பெண்கள் வாய் திறக்காமல் இருக்க...!
ஒரு நேர்முகத்தேர்வுக்காக ஐந்து பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டனர். அங்கு தங்களுக்குள் அரட்டை அடித்துச் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட அதிகாரி தனது பியூனை அழைத்து அவர்களைப் பேசாமல் இருக்கச் சொல் என்றார்.
பியூன் போன சில நிமிடத்தில் அங்கு அமைதியாகி விட்டது.
அதிகாரிக்கு ஆச்சர்யம். அவர் பியூனிடம் விசாரித்தார்.
பியூன் சொன்னார். அந்தப் பெண்களிடம் "உங்களில் மூத்தவர் யார்?" என்றேன் அவ்வளவுதான்.
- தேனி.எஸ்.மாரியப்பன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.