ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் எந்தப் பயனுமில்லை, அவர் நோயும் குணமாகவில்லை.
என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, “நீங்கள் ஏன் ஒரு கால்நடை மருத்துவரைப் பார்க்கக் கூடாது” என்று கேட்டாள்.
அதிர்ச்சி அடைந்த கணவன், “உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?” என்று கேட்டார்.
“எனக்கொன்றும் கெட்டுப் போகவில்லை, உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு” என்றாள் அவர் மனைவி.
அவள் தொடர்ந்து, “அதிகாலையிலேயே கோழி மாதிரி எழுந்து, அப்புறம் காக்கா மாதிரி குளித்துவிட்டு, குரங்கு மாதிரி வேகவேகமாகச் சாப்பிட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக அலுவகலத்துக்கு ஓடி, அங்கே மாடு மாதிரி உழைத்து விட்டு, அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவர்களிடம் கரடி மாதிரி கத்திவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்ததும் வீட்டிலிருப்பவர்களிடம் நாய் மாதிரி கத்தறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க... அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை மருத்துவர்தான் குணப்படுத்த முடியும்” என்றாள்.
என்ன சொல்வதென்று தெரியாமல் கணவன் விழிக்க,
"என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்றாள் அவள்.
- இதழ் ஒன்றில் படித்தது