பட்டாணி குருமா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சைக் கொள்ளு - 4 தேக்கரண்டி
2. தனியா - 2 தேக்கரண்டி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. மிளகு - 1 தேக்கரண்டி
5. தக்காளி - 1 எண்ணம்
6. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
7. மிளகாய் வற்ற்ல் - 4 எண்ணம்
8. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
9. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
10. பூண்டு - 10 பற்கள்
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
14. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
2. மல்லித்தழை, பச்சை மிளகாயை அரைத்து வைக்கவும்.
3. தக்காளியில் 2 மட்டும் எடுத்து தனியாக அரைத்துக் கொள்ளவும்.
4. மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
5. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, சோம்பு, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.
6. பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
8. வெட்டி நறுக்கி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
9. தக்காளி குழைய வதங்கிய பின்னர், முன்பு அரைத்து வைத்த தக்காளி சேர்க்கவும்.
10. அரைத்து வைத்துள்ள மல்லி விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
11. வேகவைத்த பச்சைப்பட்டாணி போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
12. தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு வந்த பிறகு தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டுக் கீழே இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.