கலைவாணர் நகைச்சுவை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காரில் சென்று கொண்டிருக்கும் போது இருப்புப்பாதை கதவை சாத்திக் கொண்டிருந்தார்கள்.
உதவியாளர் ஓட்டுனரை விரைவுபடுத்தும் நோக்கில், ” கேட்டு சாத்தறான்... கேட்டு சாத்தறான்...” என்று கத்தினார்.
பின்னிருக்கையில் அமர்ந்திருந்த கலைவாணர் சாந்தமாக, “ஏன்யா கத்துறே... கேட்டுதானேச் சாத்துறான்.. உன்னைக் கேட்காமச் சாத்தியிருந்தா கோபப்படலாம்.. கேட்டுச் சாத்தறவனை என்ன பண்ண முடியும்...?” என்றார்.
உதவியாளர் அவரை அறியாமல் சிரித்தார்.
தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.