இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Interview
நேர்காணல்

வ. ச. பாபு

ஆல்பர்ட் பெர்னாண்டோ, அமெரிக்கா


தங்கள் வாழ்வாதாரத்துக்காக தாய்த் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களில் சிலர், தமிழர்கள் மத்தியில் தமிழில் பேசுவதைத் தவிர்த்து அயல்மொழியோடு ஆலிங்கனம் செய்துகொண்டு ஆடை களைவதைப் போல களைந்தெறிந்து வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கு மத்தியில் தமிழை வளர்க்க, நேசிக்க மழலைகளின் அதரங்களில் தமிழைத் தவழ விட தன்னார்வ தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் இப்போது ஆறுதலான விசயம்!

தமிழன் கடல் கடந்து போனாலும் தன் மொழிப்பற்றை சிலர் கைவிட்டாலும் சிலர் தாங்கிப் பிடித்து மொழியுணர்வை விதைக்கும் விவசாயியாய் அமெரிக்க மண்ணில் வலம் வருவதில் நெஞ்சு நெகிழ்கிறது! எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக் கூடாது!

தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்! அமெரிக்கத் தமிழர் இல்ல மழலைகள் நேசித்துச் சுவாசிக்கத் தமிழமுதை விருந்தாக்கியளிக்கும் தமிழன்பர்களை நாம் நன்றியோடு நினைக்கப்பட வேண்டியவர்கள்! வள்ளுவன் எந் நன்றிகொன்றார்க்கும் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்கிறதற்கொப்ப அடுத்த தலைமுறைக்கான மொழியுணர்வை வளர்த்தெடுக்கும் இவர்களை உலகத் தமிழர்களின் பார்வைகளுக்காக அடையாளம் காட்ட நேர்காணல் செய்து முன்னிடுகிறேன்.

இவர்கள் தமிழைத் தவமாய், வேதமாய், வேள்வியாய், சுவாசமாய், உயிராய், உணர்வாய் நேசித்து தமிழ் வாழ வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக் கொண்டுள்ள இவர்கள் குடத்திலிட்ட விளக்காய் இருக்கிறார்கள்! இவர்களைக் குன்றிலிடும் அரிய‌ முயற்சி இது. காலதேவனின் ஓட்டத்தில் கரைந்து மறைந்து விடாமலிருக்க இவர்களை அடையாளம் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

இந்த வரிசையில் முதலாவதாக நாம் அடையாளம் காட்ட விரும்புவது சிகாகோவில் வசிக்கும் வ.ச.பாபு அவர்களைத்தான். இவர், பெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க‌ பேரவையில் பொறுப்பு வகிப்பவர். தமிழுக்காகத் தொண்டாற்றுபவர். தமிழுக்காகவே தன் நேரத்தைச் செலவிடுகின்ற பேராளர் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு தமிழ்ப்பற்று. இவருடனான நேர்காணல் இல்லையில்லை மின்காணல் இதோ...



தங்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு:-

தமிழகத்தின் கொங்கு நாட்டில், கோவையில் பிறந்து, சென்னையில் வளர்ந்தேன். சென்னை, கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று தொழில் ( உற்பத்தி கருவிகள் பழுது -வருமுன் காத்து, வருவதை கூறுவது (Preventive and Predictive Maintenance) ) செய்த நான் தொழில் வளர்ச்சி மேம்பாடு காரணமாக அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தேன். தற்போது நினைப்பது அன்னை மொழிதனை அயலார்க்கும், வழி தொடரும் தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்தல் என்பதே...

அமெரிக்காவில் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எதனால்? எப்போது ஏற்பட்டது? ஆர்வத்துக்கு வித்திட்டது எது?

அன்பும், பாசமும் தமிழ் மொழி மீது அமையும் ஆர்வமும், இனத்தின் மீது படியும் உணர்வும் "ஓர் வழி" அமைவதுதான்! அது இயற்கையுங் கூட! வித்திட்டு வருவதை விட, பதியமிட்டு வளர்வது என்பது பொருத்தம்! அப்படிப் பதியமிட்டது பெற்றோரும், உடன் பிறந்த மூத்தோர்கள் என்றால், வளர்பருவத்திற்கு உதவியாய் நின்றவை பள்ளிப் பருவத்து தமிழாசிரியர்களின் தெளிந்த மொழி ஆளுமையும், பேரறிஞர் அண்ணாவின் துள்ளுந்தமிழ் நடையுமே !

இப்போது வழி நடத்திச் செல்வது தமிழ்ப் பேரறிஞர்கள். (பாவாணர், பாவலரேறு) நூல்களும், தமிழ் நாட்டிலுள்ள பல தமிழறிஞர்கள் தொடர்பும், உடன் சுமை தாங்கி பொறுத்துச் செல்லும் துணைவியும், நண்பர்களும் தான்!

அமெரிக்காவில் தமிழ் பள்ளிகளைத் துவங்கி நடத்துவதற்கு தமிழர் பெற்றோர்கள் ஒத்துழைப்பு எப்படியுள்ளது?

வாழ்க்கையின் வளங்கள் பல சேர்க்கும் ஆர்வத்துடன் புலம் பெயர்ந்தோர், மொழி தாங்கி நிற்க எந்தத் தயக்கத்தையும் காட்டுவதில்லை என்பதே என் கருத்து! தம் முன் உள்ள, சுமக்க இயலாத சுமைகளிடையே அன்னை மொழி காத்து நிற்பதில் அவர்கள் காட்டும் அக்கறை பாராட்டிற்கு உரியது.

தமிழ் பள்ளிகளில் ஒரே மாதிரியான தமிழ் புத்தகங்களை தமிழகத்தில் இருந்து தருவித்து நடத்த என்ன காரணம்?

இனமொன்று! மொழியொன்று! ஆரம்பத்தில் இதனை வழி நடத்திச் செல்ல ஒன்றான கல்விக் கருவிகள் துணை புரியும் என்ற எண்ணமே!

துவக்க நிலை மாணவர்களுக்காக ஆங்கிலம் - தமிழ் விளக்கங்களுடன் ஒரு புத்தகத்தை வடிவமைக்கும் முயற்சி ஏதேனும் உண்டா?

ஆங்கிலம் - தமிழ் விளக்கம் என்பது ஆரம்பத்தில் எளிது என்றாலும், எளியதையும், புதியதையும் வாழ்வாகக் கொள்ளும் வழக்கம் மனித இயற்கை! அதிலும் தமிழர்கள் சற்றே அதிக அளவில் இதனை மேற்கொள்பவர் என்பதாலும், செயல் விளக்கங்களும், பொருள் காட்டு விளக்கங்களும் மொழி கலப்பைத் தவிர்க்கும் என்ற எண்ணமும் இந்த முயற்சியில் ஈடுபட வைக்கவில்லை.



அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்க விசேடப் பயிற்சி ஏதும் தருகிறீர்களா?

அமெரிக்கத் தமிழ்க் குழந்தை ... அமெரிக்க மண்ணில் அன்றாடம் கற்பிக்கப்படும் பயிற்சி மொழியென தமிழ் அமையும் காலம் வரும் வரை, பண்பாட்டு மொழியென்ற வகையில் கற்பிப்பதால், சிறார்களிடையே அதிக அழுத்தம் சேரா வண்ணம், அவர்கள் அச்சத்துடன் மருண்டு ஓடாத வண்ணம் கற்பிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு தற்போது பள்ளிகளை இயக்குகிறோம். ஆர்வம் கூட்ட தமிழில் தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பூக்கள் போன்ற பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டுள்ளோம்.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குடும்பங்களில் தமிழ் கற்க விரும்பும் கல்லூரி நிலை மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் திட்டம் உண்டா?

அமெரிக்காவில் ஆரம்பம், வார இறுதி தமிழ்ப்பள்ளிகள் என்றாலும், அதிக அளவில் தமிழ்ப் பள்ளிகள் உள்ள இடங்களில் (அமெரிக்க உயர்நிலைப்பள்ளி மாவட்டங்களில்) உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடம் என்பதை செயலாக்க முயற்சி முன்னுள்ளது. அது போன்றே தமிழில் மேற்பயிற்சி பெற தமிழ் மண்ணில் அமைந்துள்ள கல்லூரிகளை அணுகும் எண்ணமும் உண்டு. கல்லூரி நிலை மாணவர்க்கு தமிழ்க்கல்வி என்ற நோக்கில் அமைந்ததுதான் "பெர்கிலி" தமிழ் இருக்கை. பொருளாதார வசதி என்ற கட்டுப்பாட்டில் மற்றும் பல பல்கலைக் கழகங்களில் ஏற்படுத்துவது தற்போது நிறைவேறவில்லை. காலம் கனியும் போது இவையும் சாத்தியமே! "தமிழ் செம்மொழி" என்ற நிலையும் இதற்கு பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை பெரிதும் உண்டு.

தமிழில் மேற்பயிற்சி பெற தமிழ் மண்ணில் அமைந்துள்ள கல்லூரிகளை அணுகும் எண்ணம் உள்ளதாக தெரிவித்தீர்கள். இப்போது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மேற்படிப்புகளை அளிக்கிறதே! இதன்மூலம் வெளிநாடு வாழ் தமிழர்கள் குழந்தைகள் உயர் கல்வி தமிழில் பெற உள்ள வசதியைப் பயன்படுத்தலாமே!

நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அமைப்பாகும். அய்யா திரு. குழந்தைசாமி அவர்களிடம் உள்ள நேரிடைத்தொடர்பு இதற்கு ஏதுவாகலாம்.

முதன் முதலில் தமிழ் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போது முதல் பள்ளியை எங்கு துவங்கினீர்கள்? அதன் பிறகு எப்படி? எங்கெங்கு தமிழ் பள்ளிகளை துவங்கி இப்போது எத்தனை பள்ளிகள் நடந்துவருகிறது?

1987 சிகாகோவில் சிறார்களுக்கு மீண்டும் (80 ஆரம்பத்தில் எடுத்த முயற்சி நிலைக்கவில்லை) தமிழ் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் திரு. இராம்மோகன், இளங்கோ, விசுவநாதன், திருவாட்டி. கண்ணகி, கலைச்செல்வி, மீனா ஆகியோருக்குத் தோன்றியதன் காரணமாக வடமேற்கு பல்கலைக்கழக வளாகத்தில் நண்பர் பாலசந்தர் உதவியுடன் முதல் தமிழ்ப்பள்ளி துவங்கியது.

இரண்டாவது தமிழ்ப்பள்ளி லகிரேஞ்சில் நண்பர் திரு.இளங்கோவின் முயற்சியால் 1988 ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி பின்னர் இன்சுடேலுக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1996ல் டேரியனில் "உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை" ஆதரவுடன் இயங்க ஆரம்பித்தது. 2002, 2003 ல் மாணாக்கர் எண்ணிக்கை அதிகமாகியதாலும், பெற்றோர்க்கு பயணச்சுமை குறைக்கவும் சாம்பர்க், நேப்பர்வில், மன்சுடர், கெர்ணி, டெசுபிளெய்ன்சு, மில்வாக்கி போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.

2006ல் சாம்பென்சு, புளூமிங்டனிலும் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒன்பது தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இன்று ஒரு பதிவு செய்யப்பட்ட 501(C)(3) அமைப்பாகவே அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் (Thamizh Schools USA, Inc.,) இயங்கி வருகின்றது.



உங்கள் கருத்துக்கு ஒத்த எண்ணத்தோடு உடன் வந்தவர்கள் குறித்து உங்களுக்குள் மலரும் நினைவுகள் இருக்கும். அவர்கள் குறித்துப் பகிர்ந்து கொள்ள இயலுமா?

எதனையுமே ஆரம்பிப்பது என்பது கடினம்தான் என்றாலும், அதனை நிலையாக முன் நோக்கி நடத்திச் செல்வது என்பது, ஒரு வேள்வி என்றே கூற வேண்டும். நான்கு, ஐந்து நண்பர்கள் முன் நின்று ஆரம்பித்து இன்று தமிழ்த் தொண்டு என்ற எண்ணத்தில் பலரால் (கிட்டதட்ட 40 ஆசியர்களாலும், உதவியாளர்களாலும்) தொடர்ந்து நடத்தப்படுகிறது. நினைவுகளை, நிகழ்வுகளாக மாற்றுபவர்கள் பலர், இதில் யாவுமே பசுமைதான்! வாழ்வில் தமிழால் அமைவன யாவுமே பசுமைதான்!

இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்கப்போவது என்ன?

இதுவரையும் சாதித்தது அணுவளவு! இனி சாதிக்க உள்ளது காலம்தான் பதில் கூறும்.

தமிழ் பள்ளிகள் ஆங்காங்கே துவக்குவது தவிர மற்றபடி தங்கள் பொதுப்பணிகளில் உள்ள ஈடுபாடு குறித்துச் சொல்லுங்களேன்?

இந்த மண்ணில் முதல் தலைமுறையாக காலூன்றியவர் யாவர்க்குமே பொதுப்பணிகள் பெரும் பொறுப்பு! இனம், மொழி, பண்பாடு, கலை என யாவற்றிலும் நாம் நிலையாக இந்த மண்ணில் ஊன்றிட 1986ல் ஆரம்பித்த பணி தொடர்கின்றது, என்று முடியும், எந்த அளவில் முடிந்தன என்பதை இனிய மூச்சு காற்றோடு கலந்த பின் வரும் காலம் சொல்லும்.



இந்தப் பொதுப்பணிகளில் உங்கள் மனது மகிழ்ந்த / நிறைவான‌ சம்பவம் என்று ஒன்றைக் குறிப்பிட்டுக் கூற முடியுமா?

"தீதும் நன்றும் பிறர் தர வாரா ... இனிதென
மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாது
என்றலும் இலமே!" யாவுமே நிறைவுதான்! "

பொதுவாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் செய்தி என்ன?

தமிழ் உணர்வு நம்மோடு உறைந்திடல் வேண்டும். "தமிழ் உயர தமிழால் நாம் உயர்வோம்"

அமெரிக்காவில் தமிழ் பள்ளி துவங்க யாரேனும் முன்வந்தால் நீங்கள் தரும் ஆலோசனை என்ன?

என்றும் எதிர் நோக்கும் உதவிகள் உண்டு. தொடர்புகளை வரவேற்க எனது "அன்னை இல்லம்" என்றுமே காத்துள்ளது.

அன்னை இல்லம் தொடர்பிற்கு மின்னஞ்சல் முகவரி:

annaiillam@hotmail.com ,

thamizhppalli2003@yahoo.com

annaiillam2004@yahoo.com

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/interview/p1.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License