இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Interview
நேர்காணல்

பேராசிரியர் சிவா பிள்ளை

ஆல்பர்ட் பெர்னாண்டோ, அமெரிக்கா


தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியைப் புறக்கணித்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறிக் கொண்டிருக்கிற சூழலில் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்கள் பலர் தாங்கள் இருக்குமிடத்தில் தமிழை முன்னிலைப்படுத்தி அதற்கான சிறப்பைப் பெற்றுத் தந்திருக்கின்றனர். இவர்களில் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியான கோல்ட் ஸ்மித் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்களும் ஒருவர். இவரை முத்துக்கமலம் இணைய இதழுக்காக மின் நேர்காணல் கண்டபோது... அவர் தெரிவித்த பல கருத்துக்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. இனி மின் நேர்காணலுக்குச் செல்வோமா...?

வணக்கம், அய்யா. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தம் வேரை மறக்காமல், கடல் கடந்தும் தமிழ் வளர்க்கப் பாடுபடும் உங்களை நேர்காணல் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வணக்கம்.

வணக்கம், ஆல்பர்ட். இந்த நேர்காணல் மூலம் தங்களைச் சந்திப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்,முதலில் தங்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு.... அதாவது பிறந்தது, வளர்ந்தது, படிப்பு, தொழில், புலம் பெயர்தலுக்கான காரணம், பணி...போன்றவை...

பிறப்பு கட்டைப்பிராய் கிராமம், யாழ்ப்பாணம், இலங்கை - 21 வயது வரை யாழ்ப்பாணத்தில் 18 வயது வரை யாழ் இந்துக்கல்லூரி மாணவன். பின் பல்கைலக்கழக படிப்பிற்கு இலங்கை அரசின் விகிதாசாரப் பாகுபாட்டால் தெரிவு செய்யப்படவில்லை. ஒரு வருடம் மாணவ ஆசிரியர், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி. பெற்றோர் வசதி படைத்திருந்ததால் மேல் படிப்பிற்கு 1967-ல் லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள். லண்டனில் இன்ஜினியரிங் படித்தும் போதிய அனுபவம் இல்லாததால் என் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு மாலை நேர யூனிவர்சிட்டியில் கணினி பற்றி படித்துப் பட்டம் பெற்றேன். இதன் பலனாக பாலிடெக்னிக் ஒன்றில் கணினி தொழில்நுட்ப வேலை கிடைத்தது. "PGCE in Computing" எனும் பட்டப்படிப்பு கிடைத்ததும் தற்போது உள்ள யூனிவர்சிட்டியில் கணினிப் பகுதிக்குப் பொறுப்பாக ஆசிரிய பயிற்சி கல்வித்துறையில் (Education Department) விரிவுரையாளராகவும் வாய்ப்புக் கிடைத்தது. அத்தோடு மாலை நேரப் பள்ளியிலும் கணினி விரிவுரையாளராக தொழில் நியமனம் கிடைத்தது. இங்கு முக்கியமாக கணினி மூலம் எவ்வாறு ஐரோப்பிய மொழி சமூக மொழிகளைக் கற்றுக் கொடுக்கலாம் என்கிற துறைக்குப் பொறுப்பாக இருக்கிறேன். அத்தோடு பயிற்சி ஆசிரியர்கள் எவ்வாறு கணினி உதவியுடன் பாடங்கைளக் கற்றுக் கொடுக்கலாம் என்ற பகுதியில் பயிற்சி அளிப்பவராகவும் கடந்த 30 வருடமாகப் பணி புரிகிறேன். சனிக்கிழைமகளில் நடக்கும் தமிழ் கலைப்பள்ளிக்கும் அரசாங்கப் பள்ளியில் பள்ளி முடிந்ததும் நடக்கும் தமிழ் பள்ளிக்கும் பொறுப்பாக இருக்கிறேன். கேம்பிரிஜ் யூனிவர்சிட்டி அயல் மொழிகள் தலைமைத் தேர்வு அதிகாரியாகவும் லண்டன் எட் எக்ச‌ல் பரீட்ஷைப் பகுதி தமிழ் மொழி தலைமைத் தேர்வு அதிகாரியாகவும் பணிபுரிகிறேன்.



இலண்டனில் நீங்கள் ஆற்றும் தமிழ் பணி குறித்து முத்துக்கமலம் வாசகர்களுக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

1982 முதல் 1984- ஆண்டுகளில் உள்ளூர் கல்வி அதிகார சபை தாய் மொழி கற்பிக்கப்படவேண்டும் என ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதில் சமூகப்பள்ளிகள் மாலை நேரத்தில் வார இறுதியில் ஆரம்பிப்பதற்கு ஊக்கம் அளித்தார்கள். அத்தோடு அச்சமயம் கணினி, கற்பிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட கால கட்டம். மொழிகளையும் கணினி மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஒரு திட்டம் (Project) ஆரம்பித்தார்கள். சமூகத்தில் உள்ள 8 மொழிகளைத் தேர்ந்தெடுத்து அதற்கு எழுத்துருவ வடிவமைப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் சில‌ எழுத்து உருவ அமைப்பிற்கு நான் பொறுப்பெடுத்து ஆல்ரைட் என்ற மென் பொருளை 1984 -ல் எல்லா சமூகப் பள்ளியிலும் என்னால் அறிமுகப் படுத்தப்பட்டது. இது டாஸ் ஆப்ரேட்டிங்கில் பாவிக்கப்பட்டது. அச்சம‌யம் எனக்கு டாக்டர் குப்புசுவாமி இணையம் மூலம் அறிமுகமானார். அவர் அருமையான அணங்கு தமிழ் உருவெழுத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது ஆப்பிள் கணினிக்கும் வின்டோஸ் கணினிக்குமாக ஆக்கியிருந்தார். அவர் அனுமதியுடன் அந்த உருவெழுத்துக்கைள லண்டன் பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தினேன்.

2000 ஆணடுகளில் தாய்மொழி என்ற பெயர் மாறி சமூக மொழி முன் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் கல்விச் சபையால் முன் வைக்கப்பட்டு லண்டன் மாநகரில் 300-க்கு மேல் பேசப்படும் மொழிகளில் 8 மொழிகள் தேர்ந்தெடுக்கபட்டது. முதல் நான்கு மொழிகள் எனது பல்கலைக்கழகத்தால் இந்த நாட்டிற்கு ஏற்ற பாடத்திட்டம் உருவாக்க கல்விக் கழகம் முன் வைத்தது. பாடத்திட்டம் உருவாக்கும் குழுவில் கணினி பகுதிக்கு நான் பொறுப்பாக நியமிக்கப்பட்டேன். எனக்கு தமிழ் ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் எதுவும் தெரியாது எனக் கூறினேன். மேலும் வேண்டுமானால் தமிழ் மொழியை உதாரண‌மாக வைத்து ஏனைய ஆசிய ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக் கொடுக்கலாம் என எனது கருத்தை முன் வைத்தேன். ஆசிய மொழிகளில் சைனீஸ், பஞ்சாபி, அராபிக், உருது என 4-மொழிகளுக்குப் பாடத்திட்டம் அமைக்கக் குழு உருவானது. அச்சமயம் தமிழையும் ஏன் சேர்க்கக் கூடாது என் நான் முன்மொழிந்தேன், அதற்கு தமிழ் அரசாங்க முன் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை அதனால் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை எனக் கூறப்பட்டது. அச்சமயம் நான் குடியிருக்கும் பகுதிக்கு சமீபத்தில் உள்ள முன் பள்ளியில் ஐரோப்பியாவில் இருந்து, ஆங்கிலப் பள்ளியில் தமது குழந்தைகளைக் கற்பிக்க வைக்க வேண்டுமெனக் குடியேறிய மக்கள் அங்கு செறிந்து வாழ்ந்தார்கள். அப்பள்ளியில் 40 குழந்தைகள் கற்றுக் கொண்டு இருந்தார்கள். தலைமை ஆசிரியரை அணுகி அங்கு பள்ளி முடிந்ததும் தமிழ் வகுப்பை ஆரம்பித்தேன். இதை உதாரணமாகக் காட்டி தமிழ் மொழியையும் பாடத்திட்ட உருவாக்கக் குழுவில் புகுத்தி அதற்கு நான் பொறுப்பாக இருக்கிறேன் என்றும் தமிழ் மொழிக்கும் இந்நாட்டிற்கு ஏற்ற பாடத்திட்டத்தை உருவாக்க நான் மூவர் உதவியுடன் இங்கிலாந்தில் அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டத்தை ஏனைய நான்கு மொழிகளுக்கு உள்ளது போல் உருவாக்கினேன்.



மாணவர்கள் ஆங்கில வழியில் தமிழ் கற்க புத்தகம், குறுவட்டு போன்று ஏதும் தயாரித்திருக்கிறீர்களா?

இங்கிலாந்தில் வெளியிட்ட தமிழ் மொழி பாடத் திட்டத்தில் ஒவ்வொரு தரத்திலும் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும்? எவ்வாறான வளங்கள் இருக்கின்றன? எவ்வாறான‌ வளங்களை உருவாக்கிக் கொள்ள‌ வேண்டும் என்று அதற்கான புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. 9 தரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதில் ஒவ்வொரு தர மாணவர்களுக்கும் எப்படி? என்ன விபரங்களைக் கற்றுக் கொடுக்கலாம்? என்பது போன்ற விபரங்கள் அடங்கியுள்ளன. சமீபத்தில் தமிழ்நாட்டிற்குச் சென்ற போது தமிழ் மாணவர்கள் கற்க எளிதான ஃப்ளாஷ் கார்டுகள் உருவாக்கி வந்து அறிமுகம் செய்துள்ளேன்.

புல‌ம் பெய‌ர்ந்து வாழும் த‌மிழ் குடும்ப‌ங்க‌ளில் உள்ள‌ சிறார்க‌ள் எல்லாம் விருப்ப‌த்துட‌ன் த‌மிழ் க‌ற்கிறார்க‌ளா?

இந்த நாட்டில்... இங்கிலாந்தில் எவ்வாறு மொழியைக் கற்பிக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் தமிழ் மொழியையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆர்வ‌மாகக் கற்பார்கள். ஐரோப்பிய மொழிகளை இங்கு சுலபமாக கற்றுக் கொள்கிறார்கள். ஏன் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள முடியாது? அவர்கள் சலிப்படையக் காரணம் நாம் ஊக்கமில்லாமல் அவர்களுக்கு அந்த‌ தமிழைக் கற்றுக் கொடுப்பதால்தான். ஏனைய முறையில் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் கற்றுக் கொடுத்தால் எந்த மாணவர்களும் சுலபமாகத் தமிழைக் கற்றுக் கொள்வார்கள். இந்த நாட்டில் வீட்டில் பிரெஞ்ச் பேசாமல் இருந்தும், தமிழ் மாணவர்கள் அழகாகப் பிரெஞ்ச் பேசுகின்றனர். காரணம், அவர்கள் வகுப்பில் பிரெஞ்ச் கற்றுக் கொண்டிருப்பதால் அதை அழகாகப் பேசுகின்றனர். அதே போல் தமிழைக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்வார்கள். அதிலும் 2006 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மொழியும் அங்கீகரிக்கப்பட்டு கற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கிரடிட் முறை கொடுக்கப்படுகிறது. இதனால் ஆர்வமாக தமிழையும் மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். கடந்த காலத்தில் கற்றுக் கொடுத்தது போல் இல்லாமல் நவீனத் தொழில் நுட்பத்துடன் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

தங்கள் குழந்தைகளிடம் வீட்டில் ஆங்கிலத்தில் பேசாமல் தமிழில் பேசினால் தமிழில் நாட்டம் ஏற்படும் இல்லையா? பெரும்பாலான பெற்றோர் இல்லங்களில் ஆங்கிலத்திலேயே உரையாடுவதும் குழந்தைகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வம் பேசும் எண்ணம் குறைவதாகப் பரவலான கருத்து உள்ளது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வீட்டில் தமிழ் பேசினால் விரைவில் தமிழை அழகாகப் பேசுவார்கள், என்பது உண்மை. ஆனால், இங்கிலாந்தில் இரண்டு விதமான சமூகம் இருக்கிறது. க.மு. இரண்டு க.பி. என இரண்டு வகைப்படுத்தலாம். அதாவது கலவரத்துக்கு முன் வந்தவர்கள், கலவரத்துக்குப் பின் வந்தவர்கள் என்று இரு வகையாகப் பிரிக்கலாம். கலவரத்துக்கு முன் வந்தவர்கள், தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்புகிறார்கள். இதனால் கலவரத்துக்கு முன் வந்தவர்கள் குழதைகள் தமிழ் பேசக் கூச்சப்படுகிறார்கள். கலவரத்துக்குப் பின் வந்தவர்கள், முக்கியமாக ஐரோப்பிய நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்கள் தமிழை நன்றாகப் பேசுகிறார்கள். இவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது சிரமம். அதனால் அந்த ஐரோப்பியக் குழந்தைகள் வீட்டில் தமிழில் பேசுவது அதிகமாகக் காணக் கூடியதாக இருக்கிறது. இதுபோல் தமிழை வீட்டில் வழக்கமாகப் பேசினால் குழந்தைகள் சுத்தமாகத் தமிழ் பேசுவார்கள் என்பதுதான் என் நம்பிக்கையும்.



கடந்த ஆண்டு தங்கள் தமிழ்க் கல்விச் சேவைக்காக கிடைத்த விருது குறித்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.

2007 ஆம் ஆண்டு மொழிகளுக்கான விருது எனக்கு கிடைத்தது. சமூக மொழியை (தமிழ்) முன் பள்ளிகளில் எவ்வாறு மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படும் வகையில் கற்பிக்கலாம்? அவர்களை அதில் ஈடுபாடடையச் செய்யலாம்? என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை உருவாக்கி அது ஐரோப்பிய மொழிச் சபையால் சிறந்த ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதினை எனக்கு அளித்தார்கள். இதை என்னால் மறக்க முடியாது. ஏனைய ஆசிய மொழிகளுக்கும் (சைனீஸ், உருது, பஞ்சாபி, அராபிக்) பவர் பாயின்ட் மென்பொருளை உபயோகித்து கணினியை எவ்வாறு மொழிகள் கற்பிப்பதற்கு வளமாக உபேயாகிக்கலாம் என்பது பற்றிய விளக்க உரையை பள்ளிகளில் கருத்தரங்கு பட்டறைகள் நடத்திச் செயல்பட்டு வருகிறேன். 2000 ஆம் ஆண்டில் இதை சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் மாநாட்டிலும், ஏனைய ஆசிரிய மாநாட்டிலும் ம‌ல்டிமீடியா வளங்கள் மூலம் தமிழ் கற்பிக்கும் வழிமுறை பற்றி தெளிவாக எடுத்துரைத்திருந்தேன். சமீபத்தில் நாட்டியத்தையும் தமிழையும் வளங்கைளப் பயன்படுத்தி எவ்வாறு மொழியைக் கற்றுக் கொடுக்கலாம் எனும் திட்டத்துடன் நாட்டிய ஆசிரியரையும் தமிழ் ஆசிரியரையும் ஒன்றுபடுத்தி புதிய வழிமுறையைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளேன். அது தேசிய ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜீலை 24-ஆம் தேதியில் சவுதாம்டன் பல்கலைக்கழகத்தில் இது பற்றிய விளக்க உரையைச் செய்து காண்பிக்க இருக்கிறேன். இதற்கு தங்கள் ஆசீர்வாதமும் வேண்டுகிறேன்.

தமிழாளர்கள் அனைவரின் ஒட்டு மொத்த ஆசீர்வாதமும் உங்களுக்குக் கண்டிப்பாக கிடைக்கும். ஆசி அளிக்கும் நிலையில் உள்ளவன் நானில்லை; புனிதப் பணியாம் ஆசிரியப் பணியில் அற்புதங்களை அயலகத்தில் தமிழ் மாணவர்களுக்காக நிகழ்த்திக் கொண்டிருக்கும் தங்களுக்கு எதிர்பார்த்திருக்கும் வெற்றி கிடைத்திட என் சார்பிலும் முத்துக்கமலம் இணைய இதழ் வாசகர்கள் சார்பிலும் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க மகிழ்ச்சி.

தமிழ்நாட்டிற்குச் சென்று தமிழ்க் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் போது உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கருத்தரங்குகள் நிகழ்ந்திருக்கிறதா? ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தும் போது எவற்றையெல்லாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

உலகத்தமிழ் ஆசிரிய மாநாட்டிற்கு கடந்த 7 வருடமாகப் போய் வருகிறேன். படைப்புகள் காண்பித்திருக்கிறேன், பாராட்டுகள் பெற்றிருக்கிறேன். முக்கியமாக ஒரே எண்ணம் கொண்ட பல புதிய நண்பர்கைளச் சந்தித்திருக்கிறேன். இணையத்தில் சந்தித்தவர்களை நேரே பார்க்கும் போது ஒரு ஆத்ம திருப்தி, முக்கியமாக சிங்கை கிருஷ்ணன், பழனி, மணியம் போன்றவர்கள் மறக்க முடியாத நண்பர்கள். இவர்களை எல்லாம் இவ்வாறான மாநாடுகளில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியாயிருக்கும். இன்னும் முக்கியமாக எனது நெருங்கிய உயிர் நண்பன் திரு வெங்கட் (மைக்ரோசாஃப்ட் இயக்குனர்) மறக்க முடியாதவர். குறிப்பாக தமிழ் நாட்டு முன்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் நிறைய இருந்தும் இவ்வாறான ஆசிரிய மாநாடுகளில் ஆண்களின் தலைகள் தான் நிறைய எனக்குத் தெரிந்தது. சமத்துவம் அளிக்கப்படவில்லையே என்ற கவலை எனக்கு உண்டு. மேடையில் இதுபற்றிக் கேட்டும் இருந்தேன். தமிழ்நாட்டு ஆசிரிய மாநாடுகள் சிறப்பாக நடத்துகிறார்கள் பெரும்பாலும் மலேசிய ஆசிரியர்கள் அதிகமாகப் பங்கெடுக்கிறார்கள். நம் கருத்துக்களையும் படைப்புகளையும் பரிமாறிக் கொள்வதற்கு இந்த மாநாடுகள் ஒரு அரிய வாய்ப்பு. தமிழ்நாட்டு கிராமப் பள்ளிகளுக்குச் சென்று கணினி வகுப்புகள் நடத்துவது எனக்கு மிகவும் மனத்திருப்தி அளிப்பதால் இந்த மாநாடுகளுக்கு வரும் போது அதைச் செய்து மகிழ்ச்சி கொள்கிறேன்.



ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள தாங்கள் ஆற்றும் ஆன்மீகப் பணிகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

எனது அப்பா அம்மா தமிழ் ஆசிரிய‌ர்கள். அப்பா எமது ஊர் கோவில் நிர்வாகி. இதனால் எமது வாழ்க்கையில் துவக்கக் காலம் அதிகமாக கோவிலிலேயே கழிந்திருக்கிறது. அப்பா பூந்தோட்டத்திற்குத் தண்ணீர் இறைக்கும் போது தமிழ் சமயம் கேள்வி வாயிலாகக் கற்றுக் கொண்டேன். சிறு வயதிலேய என்னை அப்பா ஆசிரமங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 9 வயதில் ரிஷிகேஷம் அப்பாவுடன் போயிருந்தேன். அப்போது தென்னிந்தியக் கோவில்களுக்கும் போயிருந்தேன். 9 வயதில் அப்பா யோகா கற்றுக் கொள்ள சுவாமி சச்சிதானந்தாவிடம் ஒப்படைத்தார். அதனால் சில காலம் யோகா ஆசிரியராகவும் இருந்தேன். தற்போது நான் யோகா பயிற்சி அளிப்பதில்லை ஆனால் என் மகள் பயிற்சி அளித்து வருகிறார். இதனால் என்னால் எங்கும் சமநிலையில் வாழ முடிகிறது. சுவாமிஜியின் மூலம் பல அறிஞர்கள் அறிமுகமாகி வருவதுடன் பலர் என் வீட்டுக்கும் வந்து சென்றிருக்கிறார்கள்.

இலங்கையில் உங்கள் பதின்ம வயதில் நடந்த மறக்க இயலாத நிகழ்வு என்று ஏதாவது இருந்தால் அதைச் சொல்லுங்களேன்?

சுவாமி சச்சிதானந்தர் குருவாகக் கிடைத்தமை எந்த சூழ்நிலையிலும் வாழக்கூடிய மனப்பக்குவத்தைதத் தந்தது, மருந்தின்றி வாழ வழி வகுத்தது. எனவே அதுதான் எனக்கு மறக்க முடியாத நிகழ்வு.

நீங்கள் ஒருவேளை புலம் பெயராமல் இலங்கையிலேயே இருந்திருக்க நேரிட்டால் நீங்கள் புலம் பெயர்ந்து சாதித்ததைவிட சிறப்பாகச் சாதித்திருக்க முடியும் என்று கருதுகிறீர்களா? ஆம், எனில் அது பற்றி...?

இவ்வளவு வசதி வாய்ப்புகள் அங்கு கிடைத்திருக்காது. 2007 வரை இலங்கை சென்று கணினி வகுப்புகளை யாழ்பாணம் மற்றும் தீவு முன்பள்ளிகளில் நடத்தி வந்தேன். எனது யூனிவர்சிட்டியில் பாவித்த‌ கணினிகளை ஊருக்கு அனுப்பி அங்கெல்லாம் கணினி நிலையம் உருவாக்க வாய்ப்பு இங்கிருப்பதால்தான் கிடைத்தது.

இதுவரை சாதித்ததாக நீங்கள் கருதுவது, இனி சாதிக்க விரும்புவது என்று நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்?

உள்ளவரை மற்றையோர் மனம் மகிழ உதவுவதுதான் என் தொடர் விருப்பம். இதுவரை சாதித்தாகக் கருதுவது தமிழ் மொழி பாடத்திட்டம்! இது இங்கிலாந்தில் ஏனைய ஐரோப்பிய மொழிகளின் தரத்தில் உள்ளது. இதுதான் நான் சாதித்தது என்று சொல்லலாம். உலகில் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளிப்பதற்கு என்னால் இயன்றவரை உதவியிருக்கிறேன். இதுவும் எனது மற்றொரு சாதிப்பு என்று சொல்லலாம்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

இன்று நம்நாடு கலங்கி இருக்கிறது. பல மக்கள் அடைபட்டு உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி படுக்கக் கூரையின்றி இருக்கிறார்கள். இவர்களுக்கு முடிந்தளவு தனிப்பட்ட முறையில் கரங்கள் நீட்டி நாம் எல்லோரும் உதவ வேண்டும்



ஈழத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து உங்கள் அவதானிப்பைச் சொல்ல முடியுமா?

"ஈ இருக்கும் இடம் தன்னும் ஈயேன்" என்கிறார் மகிந்தா, சரி நிம்மதியாக வாழ விடு என்று இன்றைய மக்கள் கேட்கிறார்கள். இப்போதெல்லாம் ஒரு வேளை உணவு கிடைத்தால் போதும் என்றாகி விட்டது. தந்தை செல்வா காலத்தில் சாத்வீகப் போரில் தோற்று விட்டோம். தலைவர் காலத்தில் ஆயுதப் போரால் தோற்று விட்டோம் பல உயிர்களை உறவுகளை இழந்துள்ளோம். இன்றைய ஈழமக்கள் நிலை நம் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இலங்கையில் இருக்கும் ஈழமக்கள் விரைவில் நல்நிலைக்கு வரவேண்டும். அவர்கள் துயர் துடைக்கப்பட வேண்டும்.

தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் தங்களின் எதிர்காலத் திட்டம் என்பது குறித்து ஏதாவது முடிவு செய்து வைத்திருப்பீர்கள். அது பற்றி....?

ஓய்வு என்பது எனக்கில்லை, உடல் அசையும் வரையில் தொடர்ந்தும் இதே பணிகள் செய்ய விருப்பம் ஊருக்குப் போக வேண்டும் எம் குழந்தைகளுக்கு எனக்குத் தெரிந்ததை கற்றுக் கொடுக்க வேண்டும். இதுவே என் ஆசை!

உங்களின் பொன்னான நேரத்தை பல வேலைகளுக்கிடையில் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து முத்துக்கமலம் வாசகர்களுக்காக சிரமம் பாராமல், எனது கேள்விகளுக்கு பொறுமையாகப் பதிலளித்தமைக்கு முத்துக்கமலம் இணைய இதழின் சார்பாக மிக்க நன்றிகளய்யா! நன்றி, வணக்கம்.?

எனது கருத்துக்களை உலகத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவிய உங்களுக்கும், முத்துக்கமலம் இணைய இதழுக்கும் என் நன்றிகள். என்றென்றும் தொடரட்டும்... உங்கள் சேவை வாழ்க! நன்றி, வணக்கம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/interview/p6.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License