அரிசி வகைகள் ஒவ்வொன்றுக்கும் மருத்துவ பலன்கள் இருக்கின்றன. இங்கு சில அரிசி வகைகளுக்கான மருத்துவ பலன்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
கருப்புக் கவுணி அரிசி
அக்கால ராஜ வம்சத்தினரின் தெரிவு. நீரிழிவு, புற்றுநோய்க்கு அருமருந்து இந்த அரிசி.
மாப்பிள்ளைச் சம்பா அரிசி
நரம்பு, உடல் வலுவாகும், ஆண்மை கூடும்.
பூங்கார் அரிசி
பெண்களுக்குப் பொருத்தமானது. சுகப்பிரசவத்துக்கும், தாய்ப்பால் ஊறவும் மகத்தானது. குழியடிச்சான் அரிசியும் தாய்ப்பால் ஊறச் சிறந்தது.
காட்டுயானம் அரிசி
நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாகும்.
கருத்தக்கார் அரிசி
மூலநோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை விரட்ட வல்லவை.
காலாநமக் அரிசி
புத்தர் பெருமான் உண்டது இந்த அரிசி என்பார்கள். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சீராகும்.
மூங்கில் அரிசி
மூட்டு வலி முழங்கால் வலிக்கு உகந்தது
அறுபதாம் குறுவை அரிசி
எலும்புப் பிரச்சனைகளுக்கு நிவாரணி
இலுப்பைப் பூ சம்பா அரிசி
பக்க வாதத்திற்கு அருமருந்தாகவும் கால், கை வலிகளுக்கு நிவாரணமுமாகும்.
தங்கச் சம்பா அரிசி
பல், இதயம் வலுவாகும்.
கருங்குறுவை அரிசி
உடல் வலுவை மீட்டுக் கொடுக்கும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
கருடன் சம்பா அரிசி
இரத்தம், உடல், மனம் – மூன்றையும் சுத்தமாக்கும்.
கார் அரிசி
தோல் நோய் சரியாகும்.
குடை வாழை அரிசி
குடல் சுத்தமாகும்.
கிச்சிலி சம்பா அரிசி
இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து செறிந்தது.
நீலம் சம்பா அரிசி
இரத்தச் சோகை நீக்கும்.
சீரகச் சம்பா அரிசி
உடல் அழகைக் கூட்டுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
தூய மல்லி அரிசி
உடல் உள் உறுப்புகளை வலுவாக்கும்.
சன்னா அரிசி
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
பிசினி அரிசி
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
சூரக்குறுவை அரிசி
உடல் சிறுத்து அழகு கூடும்.
வாலான் சம்பா அரிசி
பெண்களின் இடுப்பு வலுப்பெற்று சுகப்பிரசவத்துக்கு உதவும். இடை மெலிந்து அழகு கூடும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
வாடன் சம்பா அரிசி
அமைதியான தூக்கம் வரும்.
இந்த அரிசி வகைகள், தற்போது அரிதாகிப் போய்க் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இவ்வகை அரிசிகள் பயிர் செய்யப்படுகின்றன. எனவே, இந்த அரிசி வகைகளைத் தேடிக் கண்டறிந்துதான் வாங்கிச் சாப்பிட வேண்டும்.