காளான் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 1/4 கிலோ
2. தக்காளி -1 எண்ணம்
3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
5. மிளகாய் வத்தல் - 2 எண்ணம்
6. கொத்தமல்லி - 3 மேசைக்கரண்டி
7. சீரகம் - 1 மேசைக்கரண்டி
8. மிளகு - 1/2 தேக்கரண்டி
9. மல்லித்தழை - சிறிது
10. இஞ்சி - சிறிது
11. பூண்டு - 3 பற்கள்
அரைக்க:
12. தேங்காய்த் துருவல் - 50 கிராம்
13. சின்ன வெங்காயம் - 6 எண்ணம்
தாளிக்க:
14. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
15. பட்டை - சிறிது
16. கிராம்பு - 3 எண்ணம்
17. சோம்பு - 1 தேக்கரண்டி
18. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்.
செய்முறை:
1. முதலில் காளானை நன்றாகக் கழுவி நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல், மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் இலேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
4. ஆறிய பின் மல்லித்தழையும் சேர்த்து அரைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
5. தேங்காய்த்துருவல், சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து அரைத்து வைக்கவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
8. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியைச் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
9. தக்காளி வதங்கியதும் காளான், அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு இவற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
10. மசாலா வாடை நீங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
11. குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.