தூக்க மாத்திரை யாருக்கு?
ஹேமா தனது குடும்ப மருத்துவரிடம் சென்று, தன் கணவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். “எங்களது 20 வருட திருமண வாழ்வில் முதல் பத்து வருடங்கள் சிறப்பாக இருந்தன. அவரும் மிக நல்லவராக இருந்தார். அடுத்த பத்து வருடங்களில் அவர் மிகவும் பதட்டமானவராக, எதற்கெடுத்தாலும் கோபப்படுபவராக மாறிவிட்டார். அவரால் நான் இருக்கும் அறையில் உட்காரக் கூட முடிவதில்லை. அவருக்கு நான் என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
மருத்துவர் அவரை முழுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்கள் கணவருக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். எனவே நான் சில தூக்க மாத்திரைகளைக் கொடுக்கிறேன். இதைச் சாப்பிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்,” என்றார்.
அதற்கு ஹேமா, “மிக்க நன்றி டாக்டர். இந்த மாத்திரைகளை அவருக்கு நான் எந்தெந்த வேளைகளில், எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார்.
மருத்துவர், “மாத்திரை அவருக்கல்ல; உங்களுக்குத்தான். நீங்கள் தூக்க மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் அவருக்கு சிறிதாவது ஓய்வு கிடைக்குமே...” என்றார்.
- சத்குரு சொன்ன குட்டிக்கதைகள்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.