மொச்சை கத்திரிக்காய் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மொச்சை -1/2 கப்
2. கத்திரிக்காய் (பிஞ்சு) - 5 எண்ணம்
3. பூண்டு - 7 பல்
4. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
5. கறிவேப்பிலை - சிறிது
6. தக்காளி - 1 எண்ணம்
7. மஞ்சள் தூள் -1 சிட்டிகை
8. புளிச்சாறு -2 மேசைக்கரண்டி
9. சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
11. எண்ணெய் - தேவையான அளவு
12. சோம்பு -1 தேக்கரண்டி
13. சீரகம் -1/2 தேக்கரண்டி
14. வெந்தயம் -1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. மொச்சையை 6 மணிநேரம் ஊற வைக்கவும் அதன் பிறகு, குக்கரில் 2 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. கத்திரிக்காயை நான்காக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
3. வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிக்கக் கொடுத்தவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
5. கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடம் வதக்கவும், பின்னர் வெட்டி வைத்திருக்கும் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் பொழுது, தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
7. பின்னர் புளிச்சாறு, மிளகாய்த்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
8. கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
9. குழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.