1. ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
2. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலைச் சீவிவிட்டுக் கொஞ்சம் தட்டித் தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
3. காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
4. பச்சை மிளகாயைக் காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
5. தோசை சுடும் போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு தோசை வராமல் இருந்தால், அதற்குக் கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டுத் தோசை சுட்டால் நன்றாக வரும்.
6. தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.
7. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும் போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டுத் தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.
8. இட்லி கெட்டியாக இருந்தால், நாலு பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப் பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
9. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவைத் தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.
10. முந்திரிப் பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.
11. அரிசி களைந்த இரண்டாவது கழுநீரைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.
12. மிளகாய்வற்றலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரைத் தேக்கரண்டி உப்பைச் சேர்த்தால் நெடி வராது.
13. துவரம்பருப்பை வேக வைக்கும் போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.
14. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.
15. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதைத் தவிர்க்கலாம்.
16. தர்பூசனித் தோலைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய்ப் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.
17. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு, காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.
18. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியாக இருக்கும்.
19. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
20. எலுமிச்சைச் சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காயத் துருவலைச் சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.