மனைவி குண்டா இருக்கிறதுக்கு நீங்க ஏன் பயப்படுறீங்க...?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: எதுக்கு செல்போனை உடைக்கிறீங்க...?
அப்பாவி சுப்பையா: அவசரத் தேவை... இதில பேலன்ஸ் நூறு ரூபாய் இருக்குதுன்னாங்க...
*****
ஒருவர்: இன்று இனிக்க இனிக்கப் பேசுறீங்களே... என்ன விஷயம்?
அப்பாவி சுப்பையா: நிறைய ஸ்வீட் சாப்பிட்டிருக்கேன்...
*****
ஒருவர்: லைசென்ஸ் வாங்காமலே எட்டு வருஷமா வண்டி ஓட்டுறீங்களே... எப்படி...?
அப்பாவி சுப்பையா: லைசென்ஸ் வாங்குற செலவை விட ஸ்பாட்பைன் குறைவாயிருக்கு...!
*****
ஒருவர்: உங்க ஊர்ல கொலை கொள்ளை, கற்பழிப்பு எதுவுமில்லாம இருக்கே... ஆச்சர்யம்தான்...
அப்பாவி சுப்பையா: ஆமாம் எங்க ஊர்ல போலீஸ் ஸ்டேசனே கிடையாது...!
*****
ஒருவர்: தினமும் ஆபிஸ்க்கு எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போறீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம்... அப்போதான் தூக்கம் வருது...!
*****
ஒருவர்: உங்க மனைவி குண்டா இருக்கிறதுக்கு நீங்க ஏன் பயப்படுறீங்க...?
அப்பாவி சுப்பையா: குண்டர் சட்டத்தில கைது பண்ணிடுவாங்களோன்னுதான்...!
*****
ஒருவர்: இப்போதான் சாப்பிட்டுப் போனீங்க...மறுபடியும் சாப்பிட வந்திருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம்... உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்... எனக்கு ஜீரண சக்தி அதிகம்...!
*****
ஒருவர்: வயசு வித்தியாசம் பார்க்காமல் ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தீங்களாமே...
அப்பாவி சுப்பையா: ஆமாம்... எனக்கு எனக்கு வயசு முப்பது. என் மனைவிக்கு வயசு அறுபது.
*****
ஒருவர்: உங்க மனைவிகிட்ட சண்டை போட்டுட்டு ஒரு வாரமா எங்கே போயிருந்தீங்க...?
அப்பாவி சுப்பையா: என்னோட சின்ன வீட்டுக்குத்தான் போயிருந்தேன்.
*****
ஒருவர்: உங்க அம்மாவிற்கும் மனைவிக்கும் நடந்த சண்டையிலே யாருக்கு அடி அதிகம்?
அப்பாவி சுப்பையா: எனக்குத்தான்...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.