பருப்பு உருண்டைக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
பருப்பு உருண்டை
1. கடலைப் பருப்பு - 1/2 கப்
2. துவரம் பருப்பு - 1/2 கப்
3. சோம்பு - 1/2 தேக்கரண்டி
4. சின்னவெங்காயம் - 10 எண்ணம்
5. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
6. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
7. உப்பு - சிறிது
குழம்பு
8. புளி - எலுமிச்சையளவு
9. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
10. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
11. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
12. தக்காளி - 1 எண்ணம்
13. சின்னவெங்காயம் - 8 எண்ணம்
14. சோம்பு - 1 தேக்கரண்டி
15. கடுகு - 1 தேக்கரண்டி
16. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
17. உப்பு - தேவையான அளவு
18. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. கடலைப் பருப்பு, துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின் தண்ணீரை வடிகட்டி விடவும்.
2. ஊற வைத்த பருப்புடன் உப்பு, மிளகாய் வற்றல், சோம்பு சேர்த்துச் சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயத்தைப் பொடி பொடியாக நறுக்கி அரைத்த பருப்புடன் சேர்க்கவும்.
4. அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
5. புளியைக் கரைத்து வடிகட்டி மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வைக்கவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்துத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் குழம்புக்காகக் கரைத்த கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
8. பின் உருட்டி வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளைக் கொதிக்கும் குழம்பில் போட்டு அந்த உருண்டைகள் கரையாமல் வேகவைத்து இறக்கவும்.
9. இறக்கியபின்பு அதில் மல்லித்தழை தூவிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.