நெல்லி ரசம்
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. முழு நெல்லிக்காய் - 10 எண்ணம்
2. வெற்றிலை - 20 எண்ணம்
3. மல்லித்தழை - சிறிது
4. கறிவேப்பிலை - சிறிது
5. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
6. பூண்டு - 6 பல்
7. வால் மிளகு - 1 தேக்கரண்டி
8. சீரகம் - 1 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
10. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. நெல்லிக்காயை விதை நீக்கிச் சாறு எடுக்கவும்.
2. கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும்.
4. பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
5. நன்றாக வதங்கியதும், அதை ஆறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
6. ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.
7. அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
8. மிதமான நெருப்பில், கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
குறிப்பு: இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைக்க முடியும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.