உடுப்பி சாம்பார்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 1/4 கப்
2. புளி - 1 பெரிய நெல்லிக்காயளவு
3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
4. கத்திரிக்காய் - 1 எண்ணம்
5. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்
6. வெல்லத்தூள் - 1 தேக்கரண்டி
வறுத்தரைக்க
7. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
8. மல்லி - 1 மேசைக்கரண்டி
9. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
10. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிது
12. தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி
தாளிக்க
13. நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
14. கடுகு - 1/2 தேக்கரண்டி
15. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
16. பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
17. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. துவரம் பருப்பை நன்கு கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. புளியை ஊற வைத்து, கரைத்துப் புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் கழுவிச் சுத்தம் செய்த பருப்பைப் போட்டு, அதனுடன் ஒரு கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து குழைய வேகவைத்து எடுத்து வைக்கவும்.
5. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகாய், மல்லி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
6. அதனுடன் கடைசியாகக் கறிவேப்பிலையைப் போட்டு சற்று வதக்கி விடவும்.
7. பின்னர் அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுக்கவும்.
8. வறுத்த பொருட்கள் எல்லவாற்றையும் ஒன்றாகப் போட்டுச் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
9. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு போட்டு, வெடிக்க ஆரம்பித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
10. அதனுடன் காய்கறித் துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி, காய் மூழ்கும் அளவிற்குத் தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து வேக விடவும்.
11. காய் நன்றாக வெந்ததும் அதில் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் உப்பு, வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
12. புளியின் பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்துள்ள பருப்பு, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு, தேவைப்பட்டால், மேலும் சிறிது தண்ணீரையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.