வதக்கிய காரக்குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
2. பூண்டு – 10 பல்
3. தக்காளி – 4 எண்ணம்
4. சிறிய கத்தரிக்காய் -10 எண்ணம்
5. புளி – எலுமிச்சை அளவு
6. மிளகாய்த்தூள் – 2 1/2 தேக்கரண்டி
7. மல்லித்தூள் – 1 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு
அரைக்க
10. தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி
11. முந்திரிப்பருப்பு – 4 எண்ணம்
12. கசகசா – 1/2 தேக்கரண்டி
13. சோம்பு – 1/4 தேக்கரண்டி
14. மிளகு - 1/4 தேக்கரண்டி
15. பூண்டு – 2 பல்
தாளிக்க
16. கடுகு – 1/2 தேக்கரண்டி
17. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
18. சோம்பு – 1/2 தேக்கரண்டி
19. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. பூண்டைத் பூண்டைத் தோல் நீக்கி வைக்கவும்.
3. கத்தரிக்காயைக் காம்பு நீக்கி, நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
4. புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
5. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும்.
7. பின்னர் அதில், தக்காளி, கத்தரிக்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
8. கத்தரிக்காய் நன்கு வதங்கிய பின்பு, மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
9. பின்பு, அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
10. புளிக்கரைசலை ஊற்றிச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
11. கொதித்து வரும் போது அரைத்து வைத்த விழுதைக் கலந்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.