வெண்டைக்காய் மோர்க்குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. தயிர் – 2 கப்
2. வெண்டைக்காய் – 250 கிராம்
3. அரிசி – 1 மேசைக்கரண்டி
4. துவரம்பருப்பு – 1 தேக்கரண்டி
5. சிறிய வெங்காயம் – 1எண்ணம்
6. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
9. வெங்காயம் – 1 எண்ணம்
10. மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
11. சீரகம் – 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை – சிறிது
13. மஞ்சள் தூள் – சிறிது
14. உப்பு – தேவையான அளவு
15. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. அரிசி, துவரம்பருப்பு, சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. தயிரைத் தேவையான நீர் சேர்த்து மோராக்கிக் கொள்ளவும்.
3. வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
6. பிறகு, அதில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
7. ஓரளவிற்கு வெந்த பிறகு அரைத்து வைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
8. காய் நன்கு வெந்ததும், மோரை அதில் கலந்து, ஐந்து நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.
9. கடைசியாகச் சிறிது கறிவேப்பிலை போட்டு, இறக்கி வைத்து ஆற வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.