இட்லி சாம்பார்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு - 25 கிராம்
2. பாசிப்பருப்பு - 25 கிராம்
3. கடலைப்பருப்பு - 25 கிராம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
6. சின்ன வெங்காயம் - 4 எண்ணம்
7. சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
9. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. மல்லித்தழை - சிறிது
தாளிக்க
12. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
15. சின்ன வெங்காயம் - 5 எண்ணம்
16. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. அடுப்பில் கடாயை வைத்துச் சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
2. ஆறிய பிறகு, அதை மிக்சியில் திரித்துக் கொள்ளவும்.
3. திரித்து வைத்துள்ள பொடியைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. தக்காளியைச் சிறியதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கிலும் வெட்டி வைக்கவும்.
5. அடுப்பில் அதே கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
6. பிறகு அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
7. தக்காளி நன்கு வதங்கியதும், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும்.
8. பிறகு அதில் உப்பு, தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
9. பிறகு கலக்கி வைத்துள்ள பொடியைச் சேர்த்து மல்லித்தழையும் சேர்த்து கொதிக்கவிடாமல் இறக்கி விடவும்.
10. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துத் தாளித்துக் குழம்பில் சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.