கலுக்கான பண்பாடு கூட சிதைந்து, அதிலும் பிளாஸ்டிக் பயன்பாடு புகுந்து கொண்டுவிட்டது. பிளாஸ்டிக் பைகளைப் போன்றே பிளாஸ்டிக்கிலான பல்வேறு பொருட்கள் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டில் அவசியமானதாக மாறிவிட்டன. பிளாஸ்டிக் பை மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால், மக்கள் அதிகம் பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாத வகையில் கழிவுப் பொருட்களாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அழகிய நிறங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பல் துலக்கி (Tooth Brush) முக்கியமான கழிவுப் பொருளாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்பது மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல்.

ஆம், இன்றைய மக்கள் பயன்பாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழகிய வடிவங்களில், பல்வேறு நிறங்களிலான பிளாஸ்டிக்கிலான பல் துலக்கிகளை விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பல்துலக்கிகள் மற்றும் அதைத் தாங்கி வரும் பிளாஸ்டிக் உறைகள் போன்றவையும் பிளாஸ்டிக் பைகளைப் போலவே பயன்பாட்டிற்குப் பின்பு தூக்கி எறியும் நிலையில் குப்பைகளாகச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. மனிதர்கள் சராசரியாக ஆண்டொன்றுக்கு ஆறு பல்துலக்கிகளைப் பயன்படுத்தித் தூக்கி வீசுகின்றனர். குப்பைக்குச் செல்லும் இந்தப் பல்துலக்கிகள் மற்றும் இதைத் தாங்கி வந்த உறைகள் போன்றவையும் அழிவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் பிளாஸ்டிக் பைகளை விட மிக அதிகமானது.

ஆண்டொன்றில் தனிமனிதர் சராசரியாகப் பயன்படுத்தும் ஆறு பல்துலக்கிகள் மற்றும் அதைத் தாங்கி வரும் உறைகளின் எடை சுமார் 150 கிராம் இருக்கிறது. இதை இந்திய மக்கள்தொகையான 120 கோடி மக்கள் பயன்பாட்டில் கணக்கிட்டால் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிலான பல்துலக்கிகள் மற்றும் அதற்கான உறைகளின் எடை 1.80 இலட்சம் மெட்ரிக் டன்களாக இருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள 700 கோடி மக்கள் பயன்பாட்டுக் கணக்கில் பிளாஸ்டிக்கிலான பல்துலக்கிகள் மற்றும் அதற்கான உறைகளின் எடை 10.5 இலட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக இருக்கும். ஓர் ஆண்டில் வீணாகும் பிளாஸ்டிக்கிலான பல்துலக்கிகள் இவ்வளவு எடை கொண்டதாக இருந்தால் ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இதன் எண்ணிக்கையும் அதிகமாகப் போவதுடன் அழிக்க முடியாமல், இந்தப் பூமியில் தேங்கிப் போகும் அபாயமும் வந்து கொண்டிருக்கிறது.

அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பல் துலக்கிகள் ஒதுக்கித் தள்ளிவிட முடியாத ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், அதை அப்படியே தூக்கி எறிந்து விடவும் முடியாது. ஆனால், அதற்காகப் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாதுதான். இந்நிலையில் சென்னையில் இருக்கும் கோ. புண்ணியமூர்த்தி என்பவர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புதிய பல்துலக்கி ஒன்றை வடிவமைத்து உள்ளார்.



இந்தப் புதிய பல் துலக்கி தற்போது பயன்பாட்டிலுள்ள பல் துலக்கியைப் போலத்தான். தற்போதுள்ள பிளாஸ்டிக்கிலான பல் துலக்கியை இரு பகுதிகளாகப் பிரித்து, பல் துலக்கும் பிளாஸ்டிக் நரம்புகள் கொண்ட பகுதியைப் பல் துலக்கியின் தலைப்பகுதி (Head Portion) ஆகவும், மற்றொரு பகுதியைக் கைப்பிடிப்பகுதி (Handle Portion) ஆகவும் உருவாக்கிக் கொண்டுள்ளார். இந்த இரண்டு பகுதிகளையும் இணைப்பதற்கு வசதியாகப் பல் துலக்கியின் தலைப்பகுதியின் கீழ் திருகாணியாகவும், கைப்பிடிப்பகுதியின் மேல் தலைப்பகுதி திருகாணி சேரும் விதமாகவும் வடிவமைத்துள்ளார்.

இந்தப் பல் துலக்கியின் கைப்பிடிப் பகுதி நிரந்தரப் பயன்பாடுடையதாகத் துருப்பிடிக்காத இரும்பு (Stainless Steel) கொண்டும், தலைப்பகுதி தற்போது பயன்பாட்டிலுள்ளவாறே சிறிய அளவில் பிளாஸ்டிக்கைக் கொண்டு தேவைப்படும் போது மாற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கிக் கொள்ளலாம். தலைப்பகுதியிலுள்ள பல் துலக்கும் பிளாஸ்டிக் நரம்புகள் கொண்ட பகுதி சிதைந்து பயன்படுத்த முடியாத நிலையில் அதை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும்.



இந்தப் பல் துலக்கியின் கைப்பிடிப்பகுதி நிரந்தரப் பயன்பாட்டில் இருப்பதாலும், தலைப்பகுதி மாற்றிக் கொள்ளும்படியும் இருப்பதால், தற்போது பயன்பாட்டிலுள்ள பிளாஸ்டிக் பல் துலக்கியின் கைப்பிடிக்கான பிளாஸ்டிக்கின் பயன்பாடு இல்லாமல் போய்விடுகிறது. தலைப்பகுதிக்கு மட்டும் சிறிது பிளாஸ்டிக் பயன்பாடு தேவையாக இருக்கிறது.

இதன் மூலம் இந்தியாவில் ஓர் ஆண்டில் குப்பையில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பல் துலக்கிகளின் எடை 1.80 இலட்சம் மெட்ரிக் டன் எடையிலிருந்து 95 சதவிகிதம் குறைக்கப்பட்டு விடும். பல் துலக்கிகள் மூலம் குப்பைக்கு வரும் பிளாஸ்டிக்கின் எடை ஆண்டொன்றுக்கு சுமார் 1.71 இலட்சம் டன்னாகக் குறைந்து விடும். இந்தப் புதிய பல்துலக்கியின் வடிவமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிப்பதுடன், தற்போது பிளாஸ்டிக் பல் துலக்கிகளுக்காகப் பொதுமக்கள் செலவிடும் பணத்திலும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து போய்விடும்.

இந்த வடிவமைப்புக்கான முழு உரிமையைப் பெற்றிருக்கும் இதன் வடிவமைப்பாளர் கோ. புண்ணியமூர்த்தி, “இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முழுமையான பிளாஸ்டிக்கிலான பல் துலக்கிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். உலோகத்தாலான பல் துலக்கியின் நிரந்தரக் கைப்பிடிப்பகுதி மற்றும் பிளாஸ்டிக்கிலான தலைப்பகுதி கொண்ட புதிய பல் துலக்கியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு உதவ வேண்டும்.



இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு, புதிய பல் துலக்கியை இலவசமாக அளிக்க முன் வர வேண்டும். அதாவது, முதல் ஆண்டில் புதிய பல் துலக்கியின் உலோகத்திலான கைப்பிடிப்பகுதி ஒன்று, பிளாஸ்டிக்கிலான தலைப்பகுதி ஆறு அடங்கியதாக இலவசமாக அளிக்கலாம். வரும் ஆண்டுகளில் புதிய பல் துலக்கியின் கைப்பிடிப்பகுதியைத் தவிர்த்து பிளாஸ்டிக்கிலான தலைப்பகுதி ஆறு எண்ணிக்கையில் இலவசமாக அளிக்கலாம்.

இதன் மூலம் பள்ளிக் குழந்தைகளிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படும். மேலும், முழுமையான பிளாஸ்டிக் பல் துலக்கிகளின் பயன்பாடுகளால் வீணாகிச் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு குறைக்கப்படுவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது பெருமளவு குறைக்கப்படும்.” என்கிறார்.

இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கோ. புண்ணியமூர்த்தி வடிவமைத்துள்ள புதிய பல் துலக்கியை நாடு முழுவதும் பயன்பாட்டுக் கொண்டு வர உதவ வேண்டும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/scienceandtechnology/p6.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License