ஒருவர்: வாழ்க்கையிலே ஒருவருக்குச் சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.
மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஒருவர்: நான் புரிய வைக்கிறேன். ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.
மற்றவர்: இதோ இருக்கு சார், நீங்கள் கேட்ட சாக்கடைத் தண்ணீர்.
ஒருவர்: இப்படி வையுங்க. நான் என்ன செய்றேன்னு கவனிங்க. இந்தச் சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டுக் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன். இதுதான் சகிப்புத் தன்மை. எங்கே, என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்...
மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்க, நானும் அதைத் தொட்டு நாக்கிலே வச்சுக்கிட்டேன்.
ஒருவர்: சரி, இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?
ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை. நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன். ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை. நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க. இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.
- இணையத்தில் படித்தது