முள்ளங்கி சாம்பார்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. முள்ளங்கி- 1/4 கிலோ
2. பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
3. துவரம்பருப்பு- 1/2 கோப்பை
4. தக்காளி - 2 எண்ணம்
5. வெங்காயம்- 2 எண்ணம்
6. மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
7. சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லித்தூள்- 2 தேக்கரண்டி
9. மஞ்சத்தூள்- 1/2 தேக்கரண்டி
10. பூண்டு- 4 பற்கள்
11. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
12. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
13. சீரகம்- 1 தேக்கரண்டி
14. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
15. சிறிய வெங்காயம்- 5 எண்ணம்
16. கறிவேப்பிலை- ஒரு கொத்து
17. மல்லித்தழை- சிறிது
18. உப்பு- தேவையான அளவு
19. எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியைச் சிறிதாகவும், முள்ளங்கியை வட்டமாகவும் நறுக்கி வைக்கவும்.
2. புளியை ஊறவைத்துச் சாறு எடுத்து வைக்கவும்.
3. துவரம் பருப்பை கழுவி மஞ்சள்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல்,வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் முள்ளங்கியைசேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் வதங்கிய பின் தக்காளி, சேர்த்து வதக்கவும்.
7. அதன் பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சாம்பார் தூள் சேர்த்துக் கிளறவும்.
8. பின்னர் அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
9. தண்ணீர் நன்கு கொதித்து வந்தவுடன் வேகவைத்து வைத்திருக்கும் பருப்பை சேர்க்கவும்.
10. ஒரு கொதி வந்தவுடன் புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
11. மல்லித்தழை தூவி அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.