கோழிக் குருமா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி - 1/2 கிலோ
2. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
3. நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 6 எண்ணம்
5. தக்காளி - 1 எண்ணம்
6. இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
7. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
9. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
10. சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
11. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
12. தயிர் - அரை கப்
13. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1தேக்கரண்டி
14. மல்லித்தழை - சிறிது
15. புதினா இலை - சிறிது
16. உப்பு - தேவையான அளவு
அரைக்க:
17. தேங்காய்த்துருவல் - 4 மேசைக்கரண்டி
18. கசகசா - 1 தேக்கரண்டி
19. முந்திரி பருப்பு - 8 எண்ணம்
செய்முறை:
1. கோழிக்கறியை நன்கு சுத்தம் செய்து நன்கு தண்ணீர் விட்டு அலசி எடுக்கவும். பின்னர் தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் போட்டு அதில் கோழிக்கறியை அலசி எடுத்து வைக்கவும்.
2. கோழிக்கறித் துண்டுகளை தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. அதில் இஞ்சி, பூண்டு, கரம் மசாலா சேர்க்கவும்.
5. குறைந்த அளவு நெருப்பில் மீண்டும் வதக்கவும், கீறிய பச்சை மிளகாய் நறுக்கிய புதினா, மல்லி இலை, நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
6. ஊற வைத்த கோழிக்கறியைச் சேர்த்துப் பிரட்டி விடவும்.
7. மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மிளகுத்தூள் வகைகளைத் தனித்தனியாகச் சேர்க்கவும்.
8. தேவையான உப்பினைச் சேர்க்கவும்.
9. 1 கப் தண்ணீர் சேர்த்துப் பதினைந்து நிமிடம் வரை வேகவிடவும். (குக்கர் பயன்படுத்துபவர்கள் மூன்று விசில் சத்தம் வரை வேகவிடலாம்)
10. கோழிக்கறி வெந்த பின்பு அரைத்த தேங்காய் முந்திரி கசகசா விழுது சேர்க்கவும். அத்துடன் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
11. நன்கு கொதித்த பிறகு மிதமான நெருப்பில் கொதிக்க விடவும். அதில் எண்ணெய் மேலே வரும்.
12. அதன் பிறகு பாத்திரத்தை இறக்கி வைத்து நறுக்கிய மல்லி, புதினா இலையினை மேலாகச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.