கத்தரிக்காய் சாம்பார்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 250 கிராம்
2. துவரம்பருப்பு - 100 கிராம்
3. மல்லி - 2 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
5. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
6. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
7. எண்ணெய் - 1 தேக்கரண்டி
8. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
9. கடுகு - 1/4 தேக்கரண்டி
10. தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
3. புளி – எலுமிச்சை அளவு
4. மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
5. பெருங்காயத்தூள் - சிறிது
6. கருவேப்பிலை – சிறிது
7. கடுகு, உளுந்து – 1/2 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. புளியை ஒரு கிண்ணம் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றிக் காய்ந்ததும் அதில் மல்லி, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கடுகு மற்றும் தேங்காய் துருவல் போட்டு வறுத்து ஆறிய பின் அரைத்து வைக்கவும்.
3. துவரம்பருப்பை குழைய வேகவைத்து மசித்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலில் சிறிது உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.
5. ஒரு கொதி வந்ததும் கத்தரிக்காயை அதில் போட்டு பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
6. கத்தரிக்காய் வெந்ததும் அதில் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
7. நன்றாகக் கொதித்ததும் மசித்து வைத்த துவரம்பருப்பைச் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
8. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.