பீர்க்கங்காய் சாம்பார்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பீர்க்கங்காய் - 1 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. துவரம் பருப்பு - 1 கப்
5. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
6. சாம்பார் பவுடர் - 3 மேசைக்கரண்டி
7. புளி - 1 நெல்லிக்காய் அளவு
8. உப்பு - தேவையான அளவு
9. மல்லித்தழை - சிறிது
10. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
தாளிக்க:
11. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
12. கடுகு - 1 தேக்கரண்டி
13. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
14. சீரகம் - 1 தேக்கரண்டி
15. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
16. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
17. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. பீர்க்கங்காயினைத் தோலுரித்து, துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு குக்கரில் துவரம் பருப்பைக் கழுவிப் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பீர்க்கங்காயைச் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும்.
5. வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, அத்துடன் சாம்பார் பவுடரைச் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
6. அதன் பின்பு, புளிச்சாறு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிக் கொள்ளவும்.
7. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.
8. தாளிசத்தைச் சாம்பாரில் ஊற்றி கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.