காரக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 4 எண்ணம்
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
6. கடுகு - 1தேக்கரண்டி
7. புளி – சிறிய எலுமிச்சை அளவு
8. மல்லித் தூள் - 4 தேக்கரண்டி
9. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
11. நல்லெண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
13. கறிவேப்பில்லை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. கத்தரிகாயை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. புளியினை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும் .
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு தாளித்து, பின் வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
5. அந்தத் தாளிசத்துடன், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
6. அதனுடன் நறுக்கிய தக்காளி, கத்தரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
7. பின்பு அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
8. அதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொதிக்க விடவும்.
9. கொதித்தவுடன் மிதமான நெருப்பில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.
10. கடைசியாக மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.