மசாலா ரசம்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 3 எண்ணம்
2. புளிக்கரைசல் - 50 மி.லி
3. வேகவைத்த பருப்பு தண்ணீர் - 1/4 கப்
4. ரசப்பொடி - 1 தேக்கரண்டி
5. வெல்லத்தூள் - 1/4 தேக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
9. பெருங்காயத்தூள் - சிறிது
10. கறிவேப்பிலை - சிறிது
11. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்
12. பூண்டு - 4 பற்கள்
13. மல்லித்தழை - சிறிது
14. மிளகாய் - 2 எண்ணம்
15. உப்பு - தேவையான அளவு
16. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளியை வேக வைத்து எடுத்து வைக்கவும்.
2. பருப்பு வேக வைத்த தண்ணீர், புளிக்கரைசல், வேக வைத்த தக்காளி சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
3. சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு தட்டிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பின்னர் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
6. அதில் பருப்புத் தண்ணீர், தக்காளி, புளி கரைசல் சேர்த்த கலவையினை ஊற்றி நன்கு கலந்து விடவும்.
7. அதனுடன் ரசப்பொடி, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், வெல்லத்தூள் சேர்த்து மல்லித் தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.