இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Interview
நேர்காணல்

சிரிப்பு யோகி சிரிப்பானந்தா

சித்திரைச் சிங்கர்


கோடிகோடியாகப் பணம் சேர்க்க வேண்டும் அதுவே என் இலட்சியம் என்று போய்க் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் ஒருவர் ஒரு கோடி பேரையாவது சிரிக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்கிற முனைப்புடன் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் கவலைகளையெல்லாம் மறந்து சிரிக்க வேண்டும். அதன் வழியாக வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த சிரிப்பானந்தா அவர்களை முத்துக்கமலம் இணைய இதழுக்காகச் சந்தித்தபோது;

தங்களைப் பற்றிச் சொல்லுங்கள்

எனது பெயர் சம்பத். நான் எம்.காம் படிப்பை முடித்துத் தனியார் நிறுவனமொன்றில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர் அங்கிருந்து வெளியேறி, தற்போது சென்னை, அண்ணா நகரில் ரைட் சாய்ஸ் இன்வெஸ்டீ எனும் பெயரிலான முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறேன். சிரிப்பு யோகாவை மனமகிழ்ச்சிக்காகச் செய்து கொண்டிருக்கிறேன்.

சிரிப்பு யோகாவைப் பற்றி...?

உடல் நலத்திற்கு உதவும் யோகாவிலுள்ள ஆசனங்கள், மூச்சுப்பயிற்சிகள், தியானம் போன்ற பயிற்சிகளைக் கடினமாக நினைத்துப் பலரும் பயப்படுகின்றனர். அவர்கள் பயத்தைப் போக்கி, அனைத்து வயதினரும் எளிமையாகச் செய்யக்கூடியதாக சிரிப்புடன் மகிழ்ச்சியையும் சேர்த்து யோகா பயிற்சியளிக்கும் முறைகளில் ஒன்றுதான் சிரிப்பு யோகா. இந்த சிரிப்பு யோகா, தேன் தடவிய மருந்து என்பதால் பலரும் இதைத் தொடர்ந்து பின்பற்றமுடியும்.


சிரிப்பு யோகா யாருக்கு...?

பள்ளிக்குழந்தைகள் முதல் ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிரிப்பு யோகாவின் தேவை இருக்கிறது. மனதிலிருக்கும் கவலையைப் போக்கி மகிழ்ச்சி அலையில் நம்மைச் சிரிக்க வைக்கும் இந்த சிரிப்பு யோகாவை வேண்டாமென்று யாரும் சொல்வதில்லை. இந்த சிரிப்பு யோகாவைப் பற்றித் தெரியாமலிருக்கும் பலரையும் நான் தேடிச்சென்று அவர்களுக்குச் சிரிப்பு யோகாவை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன்.

பள்ளிக் குழந்தைகளுக்கு சிரிப்பு யோகா எதற்கு?

பள்ளிக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து தரப்படும் பாடச்சுமை, மதிப்பெண் அதிகரிப்பதற்கான தொடர் தேர்வுகள் என்று அவர்களுக்குள் ஏற்படும் மன அழுத்தம் அவர்கள் வாழ்க்கையை கவலைக்குரியதாக்கி விடுகிறது. அவர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சிகள் மகிழ்ச்சியை மட்டுமின்றி, வாழ்க்கையையும் எளிதாக எடுத்துக் கொள்ளவும் வழிகாட்டுகிறது. குறிப்பாக அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு பயத்தைப் போக்குவதற்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கிறது. நான் நூற்றுக்கும் அதிகமான பள்ளிகளில் சிரிப்பு யோகா பயிற்சிகளை அளித்திருக்கிறேன். நான் பயிற்சியளித்த பல பள்ளிகளிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளிலிருந்தும் கூட அழைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. கல்லூரிகளில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள இந்தப் பயிற்சிகள் அவசியத் தேவையாகவுமிருக்கின்றன.


மாணவர்களைத் தவிர்த்து, வேறு யாருக்கு சிரிப்பு யோகா...?

போட்டிகளும் சவால்களும் நிறைந்ததாக இன்றைய பணிச்சூழல் இருக்கிறது. இந்தச் சூழலில் பணியாற்றுபவர்கள் அனைவருமே பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். தங்கள் பணிகளால் ஏற்படும் பல்வேறு மன அழுத்தங்களிலிருந்து விடுபடவே பலரும் விரும்புகின்றனர். இதற்காகச் சிலர் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் என்று உடலுக்குக் கேடு விளைவிக்கும் தீயபழக்கங்களுக்குப் பாதை மாறிச்சென்று அதிலிருந்து விடுபட முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் மன அழுத்தங்களைத் தங்களுக்குள்ளாகவே புதைத்துப் பல்வேறு நோய்களில் மாட்டிக் கொண்டு மருத்துவமனைகளுக்குப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். சிலர் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை வரையிலான தவறான நிலைக்குக் கூடச் சென்றுவிடுகின்றனர். தங்கள் பணிகளினால் ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து விடுபடவும், உடல்நலத்துடன் சிறப்பாகப் பணியாற்றிடவும் பணியாளர்களுக்குச் சிரிப்பு யோகா அவசியமானதாக இருக்கிறது.

மது அருந்துபவர்களை அப்பழக்கத்திலிருந்து சிரிப்பு யோகா விடுவிக்குமா?

மது அருந்துபவர்கள் பலருக்கும் மது அருந்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அனைத்துக் காரணங்களும் கவலை எனும் ஒரு காரணமே மூலகாரணமாக இருக்கிறது. உடலுக்கும், உள்ளத்துக்கும், சமூகத்திற்கும் தீமை தரக்கூடிய மதுப்பழக்கத்திலிருந்து விடுபட சிரிப்பு யோகா உதவுகிறது. அவர்களின் கவலையைத் தூக்கி எறிந்து, மதுப்பழக்கத்தையும் கைவிட சிரிப்பு யோகாவின் மூலம் சிலருக்குச் சில பயிற்சிகள் அளித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன். மதுபாட்டில்களில் சிறைப்பட்டுக் கிடந்த அவர்கள் மனம் திருந்தி, அதிலிருந்து விடுபட்டு தற்போது சிரிப்பில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர்.


சிறையிலிருக்கும் கைதிகளுக்கும் சிரிப்பு யோகா பயிற்சியளித்து அவர்கள் கவலையைக் குறைக்க முயற்சிக்கலாமே...?

சிறைக்கைதிகளுக்கும் சிரிப்பு யோகா பயிற்சியைக் கொண்டு சென்று விட்டேன். வேலூர் நகைச்சுவை மன்றத்தினர் முதன்முதலாக எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கினார்கள். அவர்கள் மூலமாக, வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக இருக்கும் பெண்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சியை வழங்கினேன். ஏதொவொரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற அவர்கள் என் சிரிப்பு யோகா பயிற்சி மூலம் மகிழ்ச்சியைப் பெற்றார்கள்.

இதுபோல் சென்னை புழல் சிறைச்சாலையில் 18 வயதிலிருந்து 24 வயது வரை உள்ள விசாரணைக் கைதிகளுக்கு அங்குள்ள சிறப்புப் பள்ளியில் சிரிப்பு யோகா பயிற்சியளித்து அவர்கள் அனைவரையும் கவலை மறந்து சிரிக்க வைத்தேன். கோபத்தில் அவர்கள் செய்த ஏதோ ஒரு குற்றச்செயல் அவர்களை குற்றவாளிகளாக்கி சிறைக்கைதிகளாக்கி விட்டது. அவர்கள் மனத்திலும் பல்வேறு ஆசைகள் புதைந்து கிடக்கிறது. அவர்கள் விரைவில் அந்த இடத்திலிருந்து விடுதலை பெற்று, மனம் திருந்தி நல்வழியில் பயணிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இறைபக்தியில் இருப்பதால்தான் தங்களது பெயரைச் சிரிப்பானந்தா என்று மாற்றிக் கொண்டீர்களா...?

இறைவனைத் தேடுபவர்கள் இறைபக்தியில் ஆனந்தமடைவார்கள். அவர்களது இறைபக்தி வழிமுறைகளுக்கேற்ப ஒரு பெயரைத் தேர்வு செய்து அதனுடன் ஆனந்தா எனும் பெயரையும் சேர்த்து தங்கள் பெயரையும், தங்களையும் மாற்றிக் கொள்வார்கள். நான் சிரிப்பின் மூலம் ஆனந்தமடைகிறேன். சிரிப்பையும், அதனால் உண்டாகும் மகிழ்ச்சியையும் உணர்ந்து என்னை சிரிப்பானந்தாவாக மாற்றிக் கொண்டேன். சிரிப்புக்கு மொழி அவசியத் தேவையில்லை, சில ஒலிகள் இருந்தால் போதும், சில காட்சிகள் இருந்தால் போதும், எவரையும் சிரிக்க வைத்து விடலாம். சிரிப்புக்கு ஒரே மொழி ஹாஹா... நான் சிரிப்புக்கான ஹாஹாவிலிருந்து ஹாவையும், சிரிப்பால் கிடைக்கும் உற்சாகத்தின் மொழியான ஓஹோ என்பதிலிருந்து ஹோவையும் எடுத்து சிரிப்பையும், உற்சாகத்தையும் ஒன்றிணைத்து “ஹாஹோ” என்று புதிய ஒலியை என் பயிற்சியின் மந்திரச்சொல்லாக்கிக் கொண்டேன். இதனால் என்னை ஹாஹோ சிரிப்பானந்தா என்றுதான் எல்லோரும் அழைக்கின்றனர்.


சிரிப்பின் வழியாக இறைவனைக் காண முடியுமா...?

சிரிப்பின் வழியாக மகிழ்ச்சியைக் காண முடியும். ஏதாவதொரு குறையுடையவர்கள் அந்தக் குறையைப் போக்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவதற்காக ஆன்மிக வழிகளில் இறைவனைத் தேடுகின்றனர். சிரிப்பும் நம் குறைகளைப் போக்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. சிரிப்பிற்கு வயது, பாலினம், சமயம், மொழி, நாடு என்று எந்தவிதமான பாகுபாடும் கிடையாது. இறைவனைக் கண்டால் பேய்களுக்குப் பயம் என்று சொல்வார்கள். நான் சிரிப்பைக் கண்டால் நோய்களுக்குப் பயம் என்றுதான் சொல்கிறேன்.

சிரிப்பைக் கண்டால் நோய்கள் ஓடிப்போய் விடுமா...?

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது உண்மைதான். நமது நுரையீரல் சுமார் 2.4 லிட்டர் காற்று கொள்ளளவு கொண்டது. அது ஆக்ஸிஜன் பிரிக்கப்பட்டபின் உள்ள அசுத்தக் காற்றாகும். சாதாரணமாக மூச்சு விடும்போது 0.8 லிட்டர் அசுத்தக்காற்று வெளியேறி அதே அளவிலான புதுக்காற்று உட்புகுகிறது. ஆனால் வாய்விட்டுச் சிரிக்கும்போது இந்த அளவு மாறுபட்டு, 1.8 லிட்டர் அளவிற்கு புதுக்காற்று உட்புகுந்து இரத்தத்திற்கு அதிக அளவில் பிராணவாயு கிடைப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் அனைத்துச் செல்களுக்கும் சக்தி அதிகமாகக் கிடைக்கிறது. இதானல் பல நோய்கள் ஓடி ஒளிகிறது. மேலும், என்டோஃபின் என்று சொல்லக்கூடிய முக்கியமான திரவம் ஒன்று சுரக்கிறது. இது பயம், கோபம் போன்ற எதிர்மறை எண்ணங்களை மாற்றி, மனஅழுத்தத்தைப் பெரிதும் குறைப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மன நலனுக்கு சிரிப்பு பெரிதும் உதவுகிறது.


மனநலம் குறைந்தவர்கள் சிரிப்பு யோகா செய்யலாமா? இதனால் பயனுண்டா?

மனநலம் குறைந்தவர்கள் பலரும் சிரிப்பைப் பற்றி அறியாமல் போனவர்களே... மனநலம் குறைவுடையவர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சிகிச்சைகளுடன் சிரிப்பு யோகா பயிற்சியும் சேர்த்து அளிக்கலாம். மனநலம் குன்றியவர்களுக்கு அளிக்கப்படும் நம்முடைய சிரிப்பு யோகா பயிற்சிகள் குறித்து அவர்கள் அறியா விட்டாலும், அவர்கள் நம்மைப் போல் செய்து பார்க்க முயற்சிக்கிறார்கள். நாம் சிரிப்பதைப் பார்த்து அவர்களும் சிரிக்கிறார்கள். சில மனநலம் குன்றியவர்களுக்கான பாதுகாப்பில்லங்களுக்குச் சென்று பயிற்சியளித்திருக்கிறேன். அடுத்த முறை நான் அங்கு செல்லும் போது என்னைப் பார்த்து அவர்கள் சிரிப்பது எனக்கு மனமகிழ்ச்சியளிக்கிறது.

சிரிப்பு யோகாவில் கடினமான பயிற்சிகள் எதுவுமில்லையா?

சிரிப்பு யோகா என்பது யோகாவை எளிமையாகச் செய்யும் ஒரு பயிற்சிதான். இது நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, விளையாட்டுக்கள் கைதட்டல்கள் போன்றவைகளை ஒன்றிணைத்து, அனைத்து வயதினரும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பயிற்சி. 220க்கும் அதிகமான பயிற்சிகள் இருப்பினும், இவையனைத்தும் சிரிப்பு ஒன்றை மட்டுமே முடிவாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் பயிற்சிகள் அனைத்தும் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் நன்மை அளிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சிரிப்பு யோகா பயிற்சிக்கு வந்தவர்கள் எவரும் என்னால் இது முடியாது என்று ஓடியதே இல்லை. எனக்கு இந்தப் பயிற்சி எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னதுமில்லை.


இந்தப் பயிற்சிக்குத் தங்களின் ஆசிரியர் என்று யாரைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறீர்கள்?

உடல், மனம், ஆன்மா என்று மூன்றையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. இந்த யோகாசனப்பயிற்சிகளில் சில எளிய யோகாசனங்களுக்கான பயிற்சியை சிரித்துக் கொண்டே செய்வதற்கேற்றவாறு எளிமையான “சிரிப்பு யோகா” பயிற்சியை அலோபதி மருத்துவரான மதன் கட்டாரியா என்பவர் உருவாக்கினார். இவர்தான் என் சிரிப்புப் பயிற்சியின் ஆசிரியர் என்று சொல்வேன். இவரிடம் பெற்ற பயிற்சியிலிருந்து சில பயிற்சிகளை நான் சில தேவைகளுக்கேற்ப மாற்றிப் புதிய பயிற்சிகளை உருவாக்கி விரிவாக்கம் செய்து இருக்கிறேன். மருத்துவரான மதன் கட்டாரியா சிரிப்புப் பயிற்சியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாளில் “சிரிப்பு யோகா இயக்கம்” எனும் அமைப்பு ஒன்றையும் தொடங்கினார். இந்த அமைப்பு தற்போது உலகில் 65 நாடுகளில் ஆறாயிரத்துக்கும் அதிகமான நகைச்சுவை மன்றங்கள் எனும் அளவில் விரிவடைந்திருக்கிறது. இந்த மன்றங்கள் மன அழுத்தங்களைப் போக்கும் சிரிப்பு யோகா பயிற்சிகளை உலகம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

பிறநாடுகளுக்குச் சென்று சிரிப்பு யோகா பயிற்சியளிப்பீர்களா...?

என்னுடைய சிரிப்பு யோகா பயிற்சியின் வழியாகப் பணம் தேடி வெளிநாடு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் சிரிப்பிற்காக, எந்த நாட்டிலிருந்து என்னை அழைத்தாலும், சிரிப்புப் பயிற்சியளிக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் குறைந்தது ஒரு கோடி பேரையாவது சிரிக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று சிரிப்பு யோகா பயிற்சிகளை அளிக்க விரும்புகிறேன். என்னுடைய விருப்பம் நிறைவேறிட எனக்கு பல்வேறு ஊடகங்கள் உதவி வருகின்றன. தற்போது இணைய ஊடகமான முத்துக்கமலம் என் விருப்பத்தை இந்த நேர்காணல் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பத்தாமாண்டில் நுழைந்திருக்கும் முத்துக்கமலம் இணையத்தில் இணைந்திருக்கும் அனைவருடனும் இணைந்திட என் இனிய நல்வாழ்த்துகள்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/interview/p8.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License