பிரண்டைக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பிரண்டை - 1 கப்
2. புளி - 50 கிராம்
3. சின்னவெங்காயம் - 10 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பூண்டு - 7 பல்
6. சாம்பார்பொடி - 1 மேசைக்கரண்டி
7. வெல்லம் - சிறிது
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
10. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிது
12. பெருங்காயத்தூள் - சிறிது
13. உப்பு - தேவையான அளவு
வறுத்துப் பொடி செய்ய:
14. நல்லெண்ணைய் - 1 மேசைக்கரண்டி
15. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
16. மல்லி – 2 தேக்கரண்டி
17. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
18. கறிவேப்பிலை - சிறிது
19. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
20. கசகசா - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் காய வைக்கவும்.
3. தக்காளி, வெங்காயம், பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. புளியைச் சிறிது நீரில் கரைத்து வைக்கவும்.
5. வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
7. பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
8. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
9. தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையைச் சேர்த்து வதக்கவும்.
10. தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும்.
11. புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
12. பிரண்டை வெந்த பின்பு வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.