இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் -6

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்


1. திருவண்ணாமலை

தமிழ்மொழியில் வற்றாத வளம் கொண்டனவாக பக்தி இலக்கியங்கள் வளர்ந்து வருகின்றன. தனக்கு மேலான ஒருவனை, அனைத்தையும் ஆட்டுவிக்கும் அன்பனை, இறைபரம்பொருளை முழுவதுமாக நம்பி அவனிடத்தில் தன் வாழ்க்கையை ஒப்படைப்பதே பக்தி வைராக்கியமாகின்றது. அருளாளர்கள் ஒவ்வொருவரும் ஆண்டவனைக் கண்ட அழகான நிலை, அற்புதமான முறை எண்ணி எண்ணிப் பார்க்க வியப்பளிக்கிறது.

ஒவ்வொருவருக்கும் கிடைத்த அருள் அனுபவம், இறை அனுபவம் அவர்தம் பாடல்களாக வெளிப்பட்டுள்ளன. பக்தி இலக்கியங்களில், பக்தி ஒருபுறம் அமைந்திருக்கிறது என்றாலும், அப்பக்திப்பாடல்களில் ஆழ்ந்திருக்கும் கவியுளம் கண்டு கொள்ளப்படவேண்டியது.

பக்தி சார்ந்த கவிதைகளில் பக்தியும் உண்டு. இலக்கிய இன்பமும் உண்டு. தரிசிப்பும் உண்டு. ரசிப்பும் உண்டு. காலங்கள் பலவானாலும், படைப்புகள் பலவானாலும் அழியாமல் பக்திக் கவிதைகள் நின்று நிலைப்பதற்கு அவற்றின் தரிசிப்புத் தன்மையும் ரசனைத் தன்மையும் தான் காரணம்.

படைப்பாளர்களுக்கு புதுப்புது இடங்கள் புதுப் புதுக் கற்பனைகளைத் தருகின்றன. புதிய இடங்களுக்குச் செல்கின்ற போது ஏற்படும் உள்ளப் பேரெழுச்சி அவர்களைப் புதிய படைப்புகளைத் தரத் தூண்டுகின்றன. நம் ஒவ்வொருவருக்கும் அப்படித்தானே! புதிய இடங்கள் புதிய அனுபவங்களைத் தருகின்றன. புதிய எழுச்சியைத் தருகின்றன. நாம் அனைவரும் புத்துணர்வு கொள்கிறோம். புதுமை என்றாலே விருப்பம்தானே.

படைப்பாளர்களுக்குப் புதிய இடங்கள், புதிய அனுபவங்கள் தரும் உள்ளப் பேரெழுச்சி அவர்களைப் புதுமை செய்யும் பாவலர்களாக மாற்றுகின்றது.

அது ஒரு பௌர்ணமி நேரம். முழுச் சந்திரன் தன் பொன் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறான். வானத்திற்கும் பூமிக்கும் இடையே ஒரு பாலமாக உயர்ந்து நிற்கிறது ஒரு மலை. பௌர்ணமி நேரச் சந்திரனின் பொன் கதிர்களைப் பெற்றுப் பொன்னாகவே காட்சி தருகிறது அந்த மலை. சித்தர்களுக்குக் காரிய சித்தி விளைக்கும் மலை அந்த மலை. துறவிகள் துறக்கமுடியாத அருள் மலை அந்த மலை. பக்தர்களின் கண்களுக்குப் பரவசமூட்டும் மலை அந்த மலை. எந்நேரமும் மந்திர ஒலி கேட்கும் மலை அந்த மலை. எல்லோரும் அண்ணாந்து பார்க்கும் மலை அந்த மலை அண்ணாமலை. திருவண்ணாமலை.

அருமையான அந்த அருணைமலையைச் சுற்றிப் பக்தர்கள் பலரும் நடந்து வருகிறார்கள். இன்று அல்ல, நேற்று அல்ல... காலம் காலமாக நடைபெற்று வரும் நடையாத்திரை அந்த யாத்திரை. பௌர்ணமி நிலவில் வாய் மணக்க மந்திரம் சொல்லி, கால் கடுக்க நடந்து வந்து, கைகள் பிரியா வண்ணம் வணக்கம் செய்ய அரிதினும் அரிதான அந்த இனிய அருட்காட்சி யுகம் யுகமாக நடந்து வருகின்றது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசனார் அந்தப் பொன்மலையைச் சுற்றி வருகிறார். தான் மட்டும் அல்ல, தன்னுடன் தன் தம்பியர் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் பலரையும் அழைத்துக் கொண்டுச் சுற்றி வருகிறார். காலம் குளிர்ச்சியால் பனிபடர்ந்து நிற்கிறது. நேரம் பௌர்ணமி நிலவால் ஒளி வெள்ளம் சூழ்கிறது. எதிரே பொன்மலை, தகதகக்கிறது. நடந்து வரும் சிவப்பிரகாசரின் மனதில் படைப்பு என்னும் கவி ஊற்று பிரவாகம் எடுக்கிறது. நூறு பாடல்களாக அந்தப் படைப்பு பெருகுகிறது. மலையைச் சுற்றத் தொடங்கும் போது, ஆரம்பித்த முதல் பாடல் மலைவலம், கிரிவலம் வந்து நிறையும் போது நூறாக, கவி ஆறாகப் பெருகுகிறது. அப்படி எழுதப்பட்ட பாடல்களில் தொகுப்புதான் சோண சைல மாலை. சோணம் என்பதற்கு பொன் என்று பொருள். சைலம் என்பதற்கு மலை என்று பொருள். பொன் மலையைப் போற்றிப் பாடிய பாடல்களின் மாலை சோணசைல மாலை என்று ஆகியது. இந்த மாலையை மலைக்கு ஏன் சூட்டினார். மலையைப் பாடினாலே மகேசனைப் பாடியதுபோல் தானே. அண்ணாமலையை வணங்கினாலே அண்ணாமலையாரை வணங்கியதற்கு ஒப்பாகும்தானே.

அவசரம் அவசரமாகத் திருவண்ணாமலை வந்து சேருகிறோம். நாம் செல்ல வேண்டிய தூரமோ அதிகம். திருவண்ணாமலையில் இறங்கி அண்ணாமலையாரைத் தரிசிக்க முடியாதே. காலம் இல்லையே என்று கவலைப்படுகிறது நெஞ்சம். கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரை வணங்க வேண்டிய கால அவகாசம் இல்லையா கவலைப்பட வேண்டாம். அண்ணாமலையை வணங்கினாலே போதும். அண்ணாமலை வள்ளலை வணங்கியதற்குச் சமமாகும்.

அப்படித்தான் அந்த அவசர அவசரமான பயணத்தில், திருவண்ணாமலைக்கு உள் நுழையும்போது முதன் முதலாக அந்த மலை கண்களில் படுகிறது. அந்த மலையைக் கண்டதும் கரங்கள் தாமாகக் கூப்பி விடுகின்றன. மலையைக் காட்டிய கண்களுக்கு நன்றிகள். மலையை வணங்கிய கரங்களுக்கு நன்றிகள். திரும்பிப் பார்க்கிறேன். என்னைப்போல பேருந்தில் பயணித்த பலரும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம். அவர்களுக்கும் திருவண்ணாமலையில் இறங்கிக் கோயிலுக்குச் சென்று வழிபட வசதியான நேரமில்லை. அதனால் மலையை வணங்கிப் பெரும்பேறு பெறுகிறார்கள்.

இது சரியா? என்றால் சரி என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்

காலம் நன்கு உணர்ந்து சினகரம் புகுந்து
காண் அரிது எனாது

என்பது அவர் வாக்கு.



சினகரம் என்றால் சிவன் ஆலயம். காலத்தின் கட்டாயத்தினால் சிவ ஆலயத்திற்கு சென்று வழிபடுவது அரிது. ஆகவே என்ன செய்வது. இந்தக் கேள்விக்கு அடுத்த அடி பதிலாக அமைகின்றது.

உலகு அனைத்தும் சால நின்றுழியே கண்டிடும்
சோண சைலனே கைலை நாயகனே

என்பது தான் அந்த பதில். அதாவது, காலத்தின் நெருக்கடியால் கோயிலுக்குள் வரும் அளவிற்கு கால அவகாசம் இல்லை என்றாலும், உலகில் உள்ளவர்கள் எல்லாரும் நின்ற இடத்திலேயே காணும் படிமலையாகக் காட்சி தரும் சோண சைல நாதனே உன் திருவடிகளுக்குச் சரணம். கயிலை நாதனாக நீ எங்களுக்கு இம்மலையில் காட்சி தருகிறாய். ஆகவே கோயிலுக்குள் நுழையாத எங்களுக்கும் மலையே நீயாகக் காட்சி தரும் அற்புதமே அற்புதம் என்று வியக்கிறார் சிவப்பிரகாசர்.

திருவண்ணாமலை மண்ணில் நின்று, மலையை வணங்கினாலே அருணாசலனைக் கண்ட பெருமை கிடைத்து விடுகிறது என்பது சிவப்பிரகாசர் வாக்கு. கோயிலுக்குள் சென்றால் கோயிலுக்குச் சென்றவர் மட்டுமே கடவுளைக் காண இயலும். ஆனால் உலகமே காணும் அளவிற்கு மலையாகத் தோற்றம் தரும் எம்பெருமானின் கருணைக் காட்சி வடிவமே அருணை மலை வடிவம். அடியார்களாகிய நாம் மலையின் அடிவாரத்தில் நிற்கிறோம். பரம்பொருளான கடவுள் அந்த மலையில் தோன்றும் அருட்பெருஞ்சோதியாக காட்சியளிக்கிறான். அந்த அருட்பெருஞ்சோதியும் மிகவும் வித்தியாசமானது. ஆதி அந்தம் அற்றது. அந்த அருட்பெருஞ்சோதிக்கு அகல் வேண்டுவதில்லை. திரி வேண்டுவதில்லை. ஏற்றும் தீச்சுடர் தேவையில்லை. ஏற்றுபவர் தேவையில்லை. ஏற்றாமலே எழுந்த ஏற்றமிகு விளக்கு அது.

அகல்விளக்கு என்ன அகல்திரி நெய்தீ
ஆக்குவார் இன்றியே எழுந்த சகவிளக்கு

பரம்பொருள், அண்ணாமலையாம் அருட்பெருங்சோதி சகவிளக்கு. சகலருக்கும் காட்சி தரும் அருமை விளக்கு. அண்ணாமலை முதல் கயிலை மலை வரை ஒன்றே பரம்பொருள் என விளங்கும் விளக்கு என்று இன்னும் அவ்விளக்கிற்குப் பெருமை சேர்க்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள். அண்ணாமலையைச் சிவப்பிரகாசர் செந்நெறி கொண்டு வணங்குவோம்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p8a.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License