வெங்காய சாம்பார்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 4 எண்ணம்
2. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
3. பூண்டு - 2 பல்
4. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
7. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
8. கடுகு, உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
9. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. தக்காளியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2. மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
3. வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
5. பின்பு அதில், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
6. வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும்.
7. அதில் நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
9. எண்ணெய் பிரிந்து வந்ததும், மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.