உருளைக்கிழங்கு காலிபிளவர் குருமா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சிறிய உருளைக் கிழங்கு - 2 எண்ணம்
2. காலிபிளவர் - 1 கோப்பை
3. பீன்ஸ் - 3 எண்ணம்
4. சிறிய வெங்காயம் - 10 எண்ணம்
5. தக்காளி - 2 எண்ணம்
6. பச்சைமிளகாய் - 2 எண்ணம்
7. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 1/4 மூடி
9. பொட்டுல்கடலை - 2 தேக்கரண்டி
10. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
11. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
12. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
13. சோம்புத் தூள் - 2 தேக்கரண்டி
14. கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
15. பட்டை - சிறிய துண்டு
16. கிராம்பு - 3 எண்ணம்
17. உப்பு - தேவையான அளவு
18. எண்ணெய் - தேவையான அளவு
19. கருவேப்பிலை - சிறிது
20. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. காலிபிளவரைச் சுத்தம் செய்து மிதமான தண்ணீர் சூட்டில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் கலந்து வைக்கவும்.
2. காய்கறிகளைச் சிறிய துண்டுகளாகவும், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.
3. காலிபிளவர் ஊற வைத்தத் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
4. தேங்காஉத் துருவல், பொட்டு கடலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை கிராம்பு சேர்த்துப் பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
7. பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் சோம்புத் தூள் சேர்த்து வதக்கவும்.
8. அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேகவிடவும்.
9. காய்கறிகள் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து கரம் மசாலாத் தூள் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
10. அதன் பிறகு இறக்கி, மல்லித்தழை கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்கு இக்குருமா மிகவும் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.