மொச்சைக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காய்ந்த மொச்சை – 150 கிராம்
2. புளி – 50 கிராம்
3. சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் – 2 தேக்கரண்டி
5. கடுகு - 1/4 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
7. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
8. கறிவேப்பிலை - சிறிது
9. மல்லித்தழை – சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. முதல் நாள் இரவிலேயே மொச்சையை ஊற வைக்கவும்.
2. புளியை ஊற வைத்துக் கரைத்து வைக்கவும்.
3. தேங்காய்த் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த மொச்சையைப் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்துத் தண்ணீரை வடிக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
6. தாளிசத்துடன் வேக வைத்த மொச்சையில் பாதியளவைச் சேர்க்கவும்.
7. பிறகு, அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
8. அதனுடன் மீதியிருக்கும் மொச்சை, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது சேர்த்துக் கொதிக்க விடவும்.
9. அனைத்தும் ஒன்றாகக் கலந்து நன்கு கொதித்ததும், நறுக்கி வைத்திருக்கும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.