பருப்பு ரசம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பருப்பு தண்ணீர் - 1 கப் (50 கிராம் துவரம் பருப்பை வேக வைத்து அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்)
2. தக்காளி - 2 எண்ணம்
3. புளி - நெல்லிக்காய் அளவு
4. மிளகு - 1/2 தேக்கரண்டி
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. பூண்டு - 5 பற்கள்
7. மிளகாய் - 6 எண்ணம்
8. மல்லித்தழை - சிறிது
9. கறிவேப்பிலை - சிறிது
10. கடுகு - 1/2 தேக்கரண்டி
11. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
12. உளுத்தம்பருப்பு - 3/4 தேக்கரண்டி
13. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
14. எண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. புளியை அரை மணி நேரம் ஊற வைத்து, நன்கு கரைத்துக் கொள்ளவும்.
2. மிளகு, சீரகம், பூண்டு ஆகிய மூன்றையும் மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
3. தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
5. அதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
6. பின்னர் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
7. ஒரு கொதி வந்ததும் பருப்புத் தண்ணீரை ஊற்றி, நுரை கூடி வரும் போது கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.