முருங்கைக் கீரை மற்றும் முருங்கைக்காய் போன்றவை மனிதனுக்குப் பல்வேறு மருத்துவப் பயன்களை அளிக்கிறது.
* 100 கிராம் முருங்கை இலையில் 92 கலோரி உள்ளது. இதில், புரதம் – 6.7%, கொழுப்பு – 1.7%, தாதுக்கள் – 2.3% மற்றும் கார்போஹைட்ரேட்கள் – 12.5% உள்ளன.
* முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
* முருங்கைகீரையில் இரும்புச் சத்து (Iron), சுண்ணாம்புச்சத்து (Calcium) குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
* முருங்கைக் கீரையை வேக வைத்து, அதன் சாற்றைக் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.
* முருங்கைக் காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் (Sperm) பெருகும்.
* முருங்கை இலையை உருவி, காம்புகளை நறுக்கி விட்டுப் பின் மிளகு ரசம் வைத்துச் சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும்.
* முருங்கை இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும்.
* கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
* முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
* வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.
* முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
* கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும்.
* முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
* ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது.
* ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும்.
* முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.