முப்பத்திரண்டு வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள் .என் காலம் முடிந்துவிட்டதா ?என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் . இல்லை… இல்லை. உனக்கு இன்னும் முப்பத்தெட்டு வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன என்றார் கடவுள் . இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் . என் மூக்கைச் சற்று நிமிர்த்தி தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் . தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள். என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம் மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள் . எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள்.
வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் . கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் . எனக்கு இன்னும் முப்பத்தெட்டு வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? என்று கோபமாகக் கேட்டாள்.
அட, நீயா அது? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே ! என்றார் கடவுள் .