இட்லி சாம்பார்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 50 கிராம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
6. சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
9. பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
13. கறிவேப்பில்லை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில் 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
3. அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
4. பின்னர் அதில் 1 1/2 கப் தண்ணிர் சேர்த்து மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், வெந்தயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
5. கடைசியாக வேகவைத்த பருப்பை போட்டுக் கொதிக்க வைக்கவும்.
6. கொதித்து வந்ததும் இறக்கி வைத்து மல்லித்தழையைத் தூவிவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.