பச்சைமிளகாய் சாம்பார்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 1/2 கப்
2. முருங்கைகாய் - 2 எண்ணம்
3. கத்தரிக்காய் - 2 எண்ணம்
4. அவரைக்காய் - 3 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 10 எண்ணம்
6. சின்ன வெங்காயம் - 12 எண்ணம்
7. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
8. தேங்காய்த் துருவல் - 3/4 கப்
9. புளி - நெல்லிக்காய் அளவு
10. சீரகம் - 1 தேக்கரண்டி
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
13. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
14. தக்காளி - 1 எண்ணம்
15. கறிவேப்பிலை - சிறிது
16. எண்ணெய் - தேவையான அளவு
17. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கத்தரிக்காய், முருங்கைகாய், அவரைக்காயை நறுக்கிக் கொள்ளவும்.
2. பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், சின்ன வெங்காயத்தை சிறிதாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. புளியை அரை கப் தண்ணீர் ஊற்றிச் சற்றுக் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பருப்பைப் போட்டு வேக விடவும்.
5. தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
6. பருப்பு வெந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கள் மற்றும் சின்ன வெங்காயம் போட்டு வேகவிடவும்.
7. கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, உப்பையும் சேர்த்து வேகவிடவும்.
8. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் போட்டுத் தாளிக்கவும்.
9. தாளிசத்துடன் பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும்.
10. வதக்கியவற்றை கொதிக்கும் குழம்பில் சேர்த்துச் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
11. அதன் பிறகு, அரைத்து வைத்துள்ள தேங்காய், பச்சை மிளகாய் விழுதினைச் சாம்பாரில் சேர்த்துச் சிறிது நேரம் மூடி வைத்து வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.