* பால் பாத்திரத்தைத் தண்ணீரில் நனைத்து விட்டு, பின்னர் பாலைக் காய்ச்சினால் பால் பாத்திரம் அடிபிடிப்பதைத் தவிர்க்கலாம்.
* பால் காய்ச்சும் போது, அதனுடன் இரண்டு ஏலக்காயை சேர்த்துக் காய்ச்சினால் நீண்ட நேரத்திற்குப் பால் புளிக்காமல் இருக்கும்.
* வேகவைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கு கெடாமல் இருப்பதற்கு, சில துளிகள் வினிகரை தெளித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.
* ஒரு தேக்கரண்டி வினிகரைச் சேர்த்து, முட்டையை வேக வைத்தால் முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
* கீரை கடைசல் செய்யும்போது, கீரையின் நிறம் மாறாமல் இருக்க, சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.
* பருப்பு வேக வைக்கும் போது, சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
* முட்டைத்தோல் எளிதாக உரிக்க, முட்டையை வேக வைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
* பால் பாயாசம் செய்யும் போது, சிறிதளவு பாதாம் பருப்பை அரைத்துச் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
* முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
* முருங்கைக்காய் அதிகமாக இருந்தால், துண்டுகளாக நறுக்கி கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.
* காய்கறிகளை வாங்கி வந்ததும் தண்ணீரில் அலசி விட்டு, பிறகு குளிர்பதனப்பெட்டியில் எடுத்து வைத்தால், அவை வெகு நாட்கள் வரை பசுமையாக இருக்கும்.
* மிக்ஸியில் மாவு அரைக்கும் போது, அது சூடாகி விடாமல் தவிர்க்க, மாவில் சிறிது ஐஸ் வாட்டர் கலந்து அரைக்கலாம்.
* ஊறுகாய்களை கண்ணாடி பாட்டில், பீங்கான் ஜாடி, கல் சட்டிகளில் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும். எவர்சில்வர், பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கக் கூடாது. ஊறுகாயும் கெட்டு, பாத்திரங்களும் கெட்டுவிடும்.
* தேங்காய் பர்பி செய்யும் போது, சர்க்கரையைப் பொடித்து சேர்த்தால் வெண்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
* பூந்தி செய்யும் போது, சல்லடையில் மாவை வாணலிக்கு அருகில் வைத்த தேய்த்தால் முத்து முத்தாக விழும்.
* முந்திரிப்பருப்பு போட வேண்டிய இடங்களில் எல்லாம் வேர்க்கடலையை பயன்படுத்தினால் சுவை வித்தியாசமாக இருப்பதோடு சத்தும் கூடும்.
* குடிக்கும் காபியில் கொஞ்சம் சுக்குப் பொடியைச் சேர்த்தால், சுவை வித்தியாசமாக இருப்பதோடு குளிர்காலத்தில் உடலுக்கு மிகவும் நல்லது.
* புளிக்குப் பதிலாக எலுமிச்சை பழச்சாற்றை பயன்படுத்தினால் புளியால் வரும் கெடுதல் நீங்கிவிடும்.